மரணம் நெருங்கி விட்டதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன? சிவபுராணம் கூறும் இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கும் தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!

sivan-eman
- Advertisement -

ஒவ்வொரு சாஸ்திரமும், ஒவ்வொரு வகையான விசித்திரமான முடிச்சுகளை நமக்கு அவிழ்த்து காட்டுகிறது. ஜோதிட சாஸ்திரங்களில் மனிதனின் பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய எண்ணற்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் சிவபுராணத்தில் ஒரு மனிதனுக்கு மரணம் நெருங்குவதை உணர்த்தும் அறிகுறிகள் கூறப்பட்டுள்ளன. அவை என்னென்ன? ஒரு மனிதன் இறப்பதற்கு முன்பு அவனுக்கு என்னென்ன அறிகுறிகள் எல்லாம் வரக்கூடும்? என்பதை அறிந்து கொண்டால் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? வாருங்கள் அதைப் பற்றிய சுவாரசிய ஜோதிட தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

சிவபுராணத்தில் ஒரு மனிதன் திடீரென வானத்தில் துருவ மற்றும் ஏனைய எந்த நட்சத்திரத்தையும் பார்க்க முடியாத ஒரு நிலையானது மரணத்தை நெருங்குவதாக கூறுகிறது. மேலும் பகலில் விண்கல் மழையும், இரவில் வானவில்லும் தோன்றுவதும், கழுகு, காகம் போன்றவை தொடர்ந்து உங்களை சூழுவதும் மரணத்தை நெருங்கும் அறிகுறிகள் ஆகும்.

- Advertisement -

ஒரு மனிதனுடைய இடது கையில் பிடிப்பு போல திடீரென ஏற்பட்டால் ஒரு மாதத்தில் அவர்களுடைய மரணம் நிகழ வாய்ப்புகள் இருப்பதாகவும் சிவபுராணம் கூறுகிறது. அது மட்டும் அல்லாமல் மனிதனுடைய கண், வாய், மூக்கு மற்றும் நாக்கு இவற்றை செயல்படுத்துவதில் அல்லது பயன்படுத்துவதில் சிரமம் தொடர்ந்து இருந்தால் அவர்களின் மரணமும் விரைவில் நிகழுமாம்.

நம்முடைய முகம் ஆனது தண்ணீர், முகம் பார்க்கும் கண்ணாடி மற்றும் எண்ணெய் ஆகியவற்றில் பிரதிபலிப்பது இயற்கையான ஒரு விஷயம். இந்த இயற்கைக்கு முரணாக திடீரென நம்முடைய முகத்தை இவற்றில் பார்க்க முடியாவிட்டால் நாம் ஆறு மாதத்தில் இறந்து விட வாய்ப்புகள் உள்ளதாக சிவபுராணம் கூறுகிறது. சூரியன், சந்திரன் ஆகியவற்றை எல்லா திசைகளிலும் பார்ப்பவர்கள் அல்லது கருப்பாக அவற்றை தரிசிப்பவர்கள் மிக விரைவிலேயே இறந்து விட கூடும் என்றும் கூறுகிறது.

- Advertisement -

ஒரு மனிதனுக்கு யார் தன்னுடன் இல்லாவிட்டாலும், தன் நிழல் ஆனது எப்பொழுதும் இருக்கும். ஆனால் இந்த நிழல் கூட உங்களை விட்டு பிரிய நேர்ந்தால் விரைவில் மரணம் நிகழ்வதாக கூறப்படுகிறது. எல்லா நிறங்களை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்படுபவர்கள் அல்லது எல்லா நிறங்களும் கருநிறங்களாக பார்க்க நேர்ந்தால் உங்களுடைய மரணம் நெருங்குவதாக நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

நம் வீட்டில் எப்பொழுதும் ஈக்கள் சுற்றுவது வழக்கம். அந்த ஈக்கள் கரு நிறத்தில் இருக்கும் ஆனால் மரணம் நெருங்கும் ஒருவரை நீல நிற ஈக்கள் சூழுவதாக அறிகுறிகள் தோன்றமாம்! இந்த அறிகுறி உங்களுக்கு தோன்றினால் உங்களுடைய மரணம் மிகவும் அருகாமையில் இருப்பதை நீங்கள் உணரலாம். மனித உடலில் வாதம், கபம், பித்தம் ஆகிய இந்த மூன்று தோஷங்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் உங்களுடைய மரணம் நெருங்கி விட்டதை நீங்கள் அறியலாம்.

இதையும் படிக்கலாமே:
உங்களுடைய படுக்கை அறை இப்படி இருந்தால் கணவன் மனைவிக்குள் சண்டை தான் வருமாம் தெரியுமா? தம்பதியர் ஒற்றுமைக்கு படுக்கை அறையில் செய்யக்கூடாத விஷயங்கள்!

உடல் திடீரென வெண்மையாக மாறி அதில் சிவப்பு அல்லது மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றினால் மரணம் நெருங்குவதாக சிவபுராணம் கூறுகிறது. இப்படி ஒவ்வொரு அறிகுறிகளும் நம்முடைய மரணத்தை அருகாமையில் இருப்பதை உணர்த்துவதாக சிவபுராணம் எடுத்துரைக்கிறது. அது மட்டும் அல்லாமல் ஒருவருடைய மரணம் நிகழ்வதற்கு முன்னர் கண்டிப்பாக அவர்களுக்கு இதுவரை நடக்காத, ஏதோ ஒரு விஷயம் நடப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

- Advertisement -