நாளை மார்கழி மாத வளர்பிறை அஷ்டமி திதி வழிபாடு

bairava1
- Advertisement -

மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாளுமே சிறப்பு வாய்ந்த நாள் தான். அதிலும் கூடுதலாக அந்த நாட்களை, மேலும் சிறப்பாகச் செய்ய சில விசேஷ திதிகள் சேர்ந்து வந்தால், சொல்லவே வேண்டாம். இரட்டிப்பு பலன் தான் நமக்கு. அந்த வகையில் நாளைய மார்கழி மூன்றாவது நாளை, சிறப்பாக மாற்ற வளர்பிறை அஷ்டமி திதியும் சேர்ந்து வந்திருக்கின்றது.

அது மட்டும் கிடையாது. இந்த அஷ்டமி திதியோடு சனி பெயர்ச்சியும் சேர்ந்து வந்திருக்கிறது. இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய ஆன்மீக வழிபாடு பற்றிய தகவலை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

மார்கழி மாத வளர்பிறை அஷ்டமி திதி வழிபாடு

இந்த அஷ்டமி திதியானது 19.12.2023 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 3.51 மணிக்கு பிறந்து, அடுத்த நாள் புதன்கிழமை மதியம் ஒரு 1.34 நிமிடங்கள் வரை அஷ்டமி திதி இருக்கின்றது. சனிப்பெயர்ச்சியானது 20.12.2023 புதன்கிழமை பெயர்ச்சியாக இருக்கின்றது. ஆகவே நம்முடைய வாழ்வில் வளம் பெறவும் இந்த வளர்பிறை அஷ்டமி திதி வழிபாட்டை செய்யணும்.

சனி பகவான் பெயர்ச்சியாக போகின்றார். அந்த பெயிர்ச்சியின் மூலம் நமக்கும் நம்முடைய குடும்பத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று வேண்டியும் இந்த காலபைரவரை நாம் வழிபாடு செய்யலாம். காலத்தால் வரக்கூடிய பிரச்சினைகளை கட்டுப்படுத்தும் சக்தி இந்த காலபைரவருக்கு உண்டு. கர்ம வினையால் உங்களை தொடரக்கூடிய பிரச்சனைகளை தவிர்க்கும் சக்தியும் இந்த கால பைரவருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சரி இந்த வழிபாட்டை எப்படி செய்வது? செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு மேலாகவே பைரவர் சன்னிதானம் இருக்கும் ஆலயங்களில் சிறப்பு வழிபாட்டு பூஜைகள் நடைபெறும். அதில் கலந்து கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை மாலை 2 மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் கொஞ்சமாக கருப்பு எள்ளு போட்டு, பஞ்சி திரி போட்டு விளக்கு ஏற்றி பைரவர் சன்னதிக்கு முன்பாக வைத்து விடுங்கள்.

பைரவரின் முன்பு அமர்ந்து உங்கள் வாழ்க்கை மேலும் மேலும் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும், மேலும் மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும், வேலையில் பிரமோஷன் கிடைக்க வேண்டும். படிப்பில் மேலே உயர்ந்து செல்ல வேண்டும், மேல்படிப்பு கிடைக்க வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று மாணவர்கள் வேண்டிக் கொள்ளலாம்.

- Advertisement -

இப்படி முன்னேற்றத்திற்கு தேவையான வேண்டுதலை இந்த வளர்பிறை அஷ்டமி திதியில் பைரவரிடம் வைத்தால் உங்களுடைய முன்னேற்றம் பல மடங்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. கூடுதலான இன்னொரு விஷயம் என்னவென்றால் இன்று நாம் எள்ளு போட்டு தீபம் ஏற்றி வைத்திருக்கின்றோம். சனிபகவானால், சனி பெயர்ச்சியால் எங்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் பாதிப்பு வரக்கூடாது என்று இந்த வளர்பிறை திதியில் காலபைரவரை நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: கோவில் வாசல் படியை தொட்டு கும்பிடுவதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை

சனிப்பெயர்ச்சி மூலம் உங்களுக்கு பிரச்சனைகள் வரும் என்ற சூழ்நிலை இருந்தால் கூட, வரக்கூடிய பிரச்சினைகள் இருந்து உங்களை காப்பாற்ற கால பைரவர் காவல் தெய்வமாக நிற்பார் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -