பெண்களை பாதுகாக்கும் மந்திர கயிறு

bairava
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் பெண்கள் நேரம் காலம் இல்லாமல் வெளியில் சென்று வர வேண்டிய சூழ்நிலை. வேலைக்கும், மற்ற தேவைகளுக்கும் வெளியில் செல்ல வேண்டிய கட்டாயம். காலம் முன்பு போல் கிடையாது. விளக்கு வைப்பதற்கு முன்பு பெண்கள் எல்லாம் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். அதெல்லாம் இப்போது நடைமுறையில் இல்லை.

சரி இப்படி நேரம் காலம் இல்லாமல் பெண்கள் வெளியில் இருக்கும் போது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் தேவை. கண்ணுக்கு தெரியாத எதிர்மறை சக்திகளிடமிருந்து அவர்கள் தங்களை பாதுகாக்க வேண்டும். கண்ணுக்குத் தெரிந்த சில பல பிரச்சனைகளில் இருந்தும் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதற்காக ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிய பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.

- Advertisement -

இந்த உலகத்துக்கே பாதுகாப்பாக நிற்கும் காவல் தெய்வம் காலபைரவர். அந்த கால பைரவரை நினைத்து இந்த ஒரு கயிறை பெண்கள் தங்களுடைய கையில் கட்டிக் கொண்டால், அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. கால பைரவர், காவல் கயிறை எப்படி தயார் செய்வது.

பெண்களை பாதுகாக்கும் கயிறு

கோவில்களிலேயே கயிறு கிடைக்கும். நீங்கள் அந்த கயிறை வாங்கிக் கொண்டாலும் சரி, அல்லது தனியாக வீட்டில் இருந்து ஒரு மஞ்சள் கயிறு, சிவப்பு கயிறு வாங்கி கோவிலுக்கு எடுத்துப் போனாலும் சரி, அது உங்களுடைய விருப்பம். ஒரு கால பைரவர் சன்னிதானம் இருக்கக் கூடிய கோவிலுக்கு போங்க. உங்க கையில் இந்த கயிறு இருக்கட்டும். காலபைரவரை மனதார பிரார்த்தனை செய்து, கால பைரவர் சன்னதியை மூன்று முறை வலம் வருவும். கால பைரவர் முன்பாக அந்த கோவிலிலேயே அமருங்கள்.

- Advertisement -

அந்த கயிறு இப்போது ஏழு முடிச்சுகள் போட வேண்டும். ஒரு இன்ச் தள்ளி தள்ளி ஏழு முடிச்சுகள் போடணும். ஒவ்வொரு முடிச்சை போடும்போதும் ‘ஓம் பைரவா, எம் பைரவா, உம் பைரவா’ என்ற மந்திரத்தை ஏழுமுறை சொல்ல வேண்டும். ஒவ்வொரு முடிச்சு போடும்போதும் ஏழு முறை இந்த மந்திரத்தை சொல்லுங்கள். ஏழு முடிச்சுகள் போட்டுக் கொள்ளுங்கள். அப்போது மொத்தம் 49 முறை இந்த மந்திரத்தை நீங்கள் சொல்ல வேண்டியதாக இருக்கும்.

இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு, இந்த கயிறை கோவிலிலேயே பெண்கள் தங்களுடைய வலது கையில் கட்டிக் கொள்ளுங்கள். பெண்களே இந்த கயிருக்கு முடிச்சு போட்டு, பெண்களே இந்த மந்திரத்தை சொல்லி, பெண்கள் தங்களுக்கு தாங்களே பாதுகாப்பு கயிறு கட்டிக் கொள்ளலாம். அந்த பைரவரையே உங்களுக்கு பாதுகாப்பாக உங்கள் கையில் இருப்பதாக அர்த்தம். இதனால் கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆபத்துகள், உங்களை பின்தொடராது.

- Advertisement -

உங்கள் உடம்பில் எதிர்மறை சக்தி தங்காது. கண்ணுக்குத் தெரிந்த சில பாதிப்புகளிலிருந்தும், சில பிரச்சனைகளில் இருந்தும் அந்த பைரவர் உங்களை எந்த ரூபத்திலாவது வந்து காப்பாற்றி விடுவார். பள்ளிக்கூடம் செல்லும் பெண் பிள்ளைகள், கல்லூரி செல்லும் பிள்ளைகள், வேலைக்கு செல்லும் திருமணம் ஆன பெண்கள் எல்லோருமே இந்த கயிறை கையில் கட்டிக் கொள்ளலாம். தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: செல்வ வளம் பெருக வெள்ளிக்கிழமை ஏற்ற வேண்டிய தீபம்

48 நாட்களுக்கு ஒரு முறை பழைய கயிறு கழட்டிவிட்டு மீண்டும் புதிய கயிறு கட்டிக்கோங்க. புது கயிறு கட்டும் போது அதே போல கோவிலுக்கு போய் இதே போல மந்திரத்தை சொல்லி முடிச்சு போட்டு கையில் கட்டிக்கணும். இந்த கயிறு அத்தனை சக்தி வாய்ந்தது. நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -