எவ்வளவு பெரிய கெட்ட சக்தி உங்கள் குடும்பத்தை கட்டி போட்டு இருந்தாலும் அதை ஒரே நாளில் உடைத்து விடலாம். சகல விதமான கட்டுக்களையும் உடைக்க வெறும் 3 எலுமிச்சம் பழம் போதும்.

lemon
- Advertisement -

குடும்பத்தில் பெரிய பெரிய அளவில் கஷ்டங்கள் வரும்போது தான், எதனால் இவ்வளவு கஷ்டம் வந்திருக்கிறது என்று கொஞ்சம் அலசி ஆராய்ந்து பார்ப்போம். அப்போது வீட்டில் குடும்ப தலைவரின் ஜாதக கட்டத்தை கொண்டு போய் ஜோதிடரிடம் காண்பித்தாலே சொல்லிவிடுவார்கள். உங்களுடைய குடும்பத்தை யாரோ கட்டிப்போட்டு உள்ளார்கள். வீட்டிற்குள் குலதெய்வம் வர முடியவில்லை, வீட்டிற்குள் நல்ல சக்திகள் நுழைந்து நல்லதை செய்ய முடியவில்லை என்று. இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கும் நல்லதொரு தீர்வினை அந்த ஜோதிடரே சொல்லுவார். ஆனால் அதற்காகும் செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

செலவு அதிகமாக செய்யாமல் இப்படிப்பட்ட துர்சக்திகளை வீட்டிலிருந்து விரட்டி அடிக்க, துர் சக்திகளால் பின்னி வளையப்பட்ட கட்டுகளை அவிழ்க்க, எலுமிச்சம் பழத்தை வைத்து நமக்கு நாமே செய்து கொள்ளக்கூடிய ஆன்மீகம் சொல்லும் ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

மந்திர கட்டை அவிழ்க்க எலுமிச்சம் பரிகாரம்:
இந்த கட்டை மந்திர கட்டு என்று சொல்லுவார்கள். யாராவது நம் குடும்பத்திற்கு இப்படி கட்டுப்போட்டு விட்டால், அந்த மந்திர கட்டில் இருந்து வெளிவருவது அவ்வளவு சுலபம் அல்ல. இந்த மந்திர கட்டின் மூலம் குடும்பத்தில் கெடுதலுக்கு மேல் கெடுதல் நடக்கும். வீட்டில் இருக்கும் நிம்மதி இழக்கப்படும். வீட்டில் சந்தோஷமே இருக்காது. வீடு சூனியம் பிடித்தது போல இரண்டு போய் கிடக்கும். வீட்டிற்கு உள்ளே சூரிய வெளிச்சமே அடித்தாலும், அது உங்களுக்கு ஒரு மன நிறைவை கொடுக்காது. சரி இந்த மந்திர கட்டில் இருந்து நாம் எப்படி வெளிவருவது.

மூன்று எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு கிண்ணத்திலோ, தட்டிலோ வைத்து அதன் மேலே 3 கற்பூரத்தை வைத்து ஏற்றி, நடு ஹாலில் வைத்து விட வேண்டும். கற்பூரம் எலுமிச்சம் பழத்திற்கு மேலே எரியும்போது உங்களுடைய குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் நினைத்து, கஷ்டங்கள் தீர பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். எவ்வளவு பெரிய கெட்ட சக்தி வீட்டை முற்றுகையிட்டு இருந்தாலும் அது வெளியேற வேண்டும் என்று வேண்டுங்கள். அந்த கற்பூரம் எரிந்து முடிந்ததும் எலுமிச்சம் பழத்தை வீட்டிற்கு வெளியே கொண்டு போய் உங்களுடைய வீட்டை மூன்று முறை சுற்றி கீழே வைத்து நசுக்கி விட வேண்டும்.

- Advertisement -

முடிந்தால் காலை கொண்டு நசுக்கி எலுமிச்சம் பழத்தை நான்காக பிரித்து நான்கு திசைகளில் தூக்கி போட்டு விடுங்கள். இல்லை என்றால் கத்தியை கொண்டு நான்கு துண்டுகளாக எலுமிச்சம் பழத்தை வெட்டி நான்கு திசைகளில் தூக்கி போட்டு விடவும்.

இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு நேரங்களில் செய்யலாம். 9 மணிக்கு மேல் ஊரில் இருப்பவர்கள் எல்லாம் தூங்கிய பிறகு, வீதியில் நடமாட்டம் இல்லாத போது செய்து கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு ஒரே ஒரு தேங்காயை வீட்டை சுற்றி உடைக்க வேண்டும். தேங்காய்க்கு மேலே ஒரு கற்பூரத்தை வைத்து திருஷ்டிக்கு சுற்றுவோம் அல்லவா அதேபோல வீட்டை மூன்று முறை சுற்றி சிதறு தேங்காய் உடைத்து விடுங்கள்.

- Advertisement -

மறுநாள் திங்கள் கிழமை வீட்டை முழுமையாக சுத்தம் செய்யுங்கள். ஒட்டடை அடித்து தூசு தட்டி, மூளை முடுக்குகளில் இருக்கும் தூசு தூம்புகளை எடுத்து சுத்தம் செய்துவிட்டு, மாப் போட்டு, வீட்டை முடிந்தால் சுத்தமாக கழுவி விட்டு, மஞ்சள் தண்ணீர் கோமியம் இவைகளை வீட்டின் மூளை முடுக்குகளில் நன்றாக தெளித்து விடவும்.

இதையும் படிக்கலாமே: ரொம்பவும் ஏழையாக இருப்பவர்கள் கூட, பிரம்ம முகூர்த்தத்தில் இந்த விளக்கை ஏற்றினால் சீக்கிரம் செல்வந்தவர்களாக மாறிவிடலாம்.

பிறகு வெள்ளை குங்கிலியம் வெண்கடுகு துளசி விதை சேர்த்த சாம்பிராணி தூபத்தை வீடு முழுவதும் போட்டுவிட்டு குலதெய்வத்தை நினைத்து ஒரு சின்ன பூஜையை வீட்டில் செய்ய வேண்டும். வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் புகை நிறைந்திருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இதை செய்தால் வீட்டில் இருக்கும் மந்திர கட்டு உடையும். வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழையும் என்பது நம்பிக்கை. முடிந்தால் இதையெல்லாம் செய்துவிட்டு குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வரவும். உங்களுக்கும் இப்படிப்பட்ட பிரச்சனை இருந்தால் மேல் சொன்ன இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -