மனதிற்கு பிடித்த வேலை கிடைக்க வேண்டுமா? இதோ முன்னோர்கள் சொன்ன எளிய பரிகாரம்

vilaku-lemon
- Advertisement -

வேலை கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் பிடித்த வேலை கிடைப்பது என்பது அரிது. அப்படி ஒரு வாய்ப்பு ஒரு சிலருக்கு தான் அமையும். நமக்கு பிடித்தமான வேலை கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தாலும் அதில் முன்னேற்றமும், வெற்றியும் கிடைக்க நாம் பெரிதும் போராட வேண்டி உள்ளது. இதனால் நம்மில் பலரும் நமக்கு கிடைத்தது இவ்வளவு தான் என்று மனதில் நினைத்துக் கொண்டு கிடைத்த வேலையை செய்ய தொடங்கி விடுகிறோம்.

அதற்கான முயற்சிகளை செய்வதோடு நாம் சிறு சிறு பரிகாரங்களையும் செய்தால் நிச்சயமாக நம்மால் நமக்கு பிடித்தமான வேலையை செய்ய முடியும். இன்றைய அறிவியல் காலக்கட்டத்தில் எதற்கெடுத்தாலும் ஆதாரத்தை தேடுகிறோமே அன்றி அதனை ஒரு முறையாவது செய்துதான் பார்ப்போமே என்ற மெய்ஞான சிந்தனை பலருக்கும் வருவதில்லை. நம் முன்னோர்கள் நாம் நலமாகவும் வளமாகவும் வாழத்தான் வழி கூறி இருக்கிறார்கள்.

- Advertisement -

சரி நாம் இப்போது பதிவிற்குள் செல்வோம். முதலில் பிடித்த வேலை கிடைக்க வேண்டும் என்றால் அதைத் தேடுவதற்கான முயற்சியும் அதற்கான வழிமுறைகளையும் நாம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். ஏதோ வேலை கிடைத்தது என்று நாம் அத்தோடு நின்று விடாமல் இந்த முயற்சியை தொடர்ந்து செய்து கொண்டே இந்த பரிகாரத்தை செய்யலாம். இதற்கு பெரிதாக ஒரு செலவும் இல்லை, அதே நேரத்தில் இதற்காக தனியாக மெனக்கிடவும் தேவையில்லை. மிக மிக எளிமையாக அதே நேரத்தில் அனைவராலும் செய்யக்கூடிய ஒரு சாதாரண பரிகாரம் தான்.

இதற்கு முதலில் ஒரு நல்ல பெரிய எலுமிச்சை பழம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் பழம் நல்ல மஞ்சள் நிறத்திலும் எந்த கரும்புள்ளிகளும் இல்லாமலும் வாடாமல் நன்றாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது மட்டும் அவசியம். இந்த பரிகாரத்தை நம் வீட்டிலேயே தொடங்க வேண்டும். அதாவது நம் வீட்டின் வரவேற்பறையில் இந்த பழத்தை வைத்து அதை நான்கு துண்டுகளாக நறுக்க வேண்டும். முழுவதுமாக நறுக்கி விடக்கூடாது. அடியில் சிறிதளவு ஒட்டியிருக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் நறுக்கிய எலுமிச்சை பழத்தை கையில் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே நான்கு சந்து கூடும் இடம் அங்கு வர வேண்டும். பின் நான்கு துண்டுகளையும் நான்கு திசை நோக்கி வீச வேண்டும். இதற்கு நாம் இந்த திசையில் தான் இருக்க வேண்டும் என்ற எந்த ஒரு நிபந்தனையும் கிடையாது. ஒன்றே ஒன்றுதான் இதை செய்யும்போது அருகில் யாரும் இருக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். திசைகளுக்கு ஒன்றாக வீசியப் பின் திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்து விடவும். (இந்த எலுமிச்சம் பழத்தினை தூக்கி வீசும் போது உங்கள் மனதிற்குள் மனதிற்கு பிடித்த நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று மட்டும் பிரபஞ்சத்திடம் வேண்டிக் கொள்ளுங்கள்.)

இதை முடிந்த அளவு காலை 6 மணிக்கு முன்னும், இரவு இருட்டிய பிறகும் செய்தால் நல்லது. அப்பொழுது தான் ஆள் நடமாட்டம் என்பது இருக்காது. இது போன்று தொடர்ந்து 11 நாட்கள் செய்தால் போதுமானது. நிச்சயம் இதற்கான பலன் உங்களுக்கு கிடைக்கும். இந்த பரிகாரத்தை தொடங்குவதற்கு ஞாயிற்றுக்கிழமை உகந்த நாள். மற்ற நாட்களிலும் தொடங்கலாம் தவறு ஏதுமில்லை. இந்த பரிகாரத்தை முழுமையாக செய்து முடித்த உடனே உங்களால் மாற்றத்தை உணர முடியும். எதை செய்யும் போதும் முழு நம்பிக்கையுன் கடவுளை மனதார நினைத்தபடி செய்யும்போது இதற்கான பலன் நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -