செல்வ வளம் பெருக வெள்ளிக்கிழமை ஏற்ற வேண்டிய தீபம்

mahalshmi4
- Advertisement -

எளிமையான இந்த ஒரு வழிபாடு போதும். எந்த ஒரு தடையும் இல்லாமல் உங்களுடைய வீட்டிற்கு செல்வம் தானாக வந்து சேரும். சில பேருக்கு ஜாதக ரீதியாக பணக்கஷ்டம் வரும். கிரகங்கள் சரியான இடத்தில் அமராமல் பிரச்சனை தந்தால், கடன் பிரச்சனை தானாக நம் வீட்டிற்குள் வந்துவிடும். அப்படிப்பட்ட கிரக கோளாறுகளையும் சரி செய்யும் சக்தி இந்த வழிபாட்டுக்கு உண்டு.

வெள்ளிக்கிழமை மாலை இந்த விளக்கை ஏற்றி, எந்த வீட்டில் மகாலட்சுமியை வீட்டிற்குள் வர வைக்கிறார்களோ, அந்த வீட்டில் மகாலட்சுமி நிலையாக தங்குவாள். வெள்ளிக்கிழமை நம்முடைய வீட்டில் ஏற்ற வேண்டிய பணத்தடையை உடையக்க போகும் அந்த தீபம், எந்த தீபம் ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

பணக்கஷ்டத்தை தீர்க்கும் வெள்ளிக்கிழமை ஏற்ற வேண்டிய தீபம்

இந்த வழிபாட்டிற்கு நமக்கு இரண்டு மண் அகல் விளக்குகள் தேவை. வழக்கம் போல அதில் சந்தன குங்குமம் இட்டு, ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். விளக்கில் சுத்தமான நெய் ஊற்ற வேண்டும். விளக்கு திரியை எடுத்துக்கோங்க அதை கொஞ்சமாக மஞ்சள் கலந்த தண்ணீரில் போட்டு கலந்து நிழலிலேயே உலர வைத்து விடுங்கள்.

இந்த திரி தயார் செய்யும் வேலையை நீங்கள் முன்கூட்டியே செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மஞ்சள் திரியை நெய்விளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். மகாலட்சுமியே வருக வருக, வரலட்சுமி வருக வருக, என்ற வார்த்தைகளை சொல்லி இந்த விளக்கை ஏற்றி பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த விளக்கை சரியாக வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மேலாக வீட்டில் ஏற்ற வேண்டும். சூரியன் அஸ்தமான பிறகு இந்த விளக்கை வீட்டில் ஏற்றி வைத்து சிறிது நேரம் பூஜை அறையில் அமர்ந்து வீட்டில் இருக்கும் பெண்கள் மகாலட்சுமியை நினைத்து மனம் உருகி பிரச்சனைகள் எல்லாம்.

எளிமையான வழிபாடு இந்த வழிபாட்டை நீங்கள் செய்தாலே போதும். வீட்டில் கடன் தங்கவே தங்காது. வீட்டிற்குள் செல்வம் வந்து கொண்டே இருக்கும். யார் தடுத்தாலும் வீட்டுக்கு வர வேண்டிய பணத்தை தடுத்து நிறுத்த முடியாது. இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு பத்து நிமிடமாவது பூஜை அறையில் அமைந்து மகாலட்சுமிக்கு விருப்பமான மந்திரங்கள், பாடல் வரிகளை உங்கள் வாயால் படிங்க அது இன்னும் ரொம்ப ரொம்ப நல்லது.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக மூன்றாம் பிறை வழிபாடு

படிக்கத் தெரியாதவர்கள் கைபேசியில், டிவியில் பாடல்களை ஒலிக்க விடலாம். படிக்கத் தெரியும் என்பவர்கள் மகாலட்சுமிக்காக 10 நிமிடம் நேரத்தை ஒதுக்கி மகாலட்சுமி பாடல் வரிகளை மந்திரங்களை படிப்பது சிறப்பான பலனை தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -