மகாலட்சுமி அருளோடு சுக்கிரனின் கடைகண் பார்வையும் உங்க மேல் பட வெள்ளிக்கிழமை தவறாமல் இதை முடிச்சாக கட்டி வைத்து விடுங்கள். அப்புறம் என்ன ஜாக்பாட் அடுத்தது போல பண மழையில் நனைவீர்கள்.

mahalshmi cash ghee
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் ஒலிக்கும் வார்த்தை பணம் தான். பணம் பத்தும் செய்யும் என்று நிலைமை மாறி பணம் இல்லை என்றால் இன்று ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இந்த பணத்தை சம்பாதிக்க நாம் என்ன தான் பாடுபட்டாலும் கூட அதை தக்க வைத்துக் கொள்ளவும், அதை மென்மேலும் பெருக்கிக் கொள்ளவும் நமக்கு மகாலட்சுமி தாயாரின் அனுகிரகமும், சுக்கிர பகவானின் கடைக்கண் பார்வையும் நம் மீது நிச்சயம் பட வேண்டும்.

பொதுவாகவே ஒருவர் நல்ல நிலைக்கு உயரும் போது அவரைப் பார்த்து அவருக்கு சுக்கிர திசை அடித்து விட்டது என்று சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அப்படியான சுக்கிர திசை நமக்கும் அடிக்க வேண்டும் என்றால் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் இந்த ஒரு காரியத்தை தவறாமல் செய்து வர வேண்டும் என்று ஆன்மீகம் வீட்டில் பண புழக்கம் அதிகரிக்க சொல்கிறது. அது என்னவென்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வீட்டில் பண வரவு தாராளமாக இருக்க சுக்கிர ஓரையில் செய்ய வேண்டியது
இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை அதாவது காலையில் ஆறு முதல் ஏழு மணிக்குள் செய்து முடித்து விட வேண்டும். இந்த பரிகாரம் செய்வதற்கு முதல் நாளே நல்ல வெண்மை நிறத்திலான ஒரு காட்டன் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். துணி சற்றும் கொஞ்சம் கூட மங்களாக இருக்கக் கூடாது பளிச்சென்ற வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும்.

இதை செய்வதற்கு முதல் நாளே மகாலட்சுமி தாயாரின் படத்தை சுத்தமாக துடைத்து மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து செந்தாமரை மலரை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை காலை குளித்து முடித்து பூஜை அறையில் வாசம் மிக்க மலர்களால் தாயாரை அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு சின்ன பவுலில் நிரம்பி வழியும் படி சர்க்கரையை குவித்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஆறு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து இந்த வெள்ளை துணியில் முடிச்சாக கட்டி அதை சர்க்கரையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

நெய்வேத்தியமாக ஒரு டம்ளர் பசும் பாலில் ஆறு டைமண்ட் கல்கண்டு போட்டு வைத்து விடுங்கள். இத்துடன் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக ஒரு அகல் தீபத்தில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஏலக்காய், ஒரு கிராம்பு கொஞ்சம் பச்சை கற்பூரம் இவை மூன்றையும் சேர்த்து பொடி செய்து அந்தத் தூளை விளக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் அன்றைய தின பூஜை முடிவு பெற்றது. இந்த சர்க்கரை, நாணய முடிச்சு அனைத்தும் பூஜை அறையில் இருக்கட்டும்.

அடுத்த நாள் இந்த வெள்ளை துணியில் இருக்கும் நாணயத்தை எடுத்து நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இந்த சர்க்கரை நீங்கள் சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

வெள்ளை நிற துணி, ஆறு ஒரு ரூபாய் நாணயம், டைமண்ட் கல்கண்டு, நாணயம் இவை அனைத்துமே சுக்கிர பகவானின் அனுகிரகம் பெற்றது. அத்துடன் ஏற்றப்படும் இந்த தீபம் மகாலட்சுமி தாயாரின் அனுகூலத்தை பெற்றது. இவைகள் அனைத்தும் ஒன்றாக இணையும் இடத்தில் பண வரவு தாராளமாகி உங்கள் குடும்பம் செல்வ செழிப்புடன் வாழ்வது உறுதி.

இதையும் படிக்கலாமே: செல்லும் பயணம் தடை இல்லாமல் வெற்றி பெற 9 மிளகை இப்படி செய்து விட்டு வீட்டை விட்டு கிளம்புங்க!

இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்து மகாலட்சுமி தாயார், சுக்கிர பகவான் இருவரின் அருளையும் பெற்று உங்கள் வாழ்க்கையில் எட்டாத உயரத்திற்கு சென்று வளமான வாழ்க்கையை வாழுங்கள்.

- Advertisement -