உங்களுடைய படுக்கை அறை இப்படி இருந்தால் கணவன் மனைவிக்குள் சண்டை தான் வருமாம் தெரியுமா? தம்பதியர் ஒற்றுமைக்கு படுக்கை அறையில் செய்யக்கூடாத விஷயங்கள்!

couple-fight-bedroom
- Advertisement -

வீட்டில் எத்தனை அறைகள் இருந்தாலும், படுக்கை அறை மட்டுமே கணவன் மனைவிக்கு உரிய இடமாக இருக்கிறது. இந்த அறையில் அவர்கள் அமைதியான சூழ்நிலையில் இருந்தால் தான் அவர்களுடைய குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் இருக்கும். வாஸ்து ரீதியாகவும், படுக்கை அறை இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற அமைப்பு உண்டு. அந்த ரீதியில் நீங்கள் படுக்கை அறை அமைத்திருந்தால் கிடைக்கக்கூடிய நன்மைகளையும் பார்த்திருக்கக்கூடும். படுக்கை அறையில் செய்யக்கூடாத சில விஷயங்கள் என்ன? இதனால் தம்பதியர் ஒற்றுமைக்கு ஆபத்து வருமா? என்பது போன்ற தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

படுக்கை அறையில் செய்யக்கூடாத விஷயங்களில் ஒன்று அங்கு சுவாமி படங்களை மாட்டி வைப்பது ஆகும். சுவாமி படங்கள் மற்றும் அல்லாமல் படுக்கை அறையில் பெரிய அளவிலான முகம் பார்க்கும் கண்ணாடிகள் மற்றும் மீன் தொட்டிகள் போன்றவையும் அமையப் பெறக் கூடாது. இவைகள் மூன்றாம் மனிதர் நம்மை பார்ப்பது போலவே தோற்றம் தரும். படுக்கை அறை எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் சுவாமி படங்களை வைப்பது துரதிருஷ்டத்தை கொடுக்கும்.

- Advertisement -

முகம் பார்க்கும் கண்ணாடிகள் இருந்தாலும் அதற்கு திரையிட்டு மூடப்பட்டிருக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் மீன் தொட்டிகள் அங்கு வைப்பதும் நல்லதல்ல. மீன் தொட்டிகளை வரவேற்பறையில் வைப்பது தான் சிறந்த முறையாகும். படுக்கை அறையில் நீல நிறம் அல்லது இளம் பச்சை நிறம் கொண்ட சுண்ணாம்பு அடிப்பது மனதிற்கு இதமான ஒரு உணர்வை கொடுக்கும். இதனால் தம்பதியருக்குள் ஒற்றுமை வலுவாகும்.

அது மட்டும் அல்லாமல் படுக்கை அறையில் நீங்கள் சிறு விளக்குவது எரிய விட்டிருக்க வேண்டும். கொஞ்சம் கூட வெளிச்சம் இல்லாமல் படுக்கையறையில் உறங்க கூடாது. சிலர் தூக்கம் வராது என்பதற்காக இப்படி கொஞ்சம் கூட வெளிச்சம் இல்லாத நிலையை உருவாக்கி வைத்திருப்பார்கள். இது முற்றிலும் தவறான செயல் ஆகும். இதனால் தம்பதியருக்குள் அடிக்கடி சண்டைகள் வரக்கூடும். ஜீரோ வாட்ஸ் பல்புகள் பொருத்தப்பட்டிருந்தால் அதில் நீலம் அல்லது அடர் மஞ்சள் நிற ஒளியை ஏற்படுத்துவது நல்லது. இது கணவன் மனைவிக்குள் அன்னோன்யத்தை அதிகரிக்க செய்யும் ஒரு நிறமாக இருக்கிறது.

- Advertisement -

படுக்கை அறையில் இருக்கும் படுக்கை விரிப்புகள் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். சிலர் மாதத்திற்கு ஒருமுறை தான் படுக்கை விரிப்புகளை துவைக்கிறார்கள். இப்படி செய்யவே கூடாது. வாரம் இரண்டு முறையாவது படுக்கை விரிப்பு, தலையணை உறைகளை துவைத்து சுத்தமாக வைத்திருக்கவும். இதனால் தம்பதியருக்குள் ஒற்றுமை அதிகரிக்குமாம். அடிக்கடி சண்டை போடுபவர்கள் இப்படி செய்து பாருங்கள், நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

இதையும் படிக்கலாமே:
அதிர்ஷ்டம் தரும் பொருட்களில் இதுவும் ஒன்று! இந்த 1 பொருள் உங்கள் வீட்டில் இருந்தால் பணத்திற்கு பஞ்சமே வராதாம் தெரியுமா?

எல்லோருடைய இல்லங்களிலும் போதுமான இடம் இருக்கும் என்பது கிடையாது. இருக்கும் இடத்தில் தான் பொருட்களை வைக்க வேண்டி இருக்கும். எப்படி இருந்தாலும் படுக்கை அறையில் கட்டிலை சுற்றிலும் சிறு இடைவெளியாவது விட்டு வைத்திருக்க வேண்டும். சுவற்றை ஒட்டி படுக்கை அறையை அமைப்பது தம்பதியர் ஒற்றுமைக்கு இடையூறு ஏற்படுத்தும். அறையைச் சுற்றிலும் இருக்கும் சுவர்களில் கலைநயமிக்க ஓவியங்கள், குதிரை படங்கள், இரண்டு வாத்துகள் ஒன்றாக இருப்பது போல படங்களை வைப்பது அதிர்ஷ்டம் தருபவையாக இருக்கின்றன. இப்படி உங்களுடைய படுக்கை அறையை சிறிது மாற்றிப் பாருங்கள், சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள் கூட, சமாதானமாய் போய்விடுவார்கள்.

- Advertisement -