சேமிப்பை அதிகரிக்க பரிகாரம்

budhan
- Advertisement -

பெட்டியில் இருக்கும் பணம் செலவே ஆகக்கூடாது. பணம் கொஞ்சம் கூட குறையவே கூடாது. அப்படியே சேமிப்பில் இருக்க வேண்டும் என்பதுதான் நம்மில் எல்லோருடைய ஆசையாகவும் இருக்கிறது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் கைக்கு வந்த பணம், பெட்டி வரை செல்வதே ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம். வாங்கிய சம்பளத்தை முழுசாக வீட்டிற்கு கொண்டுவந்து பூஜை அறையில் வைக்க முடியாது. மனைவியிடம் கொடுக்க முடியாது.

அம்மாவிடம் கொடுக்க முடியாது. அதற்குள் கடன்காரர்கள் பிடுங்கி கொள்கிறார்கள். அக்கவுண்டுக்கு வந்த பணம் தானாவே காலி ஆயிரும். வந்த பணமெல்லாம் பஞ்சாக பறந்து போகிறது. ஒரு ஆயிரம் ரூபாயை கூட சேமிப்பில் வைக்க முடியவில்லை. பிறகு குடும்பத்தை நடத்திச் செல்ல மீண்டும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. வந்த சம்பளத்தில் வீட்டு செலவுக்கு போக மீதம் இருக்கும் பணத்தை திறமையாக சேமிக்க என்ன செய்யலாம். ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிய பரிகாரம் இதோ உங்களுக்காக இந்த பதிவில்.

- Advertisement -

சேமிப்பு அதிகரிக்க பரிகாரம்

புதன்கிழமை பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்யணும். அதிகாலை 4:00 மணி அளவில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். காலை 5:45 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்து முடித்திருக்க வேண்டும். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு சின்ன சதுர வடிவில் இருக்கும் வெள்ளை காட்டன் துணி எடுத்துக்கோங்க.

அதில் 1 ஸ்பூன் வெந்தயத்தை வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு புதன் பகவானையும், பெருமாளையும் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்கள் சேமிப்பு அதிகரிக்க வேண்டும். சேமிப்பில் இருக்கும் பணம் வீண் விரைய செலவு ஆகக்கூடாது. இந்த சேமிப்பின் மூலம் வாழ்க்கையில் மென்மேலும் உயர வேண்டும் என்று பிரார்த்தனை வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த முடிச்சை அப்படியே ஒரு கிண்ணத்தில் வைத்து, பெருமாள் பாதங்களில் வைத்து விடுங்கள். வாரம் தோறும் வரக்கூடிய புதன்கிழமை அன்று இதே போல வேண்டுதல் வைக்க வேண்டும். தொடர்ந்து 11 புதன்கிழமை இந்த பரிகாரத்தை செய்து விட்டு, இந்த முடிச்சை எடுத்து உங்க சேமிப்பு பணத்தோடு சேர்த்து வச்சிருங்க. 11 வாரத்திற்கும் இதே முடிச்சு தான் பயன்படுத்தனும். உள்ளே இருக்கும் வெந்தயத்தை கூட மாற்ற வேண்டாம்.

வெந்தயத்தில் அவ்வளவு எளிதில் பூச்சி பிடிக்காது. உங்களுடைய வேண்டுதல் எல்லாம் அந்த முடிச்சுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. புதன் பகவானை நினைத்து இந்த எளிமையான பரிகாரத்தை செய்தாலே உங்கள் சேமிப்பு பணம், வீண் விரைய செலவுக்கு போகாது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை பழைய வெந்தயம் முடிச்சு எடுத்து பிரித்து, கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, மீண்டும் 11 வாரம் இந்த வேண்டுதலை வைத்து அந்த முடிச்சை பண பட்டியல் வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் சின்ன உண்டியலில் முதலில் 5 வெந்தயத்தை போட்டுவிட்டு, அதன் பின்பு அதில் பணத்தை போட்டு சேமிப்பை தொடங்கணும். இதை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். உங்கள் குழந்தைகள் கையாளும் வீட்டில் சேமிப்பு அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: சீரான வருமானத்தை பெற முருகன் வழிபாடு

வீட்டுப் பெண்கள் சமையல் அறையில் ஒரு சின்ன கிண்ணத்தில் வெந்தயத்தை திறந்தபடி வைக்கவும். மாதத்தில் ஒரு நாள் பழைய வேந்தத்தை செடி கொடிகளுக்கு கீழே போட்டுவிட்டு, மீண்டும் புதிய வெந்தயத்தை மாற்றி வைக்கவும். இதை செய்து வந்தால் வீட்டு பெண்களிடத்தில் சமையல் அறையில் கையிருப்பு அதிகரிக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சொன்ன இந்த எளிய வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம். சேமிப்பில் உயர்ந்து செல்வந்தர்களாக மாறலாம்.

- Advertisement -