இந்த வருடம் முழுவதுமே செல்வ செழிப்புடன் வாழ தீபாவளி அன்று மறக்காமல் செய்யக்கூடிய இரண்டு விஷயங்களும், வாங்க வேண்டிய இரண்டு மங்களப் பொருட்களும் அது என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோமா?

- Advertisement -

தீபாவளி என்றாலே ஒரு கொண்டாட்டமான பண்டிகை தான் சிறுவர்களுக்கும் சரி பெரியவர்கள் சரி. இந்த பண்டிகையின் வழிபாட்டு முறை வேண்டுமானால் இந்து பண்டிகை என எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அன்று இனிப்பு பலகாரம், பட்டாசு போன்றவை எல்லாமே குழந்தைகள் இருக்கும் அனைத்து வீடுகளிலும் அனைவரும் வாங்கி மகிழும் ஒரு நல்ல திருநாள். இந்த நாளை மேலும் நல்ல நாளாக மாற்ற வாங்க வேண்டிய இரண்டு மங்கள பொருட்களை பற்றிய பதிவு தான் இது.

தீபாவளி அன்று நமக்கு காலை முதலே செய்ய வேண்டிய பணிகள் அதிகமாக இருக்கும். எழுந்ததும் முதலில் எண்ணெய் குளியல் அது மிக மிக அவசியம். அதற்கு முதலில் எண்ணையும், சீக்காயும் தனி, தனி கிண்ணத்தில் எடுத்து பூஜை அறையில் வைத்து விளக்கேற்றி வணங்கி வீட்டில் உள்ள பெரியவர்கள் சிறியவர்களுக்கு வைத்த பிறகு இளம் சூடான தண்ணீரில் குளிக்க வேண்டும்.இது தீபாவளி அன்று காலையில் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று.

- Advertisement -

புத்தாடை இதை கண்டிப்பாக மஞ்சள் வைத்த பிறகு தான் அணிய வேண்டும். அதே போல பலகாரங்கள் அவரவரின் விருப்பப்படி அன்று உங்களின் வழக்கத்திற்கு என்ன செய்வீர்களோ செய்து அதையும் கடவுளுக்கு படைத்துப் இந்த நன்னாளில் இத்தனை உணவுகளை எங்களுக்கு வழங்கியதற்கு நன்றி என்று வேண்டிக் கொண்டு உண்ண வேண்டும்.

தீபாவளி அன்று காலையில் முதல் செலவாக உப்பும், மஞ்சளும் புதிதாக வாங்கி வந்து வைத்து விடுங்கள். மாலை வீட்டில் விளக்கேற்றும் முன் பூஜை அறையில் சாமி படத்திற்கு முன் இந்த மஞ்சளும் உப்பும் வைத்த பிறகு விளக்கேற்றி வணங்கிக் கொள்ளுங்கள். உப்பில் மகாலட்சுமி வாசம் செய்வது அனைவரும் அறிந்த ஒன்றே, மஞ்சளும் அதே போல தான் பல மங்களகரமான விஷயங்களுக்கு முதல் துவக்கமே இந்த மஞ்சள் தான். இந்த நாளில் வீட்டில் மங்கலமும் செல்வமும் நிறைந்து இருக்க இந்த இரண்டு பொருள்களை வாங்கி வைத்து வணங்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

பணம் நகை இதையெல்லாம் வாங்குவதை விட சிறந்தது இந்த உப்பும், மஞ்சளும். மகாலட்சுமி தாயார் வாசம் செய்யும் இந்த பொருளை நாம் வாங்கி வைத்து வணங்குவது இருப்பவர் இல்லாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் சமமாக இந்த வழிபாட்டை மன நிறைவோடு செய்ய வேண்டும் என்பற்காக தான்.

இதையும் படிக்கலாமே: உங்க வீட்டில் இந்த சத்தம் எல்லாம் கேக்குதா? கேட்கலைனா பண பிரச்சினை இருக்கத்தான் செய்யும் மாத்தவே முடியாது!

இந்த நன்னாளில் இருக்கும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் எல்லா நாளும் நமக்கு கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை இந்த இரண்டு மங்களப் பொருட்களை வைத்து வேண்டி வணங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு இனி வரும் நாட்கள் அனைத்திலும் வளங்களையும் நலன்களையும் கண்டிப்பாக மகாலட்சுமி தாயார் வழங்கி அருளுவார்.

- Advertisement -