கணக்கில்லாமல் பணத்தை சம்பாதிக்க சிவன் வழிபாடு

sivan2
- Advertisement -

தன் பக்தர்களுக்கு சிவபெருமான் எதையுமே கணக்கு பார்த்து கொடுக்க மாட்டார். அளவில்லாமல் வரங்களை வாரி வழங்கக் கூடிய குணம் கொண்டவன் ஈசன். சிவபெருமானை இவர்கள்தான் கும்பிடனும், இவர்கள் கும்பிடக் கூடாது என்று எந்த கட்டுப்பாடும் இல்லை. யார் வேண்டும் என்றாலும் ஈசனை வழிபாடு செய்யலாம். மற்ற தெய்வங்களை வழிபாடு செய்வதற்கு கூட சின்ன சின்ன கட்டுப்பாடுகள் இருக்கும். சின்ன சின்ன வழிபாட்டு முறைகள் இருக்கும்.

ஆனால் ஈசனை வழிபாடு செய்ய எந்த கட்டுப்பாடும் கிடையாது. பூமியில் பிறந்த புழு பூச்சி முதல் மனிதர்கள் வரை ஈசனை வழிபாடு செய்ய வேண்டும். இதற்காகத்தான் ஈசன் உருவம் இல்லாத, அருவ ரூபத்தில் நமக்கு காட்சி தருகின்றார். அதாவது சிவலிங்கத்துக்கு உருவம் கிடையாது. அருவமாக தானே அவர் நமக்கு காட்சி தருகின்றார். ஆகவே சிவபெருமானை மனப்பூர்வமாக நம்பி பின் சொல்லக்கூடிய வழிபாட்டை செய்யுங்கள். உங்கள் பணம் சம்பந்தப்பட்ட கஷ்டம் உடனடியாக நீங்கும்.

- Advertisement -

பணக்கஷ்டம் நீக்கும் சிவபெருமான் வழிபாடு

இந்த வழிபாட்டை நீங்கள் வீட்டிலும் செய்யலாம். கோவிலுக்கு சென்றும் செய்யலாம். ஒரு மண் அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இலுப்பெண்ணை ஊற்ற வேண்டும். பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும். இந்த விளக்குக்கு பக்கத்தில் இரண்டு வில்வம் இலைகள் கட்டாயம் இருக்கணும்.

வீட்டில் இந்த விளக்கை ஏற்றுவதாக இருந்தால் ஒரு சின்ன தட்டின் மேல் வில்வ இலைகளை வையுங்க. அதுக்கு பக்கத்தில் மண்ணகல் விளக்கை வைத்து இலுப்பெண்ணை ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். சில பேர் வீட்டில் நல்லெண்ணெயில் தான் தீபம் ஏற்ற வேண்டும். இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்ற கூடாது என்று சொல்லுவார்கள். உங்களுக்கு வீட்டில் இலுப்பெண்ணெய் தீபம் போட விருப்பமில்லை என்றால், கோவிலுக்கு போயிருங்க.

- Advertisement -

கோவிலில் சிவபெருமானுக்கு முன்பு இதே போல ஒரு விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, அந்த விளக்கத்திற்கு முன்பாக அமர்ந்து உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டத்தை சிவபெருமானிடம் கொட்டி தீர்த்து விடுங்கள். ‘நமசிவாயா’ என்று சொல்லி அவனுடைய பாதங்களை சரணடையுங்கள். ஒரே நாளில் பலனை எதிர்பார்க்காதீங்க. தொடர்ந்து தீபம் ஏற்றுங்கள். தினமும் சிவன் கோவிலுக்கு போய் இலுப்ப எண்ணெயில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வர உங்கள் பண கஷ்டம் தீர்ந்துவிடும்.

முதலிலேயே நாம பார்த்தோமே. சிவபெருமான் கணக்கு போட்டு எல்லாம் உங்களுக்கு வரம் கொடுக்க மாட்டான். பிறகு காசு பணத்தையும் கணக்கில்லாமல் வாரி கொட்டி கொடுத்து விடுவார். ஆமாங்க, அதேசமயம் சோதனைகளை கொடுக்கக்கூடிய வேலையையும் இந்த சிவபெருமான் செய்வார்.

- Advertisement -

ஆகவே விளக்கை ஏற்ற தொடங்கிய பின்பு வாழ்க்கையில் ஏதேனும் சோதனை வந்துவிட்டால், உடனடியாக விளக்கு போடுவதை நிறுத்தாதிங்க. அந்த சோதனையை தாண்டும் போது, நீங்கள் எதிர்பாராத ஒரு நல்லதை உங்களுக்கு அவன் கொடுத்து விடுவான். அதற்காக விளக்கு போட்டால் கஷ்டம் வரும் என்று சொல்ல வரவில்லை. கஷ்டத்திற்கு பின்னால் வரும் நல்லதை அடைய வேண்டும் என்றால் சில தடைகளை தாண்டித்தான் ஆக வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சொத்து பிரச்சனை நீங்க வழிபாடு

அதற்கு உங்களை பக்குவப்படுத்த சிவபெருமான் சில திருவிலையாடல்களை செய்வான். அதை பார்த்து பயப்படாதீங்க. ஈசனே கெதி என்று அவன் பாதங்களை பற்றி கொண்டவர்களுக்கு துன்பமில்லை என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -