மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்

mangalya dosham
- Advertisement -

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே நடைபெறும். அதனால் அந்த திருமணத்தை செய்வதற்கு முன்பாக திருமண பொருத்தம் பார்த்து ஆணுக்கும் பெண்ணிற்கும் பொருத்தம் சரியாக இருக்கிறதா என்பதை அறிந்து பிறகு திருமணம் செய்வார்கள். அப்படி பொருத்தம் பார்க்கும் பொழுது பெண்ணிற்கு சுமங்கலி பாக்கியம் எப்படி இருக்கிறது என்று பார்க்கும் தன்மையும் இருக்கிறது. இதில் ஏதாவது தோஷம் இருந்தால் அந்த பெண்ணிற்கு திருமணம் நடப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். அப்படி மாங்கல்ய தோஷம் பெற்றிருப்பவர்கள் எந்த பரிகாரத்தை செய்தால் அவர்களுக்கு தோஷம் நீங்கி நன்மைகள் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒரு பெண்ணிற்கு மாங்கல்ய பாக்கியம் என்பது கணவனின் ஆயுளைக் குறிக்கக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. மாங்கல்ய தோஷம் இருப்பவர்களுக்கு கணவனின் ஆயுளில் பாதிப்பு இருக்கும் என்று அர்த்தம் கிடையாது. சண்டைகள் ஏற்படலாம், பிரிவுகள் ஏற்படலாம், மரணம் ஏற்படலாம் அல்லது விட்டுவிட்டு சென்றுவிடலாம். இப்படி பல விதமாக அந்த தோஷங்களின் தாக்கம் என்பது ஏற்படும். அப்படிப்பட்ட தாக்கத்தை நீக்கக்கூடிய மிகவும் எளிமையான பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று 27 சுமங்கலி பெண்களுக்கு சம்பந்தப்பட்ட பெண் தன் கையால் குங்குமம், மஞ்சள் கயிறு, ஒரு முழம் மல்லிகை பூ இவற்றை வாங்கி தானமாக தர வேண்டும். இந்த தானத்தை கோவிலில் செய்வது மிகவும் சிறந்தது. முன்பின் அறிமுகம் இல்லாத சுமங்கலி பெண்களுக்கு கொடுப்பதுதான் முழுமையான பலனை தரும் என்பதை கருத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு வாங்கிக் கொடுத்த பிறகு அவர்களிடம் இருந்த ஆசீர்வாதம் வாங்க வேண்டும்.

அடுத்ததாக பிரதோஷ தினத்தன்று சிவ ஆலயத்திற்கு சென்று அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு லட்டுவை தானமாக தர வேண்டும். இதே போல் சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகர் ஆலயத்திற்கு சென்று பூரண கொழுக்கட்டையை அங்கு வரும் பக்தர்களுக்கு தானமாக தர வேண்டும். லட்டு மற்றும் கொழுக்கட்டையை அந்தப் பெண் தன் கையால் செய்து அதை பிரசாதமாக தன் கையால் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

60 வயதிற்கு மேல் ஆன சுமங்கலி பெண்களாக பார்த்து பதினோரு தம்பதிகளை தேர்வு செய்து அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு விருந்தளித்து ஆடைகளை வழங்கி அதோடு ஒரு சிறிய வெள்ளியிலான ஏதாவது ஒரு பொருளையும் தானமாக தந்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும் பொழுது ஜாதகத்தில் இருக்கக்கூடிய மாங்கல்ய தோஷம் என்பது நீங்கும்.

பொதுவாக காகத்திற்கு உணவளிப்பது என்பது நம்முடைய கர்ம வினைகளை நீக்க உதவும். மாங்கல்ய தோஷம் இருப்பவர்கள் காகத்திற்கு மூன்று வேளையும் தினமும் உணவு வைப்பதன் மூலம் அவர்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான தோஷங்களும், நீங்கி இன்பமான வளமான வாழ்க்கையை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: சேமிப்பை அதிகரிக்க பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த பரிகாரங்களில் ஏதாவது ஒன்றை முழு நம்பிக்கையுடன் செய்பவர் ஜாதகத்தில் இருக்கக்கூடிய மாங்கல்ய தோஷமானது நீங்கி தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழ்வார்கள்.

- Advertisement -