நாளை மைத்ரேய முகூர்த்த பரிகாரம்

ant
- Advertisement -

நாளைக்கு அப்படி என்ன சிறப்பு இருக்குது. நாளை மார்கழி மாதம் முதல் வெள்ளிக்கிழமை. அடுத்தபடியாக நாளைய தினம் மைத்ரேய முகூர்த்தம் வரவிருக்கிறது. அந்த மைத்ரேய முகூர்த்தம், வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையோடு சேர்ந்து வந்திருக்கிறது, ஆக இந்த நேரத்தை நாம் சரியாகப் பயன்படுத்தி வேண்டுதல் வைத்தால், கடன் பிரச்சினையில் இருந்து வெளிவர நிறைய வாய்ப்புகளை இந்த பிரபஞ்சம் நமக்கு காட்டி கொடுக்கும்.

நாளை இந்த மைத்ரேய முகூர்த்தம் எப்போது வருகிறது, இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தை நாம் எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம். தெரிந்து கொள்ள ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படிப்போம் வாருங்கள்.

- Advertisement -

கடன் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்த நேரம்

சில பேருக்கு இந்த மைத்ரேய முகூர்த்தத்தை பற்றி தெரிந்திருக்கும். சில பேருக்கு தெரிந்திருக்காது. வாங்கிய கடனை எல்லாம் திருப்பி கொடுக்க அந்த காலத்திலேயே சித்தர்கள் கண்டுபிடித்து வைத்திருந்த நேரம் தான் இந்த மைத்ரேய முகூர்த்த நேரம். இந்த நேரத்தில் நீங்கள் வாங்கிய கடனை, திருப்பிக் கொடுத்தால் கடன் பிரச்சனை சீக்கிரம் குறையும் என்பது இதனுடைய நம்பிக்கை.

வாங்கிய முழு கடனையும் திருப்பிக் கொடுக்க முடியவில்லை என்றாலும், ஒரு சிறு தொகையாவது இந்த நேரத்தில் திருப்பிக் கொடுக்கும் பட்சத்தில் அந்த கடன் விறுவிறுன்னு அடைந்து விடும். சரி நாளைக்கு மைத்ரேய முகூர்த்த நேரம் எப்போது வருகிறது? 22-12-2023 ஆம் தேதி மதியம் 1.28 முதல் 3.15 மணி வரை மைத்ரேய முகூர்த்தம் இருக்கிறது.

- Advertisement -

வாய்ப்பு கிடைத்தவர்கள் இந்த நேரத்திற்குள் நீங்கள் யாரிடம் கடன் வாங்கினீங்க, அவங்களுக்கு ஒரு சிறு தொகையை திருப்பிக் கொடுத்துப் பாருங்கள். நடக்கும் அதிசயத்தை பிறகு நீங்களே தெரிந்து கொள்ளலாம். சரி, வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரை 1.00 மணியிலிருந்து 2.00 மணி வரை இருக்கிறது அல்லவா. இதுவும் இந்த மைத்ரேய நேரத்தோடு சேர்ந்து இருக்கிறது.

சரியாக இந்த சமயத்தில் நாம் எறும்புகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். எப்படி தெரியுமா? மதியம் 1:30 மணியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். மதியம் 2.00 மணிக்குள் உங்கள் வீட்டு பக்கத்தில் பழமையான சிவன் கோவில் இருந்தால் அங்கு இருக்கும் மரத்தடியில் ஒரு கைப்பிடி பச்சரிசி மாவு, 1 கைப்பிடி சர்க்கரையை போட்டு, கலந்து தூவி விடுங்கள்.

- Advertisement -

கடன் தீர வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டே இந்த தானத்தை நீங்கள் செய்து விட வேண்டும். அவ்வளவுதான். உங்களுடைய கோடிக்கடனும் ஓடிப்போகும். வீட்டு பக்கத்தில் சிவன் கோவில் இல்லை. நாங்கள் வேலைக்கு செல்கின்றோம். நாங்கள் என்ன செய்வது. உங்கள் அலுவலகம் பக்கத்திலேயே ஏதாவது மரம் செடி கொடி இருக்கும் இடத்தில் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமியை வரவேற்க நிலை வாசலில் தெளிக்க வேண்டிய தண்ணீர்

அலுவலகம் செல்லும்போது ஒரு கைப்பிடி பச்சரிசி மாவையும், ஒரு கைப்பிடி சர்க்கரையும் கலந்து பேப்பரில் மடித்து எடுத்து போய், பரிகாரத்தை செய்யவும். இந்த நேரத்தில் நீங்கள் எறும்புக்கு செய்யக் கூடிய தானம், கடனை குறைக்கும். பணம் சம்பந்தப்பட்ட கடனை மட்டும் குறைப்பதோடு அல்லாமல், உங்களுடைய பிறவி கடனையும் அடைக்க கூடிய சக்தி இந்த தானத்திற்கு உண்டு. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த பரிகாரங்களை பின் பற்றி பலன் பெரலாம்.

- Advertisement -