அட்டகாசமான மாம்பழ பாயாசம்

mango payasam
- Advertisement -

ஒரு காலகட்டத்தில் ஒவ்வொரு பழமும் அதிகமான அளவு காய்க்கும். அந்த வகையில் இந்த வெயில் காலத்தில் மாம்பழ சீசன், பலாப்பழ சீசன் என்று பழங்களின் சீசன் அதிகமாகவே ஏற்படும். அதிலும் குறிப்பாக மாம்பழ சீசனை சொல்லவே வேண்டாம். மாம்பழம் பிடிக்காத நபர்கள் என்றால் விரல்விட்டு கூட எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு ஒரு சிலருக்கு மட்டும் தான் மாம்பழம் பிடிக்காது. மற்றவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பழமாக தான் மாம்பழம் திகழ்கிறது. அப்படிப்பட்ட மாம்பழத்தில் செய்யக்கூடிய மாம்பழ பாயாசத்தை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

மாம்பழத்தில் விட்டமின் கே, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், சர்க்கரை சத்து ஆகிய சத்துக்கள் இருக்கிறது. நம் உடலுக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் இந்த பழத்தில் நிறைந்து இருக்கிறது. இந்த பழத்தை அதிக அளவில் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும், இரத்தத்தை சுத்தம் செய்யவும் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தரக்கூடிய பழமாக இந்த பழம் திகழ்கிறது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்தை சீராக வைக்க உதவுகிறது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. மலக்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் உருவாக்கக்கூடிய செல்களை அழிக்கிறது. ரத்த சோகை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • பங்கன பள்ளி மாம்பழம் – 3
  • தேங்காய் – 1 1/2 மூடி
  • ஏலக்காய் – 1/2 ஸ்பூன்
  • குங்குமப்பூ – 1/2 கிராம்
  • வெல்லம் – 1/4 கிலோ
  • உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை

முதலில் மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு அதன் சதைகளை மட்டும் தனியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இரண்டு துண்டுகள் மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு மீதம் இருக்கும் மாம்பழத்தை கைகளால் பிசைந்து நன்றாக கூலாக கரைத்துக் கொள்ள வேண்டும். மாம்பழ கொட்டையிலும் சேர்ந்திருக்கும் சதைப்பகுதியும் சுத்தமாக நீக்கிவிட்டு இப்படி கூலாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒன்றரை மூடி தேங்காயை உபயோகப்படுத்தி இரண்டு முறை தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். முதல் முறை எடுத்த தேங்காய் பாலை அப்படியே நாம் கரைத்து வைத்திருக்கும் மாம்பழக்கூலுடன் சேர்த்துவிட்டு அதில் ஏலக்காய் தூள், குங்கும பூ இவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இரண்டாவது முறையாக எடுத்த தேங்காய் பாலில் வெல்லத்தை சேர்த்து நன்றாக கரைத்து அதை வடிகட்டி நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் மாம்பழக்கூழ் உடன் சேர்த்து விட வேண்டும். பிறகு இதில் உப்பை சேர்த்து விட்டு விருப்பம் இருப்பவர்கள் பாதாம் பருப்பை துருவி இதில் சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் மிகவும் சுவையான மாம்பழ பாயாசம் தயாராகிவிட்டது.

கடைசியாக நாம் தனியாக எடுத்து வைத்திருக்கும் இரண்டு துண்டு மாம்பழத்தை பொடியாக நறுக்கி இந்த மாம்பழ கூலில் சேர்த்து கலந்து விட வேண்டும். இதை ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைத்திருந்து பிறகு பரிமாற அதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.

- Advertisement -

அடுப்பை உபயோகப்படுத்தாமல் மிகவும் எளிமையான முறையில் தயாரிக்க கூடிய இந்த மாம்பழ பாயாசத்தில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் உடலுக்கு நன்மை தருவது மட்டுமல்லாமல் அதை அப்படியே எடுத்துக் கொள்வதால் அதன் சத்துக்கள் எந்த வகையிலும் குறையாமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: நெல்லிக்காய் ரசம் செய்முறை

மிகவும் எளிமையான முறையில் அதேசமயம் ஆரோக்கியமான மாம்பழ பாயாசத்தை நாமும் நம் இல்லங்களில் தயார் செய்து அனைவரின் பாராட்டியும் பெறுவோம்.

- Advertisement -