இன்று விநாயகர் பூஜையின்போது கூறவேண்டிய மந்திரங்கள் எவை தெரியுமா ?

pillayar-2
- Advertisement -

பொதுவாக நாம் இறைவனை வணங்கும்போது அவரை போற்றும்படியான மந்திரங்களையும், நம் குறைகள் அனைத்தையும் அவர் தீர்க்க வேண்டும் என்ற பிராத்தனைக்குரிய மந்திரங்களையும் நாம் ஜபிப்பது வழக்கம். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி அன்று நாம் வீட்டில் பூஜை செய்யும்போது எந்தெந்த மந்திரங்களை கூறுவது சிறந்தது என்று பார்ப்போம் வாருங்கள்.

manjal-pillaiyar1

ஸ்லோகம்
விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான்;-விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணியின் கனிந்து

- Advertisement -

pillaiyar1

வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

poo vizhungi vinayagar

விநாயகர் சகஸ்ரநாமம்

- Advertisement -

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

ஸ்லோகம்:

- Advertisement -

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

ஸ்லோகம்:

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

vinayagar6

ஸ்லோகம்:

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே

ஸ்லோகம்:

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.

காரியங்கள் சிறிதோ பெரிதோ அவை எந்த விதமான தடங்கல்களோ, தாமதங்களோ இல்லாமல் முழுமையாக பூர்த்தியடைய கூற வேண்டிய விநாயகர் மந்திரங்கள் இவை. விநாயகரை போற்றும் இந்த மந்திரங்களை விநாயகர் சதுர்த்தி தினம் தொடங்கி வாரத்தின் அனைத்து நாட்களிலும் நாட்களிலும் காலை 6 மணியிலிருந்து 9 மணிக்குள்ளாக விநாயகருக்கு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, இந்த மந்திரங்களை மனமொன்றி துதிக்க நீங்கள் எண்ணிய காரியங்கள் ஈடேறும். நீங்கள் தொடங்கவிருக்கும் எத்தகைய காரியங்களும் தடைகள், தாமதங்கள் இன்றி சிறப்பாக முடியும். நவகிரக தோஷங்கள் நீங்கி வாழ்வில் நன்மையான பலன்கள் உண்டாகும்.

vinayagar

பிரபஞ்சம் மற்றும் அண்ட சராசரங்கள் முழுவதும் ஒரு விதமான சக்திமிக்க ஒலி அதிர்வுகள் நிறைந்திருக்கிறது. அது ஓம் எனும் பிரணவ மந்திர ஒலியாகும். இந்த ஓம் எனும் பிரவணத்தின் முழு உருவமாக இருப்பவர் தான் சிவபெருமானின் மூத்த தவ புதல்வனான விநாயக பெருமான். இவருக்கு “கணபதி, ஆனைமுகன்” என வேறுபல பெயர்களும் உண்டு. தன்னை பணிவுடன் வணங்குபவர் எவராக இருப்பினும் அவர்களுக்கு அனைத்தையும் வழங்குபவர் விநாயக பெருமான்.

இதையும் படிக்கலாமே:
செவ்வாய் கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றிய பின் கூறவேண்டிய மந்திரம்

- Advertisement -