மங்களம் உண்டாக, பொன் பொருள் சேர பரிகாரம்

amman5
- Advertisement -

மங்களம் என்ற வார்த்தையை கேட்ட உடனே நம்முடைய மனசு திருப்தி அடையும். வீட்டில் தொடர்ந்து சுப நிகழ்ச்சிகள் நடக்கவும், அந்த சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான பொன் பொருள் சேர்க்கையும் இருப்பதற்காக இந்த எளிமையான பரிகாரம், உங்களுக்கு உதவி செய்யும். ஒரு நல்லது நடந்தால் தானே குடும்பத்தில் இருப்பவர்களுக்கு சந்தோஷம் இருக்கும்.

நிறைய பணம் இருக்கு, ஆனா வீட்டில் இருக்கும் என்னுடைய பையனுக்கு நல்ல வரன் அமையவில்லை கஷ்டப்படுகின்றோம் என்றால் சந்தோஷம் எப்படி இருக்கும். கல்யாணம் ஆயாச்சு. 2 குழந்தை செல்வங்களும் இருக்கு. ஆனால் கையில் பணம் காசு இல்லை என்றால் எப்படி சந்தோஷம் இருக்கும். ஆகவே வீட்டில் சுப மங்கள காரியங்கள் நடக்கவும், கூடவே சேர்த்து பொன் பொருள் சேர்க்கை இருக்கவும் இந்த பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும்.

- Advertisement -

வீட்டில் மங்களம் உண்டாக பரிகாரம்

மங்களகரமான காரியத்தை நடத்திக் கொடுக்கும் மல்லிகைப்பூ, ஏகபோக சொத்து சுகத்தை கொடுக்கும் ஏலக்காய். இந்த இரண்டு பொருட்களை வைத்து தான் இன்று பரிகாரம். இந்த பரிகாரத்தை எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் செய்யலாம். ஆனால் இதற்கு மொட்டாக இருக்கும் மல்லிகைப்பூ, ஒரு ஏலக்காயும் தேவை.

மொட்டாக இருக்கும் மல்லிகை பூவுக்கு நடுப் பகுதியில் இந்த ஏலக்காயை வைத்து விடுங்கள். மல்லிகைப்பூவை லேசாக விரித்து இந்த ஏலக்காயை உள்ளே வைக்கலாம் தவறு இல்லை. காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு இந்த மல்லிகை பூவை காமாட்சியம்மன் விளக்குக்கு பக்கத்தில் வைத்து விட்டு, குலதெய்வத்தை மனதார நினைத்து விளக்கு ஏற்றி குடும்பம் சுபிட்சம் அடைய வேண்டும்.

- Advertisement -

குடும்பத்தில் மங்கள காரியங்கள் தொடர்ந்து நடக்க வேண்டும். பொன் பொருள் சேர்க்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் வழிபாடு முடிந்தது. அடுத்தடுத்த நாள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா. மல்லிகை பூவுக்கு உள்ளே இருக்கும் ஏலக்காயை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். வாடிய மல்லிகை பூவை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

மறுநாள் புது மல்லிகை பூவுக்கு நடுவே இதே ஏலக்காயை வைத்து,  வேண்டுதல் வைக்கணும். இதே முறைப்படி 11 நாள் இந்த வழிபாட்டை முடிக்கணும். மல்லிகை பூவை மட்டும் மாத்துங்க. ஏலக்காயை மாற்ற வேண்டாம். இந்த 11 நாட்களில் அந்த மல்லிகை பூவின் வாசம் நன்றாக ஏலக்காயில் இறங்கிவிடும். இந்த ஒரு ஏலக்காயை பீரோவில் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கணக்கில்லாமல் பணத்தை சம்பாதிக்க சிவன் வழிபாடு

ஏலக்காய் வாசமும் மல்லிகை பூ வாசமும் உங்களுக்கு நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும். இதனால் வீட்டில் மங்களகரமான காரியங்களும் நடக்கும். பொன் பொருள் சேர்க்கையும் இருக்கும். எளிய வழிபாடுதான் தாந்திரீக பரிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் இந்த எளிய பரிகாரம் உங்களுக்கு பெரிய அளவில் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி தரும் இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -