காக்கும் கடவுள் வேலனே வந்து உங்கள் வீட்டில் குடியிருந்து, உங்கள் கஷ்டத்தை தீர்த்து வைக்க இந்த வழிபாடு ஒன்றே போதும்.

vel-poojai
- Advertisement -

கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் முருகப் பெருமான். தீய சக்திகளிடம் இருந்து நம்மை காக்க வேலாயுதத்தை கையில் வைத்துக்கொண்டு நிற்கும் வேலன் வழிபாட்டைப் பற்றி ‘வேல் வழிபாட்டை’ பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நமக்கு எவ்வளவு பெரிய துன்பங்கள் இருந்தாலும் அந்த துன்பத்தை துவம்சம் செய்யக்கூடிய சக்தி கொண்டதுதான் முருகன் கையில் இருக்கும் வேல். நிறைய பேர் வீட்டில் வேல் வழிபாடு செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அவர்களுடைய வீட்டில் வேல் இருக்காது. வேல் வாங்கி வீட்டில் வைத்திருக்க மாட்டார்கள். இருப்பினும் பரவாயில்லை. வேல் இல்லாதவர்கள் வீட்டிலும் வேல் வழிபாட்டை செய்யக்கூடிய ஒரு சூட்சமமான சுலபமான வழிபாட்டு முறையை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

vel

சுத்தமான மஞ்சளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் மஞ்சளை வாங்கி மில்லில் கொடுத்து அரைத்து கலப்படமில்லாத மஞ்சளை கூட இந்த பூஜைக்கு நீங்கள் பயன்படுத்தலாம். அது நம்முடைய விருப்பம் தான். எந்த கலப்படமும் இல்லாத சுத்தமான மஞ்சள் தூள் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் பன்னீரையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சிறிய கிண்ணத்தில் மஞ்சள் பொடியைப் போட்டு பன்னீர் ஊற்றி நன்றாக குழைத்து இந்த மஞ்சளை தொட்டு உங்கள் வீட்டு பூஜை அறை சுவற்றில் வேல் வரைய வேண்டும். மனதார வாய் நிறைய ‘ஓம் முருகா’ என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே உங்களுக்குத் தெரிந்தபடி ஒரு வேலை அழகாக வரைந்து கொள்ளுங்கள். வேலைக்கு நடுவில் விபூதியின் மூன்று கோடுகள் இட்டு, அதாவது பட்டை இட்டு அந்த பட்டைக்கு நடுவே ஒரு குங்குமத்தையும் இட்டு விடவேண்டும்.

manjal

இப்போது உங்களுடைய வீட்டில் சக்தி வாய்ந்த வேல் வந்துவிட்டது. இந்த மஞ்சளினால் நீங்கள் வரைந்த வேலை, வேலனாக பாவித்து தினம்தோறும் வேல் வழிபாடு செய்து வர வேண்டும். காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு முருகப் பெருமானை மனதார நினைத்து இந்த வேலுக்கு முன்பாக ஒரு மண் அகல் தீபம் ஏற்றி வைத்துவிட்டு பூஜை அறையில் அமர்ந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

உதிரிப் புஷ்பங்களால் வேலைக்கு முருகப் பெருமானை மனதார நினைத்து ‘ஓம் முருகா’ அல்லது உங்களுக்கு தெரிந்த முருகனின் எளிமையான நாமத்தை உச்சரித்து அர்ச்சனை செய்ய வேண்டும். உங்களுக்கு இருக்கும் துன்பங்கள் அனைத்தும் துவம்சம் ஆக வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் சரி அந்த கஷ்டத்தை படிப்படியாக குறைக்க கூடிய சக்தி இந்த வேல் வழிபாட்டிற்கு உண்டு.

Lord Murugan Vel

உங்களுடைய வீட்டில் சுவற்றில் வேல் வரைய முடியாத சூழ்நிலை இருந்தால், வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு பிரச்சனை இருந்தால், ஒரு வெள்ளைக் காகிதத்தில் நான்கு முனையிலும் மஞ்சள் தடவி விட்டு நடுவே மஞ்சளால் வேல் வரைந்து சுவற்றில் ஒட்டியும் வைத்து வழிபாடு செய்யலாம். தூய்மையான மனதும் உண்மையான பக்தியையும் தான் நமக்கு மிக மிக அவசியம். நீங்கள் மஞ்சளில் வரைந்த வேல் நிறம் கொஞ்சம் மாறும்போது ஈரத்துணியில் பழைய வேலை துடைத்து எடுத்துவிட்டு மீண்டும் புதிய வேல் வறைந்து கொள்ளலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. பேப்பரில் வேல் வரைந்து வைத்திருந்தால், பழைய பேப்பரை நீக்கிவிட்டு, புதிய பேப்பரில் மீண்டும் புதியதாக வேல் வரைந்து மாற்றிக்கொள்ளலாம்.

murugan-vel-thaipoosam

உலகத்தை காக்கும் ஆயுதமான வேல் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் அந்த வீட்டிற்கு இறை சக்தி நிறைந்த பாதுகாப்பும் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். நம்பிக்கை உள்ளவர்கள் அவரவர் வீட்டில் மேல் சொன்ன முறைப்படி வழிபாட்டை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -