மனத்திற்குக் கட்டளை – பாரதியார் கவிதை

Bharathiyar kavithai
- Advertisement -

பேயா யுழலுஞ் சிறுமனமே!
பேணா யென்சொல் இன் றுமுதல்
நீயா ஒன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்;
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடு வாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.
பாரதியார்

இதையும் படிக்கலாமே:
கடமை அறிவோம் – பாரதியார் கவிதை

- Advertisement -

பாரதியின் மீது பேரன்பு கொண்ட வயதானவர் ஒருவர் இந்த கவிதையை பாடலாக மாற்றி பாடியுள்ளார். அந்த பாடல் தான் மேலே இணைக்கப்பட்டுள்ளது.

English Overview:
Here we have Bharathiyar Kavithaigal – Manaththirku Kattalai.”Peyaai uzhalum siru maname lyrics in Tamil” is the first line of this Bharathiyar Padal.

- Advertisement -