நாளை 16/12/2022 மார்கழி ஒன்றாம் நாள் வாழ்க்கை இனிக்க தவறாமல் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் என்னென்ன?

kolam
- Advertisement -

மார்கழி மாதம் துவங்கி விட்டாலே இறை வழிபாடுகளுக்கு பஞ்சம் இருக்காது. எல்லா நாளும் மார்கழியில் இறைவனுக்கு உரிய நாட்களாக சாஸ்திரங்கள் குறிப்பிட்டு கூறுகிறது, எனவே மார்கழி மாதம் முழுவதும் நீங்கள் இறை வழிபாடு, தியானம் மேற்கொள்ளுதல், மந்திரங்கள் ஓதுதல் போன்ற விஷயங்களை செய்து வந்தால் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் நிகழும் என்பது ஐதீகம். அந்த வகையில் நாளை துவங்க இருக்கும் மார்கழி மாதம் முதல் நாளில் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் ஆன்மீக தகவல்களாக தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மார்கழி மாத முதல் நாளில் கண்டிப்பாக பிரம்ம முகூர்த்தத்தில் எழுவது சிறப்பிற்கு உரிய விஷயமாக கருதப்படுகிறது. நீங்கள் மார்கழி முதல் நாள் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தூய காற்றை சுவாசித்தால், அடுத்த ஒரு வருட காலத்திற்கு உங்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கும். குறிப்பாக ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் படிப்படியாக குறைய துவங்கும். மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து பெரிய பெரிய வண்ணக் கோலங்களை போட வேண்டும். இதனால் குடும்பத்தில் ஐஸ்வர்யங்கள் நிலைக்கும், மகாலட்சுமி அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

மார்கழியில் செய்ய வேண்டியவை | Margazhiyil seiyya vendiyavai
மார்கழி முதல் நாளில் நீங்கள் காலையிலேயே குளித்து பூஜை அறையில் சுத்தபத்தமாக ரெண்டு நெய் விளக்குகளை மகாலட்சுமியின் முன்பு ஏற்றி வழிபட்டு வந்தால் சகல செல்வங்களும் உங்களுக்கு கிட்டும் என்பதும் ஐதீகம். அது போல அதிகாலையிலேயே தானம் செய்வதும் மிகப் பெரிய விஷயமாக கருதப்படுகிறது. மார்கழி மாதத்தில் செய்யும் ஒவ்வொரு தானத்திற்கும் இரட்டிப்பு பலன்கள் கிடைப்பதாக சாத்திரங்கள் குறிப்பிடுகிறது. அந்தந்த மாதத்திற்கு உரிய தானங்களை செய்யும் பொழுது ரொம்பவே விசேஷமான பலன்களை கொடுக்கும்.

அந்த வகையில் மார்கழி மாதத்தில் தெரு ஓரங்களில், பிளாட்பாரங்களில் வீடு வசதி இல்லாதவர்களுக்கு கம்பளி போர்வை தானம் கொடுத்தால் குடும்பத்தில் ஒற்றுமையும் பொருளாதார ரீதியான முன்னேற்றமும் உயரும் என்பது ஐதீகம். வாழ்க்கையில் சிறப்பான இடத்திற்கு செல்ல வேண்டும், எதையாவது சாதிக்க வேண்டும் என்ற முனைப்போடு தங்களுடைய வாழ்க்கை பயணத்தை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் காலையில் எழுந்ததும் யாராவது ஒருவருக்கு அன்னதானம் செய்யுங்கள்.

- Advertisement -

உங்களால் முடிந்தால் எவ்வளவு பேருக்கு வேண்டுமானாலும், நீங்கள் அன்னத்தை தானம் செய்யலாம். இது சிறப்பான பலனை கொடுக்கும். தானம் செய்த பின்பு வீட்டில் அல்லது கோவிலில் விநாயகருக்கு தாமரை தண்டு திரியினால் அரச இலையின் மீது தீபம் வைத்து ஏற்றி வழிபட வேண்டும். இது வெற்றி மேல் வெற்றிகளை குவிக்கும் எளிய பரிகாரமாக இருக்கிறது. இதை மார்கழி மாதத்தில் செய்வது வெற்றி விநாயகரின் அருளை நமக்கு பரிபூரணமாக கொடுக்கும்.

மேலும் மார்கழி மாதத்தில் தினமும் ஒருவேளை உபவாசம் இருந்து உங்களுடைய இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வத்தை வேண்டி வழிபடலாம். மேலும் அவர்களுக்கு பிடித்த நைய்வேத்தியங்களை படைத்து வாரம் ஒரு முறையாவது சிறப்பு பூஜைகள் செய்யலாம். விஷ்ணு சஹஸ்ரநாமம், மகாலட்சுமி போற்றி, அபிராமி அந்தாதி, கந்த சஷ்டி கவசம் போன்றவற்றை வீடுகளில் ஒலிக்க விடுவதும் அல்லது நீங்கள் வாயால் அதை உச்சரிப்பதும் மிகப் பெரிய பலன்களை உங்களுக்கு கொடுக்கும். இவை நீங்கள் வேண்டிய வேண்டுதல்களை தடை இல்லாமல் பலிக்கச் செய்யும் அற்புத மந்திரங்கள் ஆகும்.

- Advertisement -