இந்தப் பிள்ளையாரை வழிபாடு செய்தால் மனதிற்கு பிடித்த மன வாழ்க்கை அமையும். சீக்கிரமே விரும்பியவர்களின் கரம் பிடிக்க செய்ய வேண்டிய வழிபாடு.

pillaiyar5
- Advertisement -

மனதிற்கு பிடித்த பையன், மாப்பிள்ளையாக வரவேண்டும். மனதிற்கு பிடித்த பெண் மனைவியாக வரவேண்டும். இது நம்மில் பல பேரின் கனவாக இருக்கிறது. காதலிப்பவர்களுக்கு தான் இப்படிப்பட்ட கனவு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் பார்த்து நிச்சயிக்கப்படுபவர்களுக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். தனக்கு வரக்கூடிய மணமகனோ, மணமகளோ, நம்மை புரிந்து கொண்டு வாழ்க்கையின் இறுதி கட்டம் வரை, நம் கைகோர்த்து நம்முடன் வர வேண்டும் என்று நினைப்போம். நீங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் சரி, காதலிப்பவரை கரம் பிடிக்க வேண்டும் என்று நினைத்தாலும் சரி, அல்லது வீட்டில் பார்க்க கூடிய திருமண வாழ்க்கை உங்கள் மனதிற்கு பிடிக்கும் படி அமைய வேண்டும் என்று நினைத்தாலும் சரி, இந்த பிள்ளையாரை வழிபாடு செய்யுங்கள்.

பின் சொல்லக் கூடிய வழிபாட்டு முறையை பின்பற்றி இந்த பிள்ளையாரை வழிபாடு செய்து வந்தால், நீங்கள் நினைத்தபடி நிச்சயம் திருமணம் நடக்கும். அந்த திருமண வாழ்க்கை இனிமையானதாகவும் அமையும்.

- Advertisement -

விரும்பிய வாழ்க்கை துணை அமைய பிள்ளையார் வழிபாடு:
வேப்பமரத்தடி பிள்ளையாரை இதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அரச மரத்தடி பிள்ளையாரை கூட தேடி கண்டுபிடிக்கலாம். வேப்பமரத்தடி பிள்ளையாருக்கு எங்கே போவது. நிச்சயம் இருக்கும். கொஞ்சம் தேடிப் பார்த்தால் கண்டுபிடித்து விடலாம். சில இடங்களில் வேப்ப மரமும் அரச மரமும் சேர்ந்து கூட அதற்கு கீழே பிள்ளையார் வைத்திருப்பார்கள். அந்த இடத்திலும் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

வேப்ப மரத்தடி பிள்ளையாருக்கு இரண்டு செம்பருத்தி பூக்களை வைத்துவிட்டு, இரண்டு மண் அகல் விளக்குகளில், 5 கூட்டு எண்ணெய் சொல்லுவார்கள் அல்லவா, அந்த எண்ணெயை வாங்கி ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும்.

- Advertisement -

விளக்கு ஏற்றி வைத்துவிட்டு உங்கள் மனதில் இருக்கக்கூடிய விருப்பத்தை விநாயகரிடம் சொல்லிவிட்டு, அந்த வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து, பிள்ளையாரை 21 முறை வலம் வர வேண்டும். இந்த வழிபாட்டை திங்கட்கிழமை அன்று செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கண்விழித்த உடன் இந்த 2 எழுத்து மந்திரத்தை மட்டும் சொன்னால் போதும். கனவிலும் கூட உங்களுக்கு நடக்காத நல்லது அன்றைய நாள் நடந்து விடும்.

தொடர்ந்து 21 திங்கட்கிழமை இந்த வழிபாட்டை நீங்கள் செய்து முடித்து விட்டால், நீங்கள் விரும்பிய வாழ்க்கை நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். ஆண்கள் பெண்கள் இரண்டு பேரும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு வேலை பெற்றவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று நினைத்தால், நீங்களும் உங்களது பிள்ளைகளுக்காக இந்த பரிகாரத்தை செய்யலாம். தவறு கிடையாது. உங்களுடைய வீட்டில் உங்கள் மகனோ மகளோ இருந்தால் அவர்களை உங்களுடன் கூட்டிச் சென்று அவர்களுடைய கையால் விளக்கு ஏற்றி, பரிகாரத்தை செய்து அவர்களை இந்த பிள்ளையாரை 21 முறை வளம் பெற செய்வது இன்னும் சிறப்பான பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் ஆன்மீகம் சொன்ன இந்த வழிபாட்டை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -