கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தால், தினமும் இந்த ஒரு காரியத்தை செய்த பின் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். வீட்டில் தன வசியம் ஏற்பட்டு கோடீஸ்வர யோகம் தானாக உங்களைத் தேடி வரும்.

Panam sera manthiram
- Advertisement -

பணம் பத்தும் செய்யும் என்று சொல்வார்கள். இதற்கு இணங்க பணத்தின் இன்றியமையாமை நம் வாழ்க்கையில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பணம் இல்லாத வாழ்க்கையை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடிவதில்லை. அப்படி சம்பாதிக்கும் பணத்தை எப்போதும் நம் கைவசம் வைத்துக் கொண்டு இருப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இந்த பதிவில் நம் வீட்டில் இருக்கும் செல்வத்தை நம்மிடமே தக்க வைத்துக் கொள்வதற்கும், தன வசியத்தை ஏற்படுத்தவும் என்ன செய்ய வேண்டும் என்று தான் ஆன்மீகம் குறித்த இந்த் பதிவில் பார்க்கப் போகிறோம்.

வீட்டில் தன வசியம் ஏற்பட மந்திரம்
எந்த வீட்டில் மகாலட்சுமி மற்றும் குபேரனின் வாசம் இருக்கிறதோ அந்த வீட்டில் தன வசியத்திற்கு எந்த வித குறைபாடும் இருக்காது. அப்படிப்பட்ட மகாலட்சுமியும், குபேரரும் நம்மிடமே இருப்பதற்கு நம் வீட்டில் அன்றாடம் சில விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நாம் தினமும் செய்து வர நம்முடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணம் நமக்கு வருவதோடு, நம் வீட்டில் இருக்கக் கூடிய செல்வங்கள் எந்த குறையும் இன்றி நிறைவாக இருக்கும்.

- Advertisement -

தினமும் நம் வீட்டை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பணம் மற்றும் நகை இருக்கும் இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சுத்தம் இருக்கும் இடத்தில் தான் மகாலட்சுமி வாசம் செய்வாள். வீட்டில் தினமும் நெய் விளக்கேற்றி தூப தீபம் காட்ட வேண்டும். வாசனை மிகுந்த வீட்டில் மகாலட்சுமியின் வாசம் கண்டிப்பாக இருக்கும்.

விநாயகரை வணங்கிய பிறகு நம் குலதெய்வத்தை மனதார நினைத்து விட்டு, பணம் மற்றும் நகை வைத்திருக்கும் இடத்தில் “தன வசிய சிவாய வசிய ஸ்வாஹா” என்று 108 முறை மனதிற்குள் கூறி மல்லிகை பூவை அங்கு வைக்க வேண்டும். அத்துடன் சிறிது ஏலக்காய், சிறிது பச்சை கற்பூரத்தையும் வைக்க வேண்டும். மல்லிகை பூவை நாம் தினமும் மாற்ற வேண்டும். பச்சை கற்பூரம் மற்றும் ஏலக்காயை பத்து நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். பழைய ஏலக்காயை இனிப்புகள் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

அதே போல் பச்சை கற்பூரம் கரையாமல் இருந்தால் அதை தூபம் காட்டும் பொழுது உபயோகித்து கொள்ளலாம். பிறகு “ஓம் ஐஸ்வரேஸ்வராய நமஹ” என்று மனதிற்குள் 108 முறை தினமும் கூற வேண்டும். இந்த வழிபாட்டு முறையை நாம் அமாவாசை, பௌர்ணமி, பஞ்சமி போன்ற நாட்களில் ஆரம்பிக்க வேண்டும். நமக்கு தினமும் பணம் வர வேண்டும் என்ற ஆசை இருக்கும் பட்சத்தில் நாம் தினமும் இதை செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ஆடி மாதம் முடிவதற்குள் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு இந்த 1 பொருளை தானமாக வாங்கி கொடுத்து விட்டால் போதும். வீட்டில் எல்லாம் இன்பமாக இனிமையாக நடக்கும்.

இந்த முறையில் நாம் தினமும் செய்து வர கடவுளின் அருளால் நமக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் நம் வீட்டில் இருக்கக்கூடிய செல்வங்களுக்கு எந்தவித குறைகளும் இருக்காது, மென்மேலும் அதிகரித்துக் கொண்டே தான் செல்லும்.

- Advertisement -