மார்கழி மாதம் சனிக்கிழமை இதை செய்தால் அந்த பெருமாளே நேரில் வந்து உங்கள் கடனை எல்லாம் அடைத்து விடுவார்.

perumal
- Advertisement -

இந்த ஜென்மத்தில் நாம் கைநீட்டி பணமாக வாங்கிய கடன் அடையவும் இந்த வழிபாட்டை செய்யலாம். ஏழேழு பிறவியில் செய்த பாவத்திற்கு உண்டான, பிறவி கடனை அடைப்பதற்கும் இந்த வழிபாட்டை செய்யலாம். ஆமாங்க, இந்த மார்கழி வடிபாடு என்பது ஒரு மனிதனுக்கு புண்ணியத்திற்கு மேல் புண்ணியத்தையும் சேர்க்கும். செய்த பாவத்திற்கு உண்டான தண்டனையையும் கழித்துக் கொண்டே வரும். அதேசமயம் நீங்கள் வாங்கிய கடனையும் படிப்படியாக திருப்பி அடைக்க நிறைய வாய்ப்புகளை தேடி தரும். நம்முடைய கஷ்டத்தை தீர்க்க போகும் மார்கழி மாத சனிக்கிழமை பெருமாள் வழிபாடு பற்றிய ஆன்மீக தகவல் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கடன் தீர மார்கழி மாதம் பெருமாள் வழிபாடு 
நாளை மார்கழி மாதத்துனுடைய முதல் சனிக்கிழமை. நாளை மட்டும் தான் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும் என்பது கிடையாது. இந்த மார்கழி மாதம் முழுவதும் வரக்கூடிய சனிக்கிழமை அன்று இந்த வழிபாட்டை மேற்கொண்டால், ரொம்பவும் நல்லது. மார்கழி மாதம் அதிகாலை வேலையிலேயே எழுந்து குளித்து விட வேண்டும். பெருமாள் கோவில் காலை 5 மணிக்கு முன்பாகவே திறக்கப்படும்.

- Advertisement -

காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். வீட்டிலிருந்து இந்த முடிச்சை தயார் செய்து எடுத்துச் செல்லுங்கள். பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை வேண்டி ஒரு மஞ்சள் நிற துணியில் 2 ஏலக்காய், 2 துளசி இலை, ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரம், இந்த மூன்று பொருட்களையும் வைத்து சின்ன முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சில் லட்சுமி தேவையும் அந்த பெருமாளும் நிறைவாக இருப்பார்கள். காரணம் இந்த மூன்று பொருட்களும் அவர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தமான பொருள். இந்த முடிச்சை கையில் வைத்துக் கொண்டே பெருமாள் கோவிலுக்கு சென்று 2 விளக்குகள் ஏற்றி வைத்து, பெருமாளிடம் உங்களுடைய வேண்டுதலை மனம் உருகி வையுங்கள். உங்களுக்கு பெரிய துன்பத்தை தரக்கூடிய எந்த கஷ்டமாக இருந்தாலும், அந்த கஷ்டம் சரியாக இந்த வழிபாட்டை செய்யலாம்.

குறிப்பாக கடன் பிரச்சனை உள்ளவர்கள், கடனை திருப்பித் தராமல் ரொம்ப நாட்களாக கஷ்டப்பட்டு வருபவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் உடனடியாக அவர்களுடைய கடன் தீருவதற்கு பெருமாள் எந்த ரூபத்தில் வந்தாவது உதவி செய்வார். கையில் இருக்கும் மஞ்சள் முடிச்சை வைத்துக் கொண்டே நீங்கள் பிரார்த்தனை வைக்கும் போது, உங்களை சுற்றி ஒரு நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இந்த பிரபஞ்சத்தினுடைய நல்ல சக்திகளை எல்லாம் ஈர்த்துக் கொடுக்கக்கூடிய சக்தி நீங்கள் கையில் வைத்திருக்கும் அந்த மஞ்சள் முடிச்சுக்கு உள்ளது.

- Advertisement -

அதிலும் இந்த மார்கழி மாதம் அதிகாலை வேலை தேவர்கள் சூழ, தேவதைகள் வருகையில் விடியும் அல்லவா. அந்த சமயம் மன நிறைவோடு இந்த பிரார்த்தனையை நீங்கள் வைக்கும் போது, அந்த பிரார்த்தனைக்கு இரட்டிப்பு பலன் உடனே கிடைத்துவிடும். சூரிய உதயத்திற்கு முன்பு பெருமாள் கோவிலுக்கு சென்று இந்த பிரார்த்தனையை முடித்துக் கொண்டு உங்கள் கையில் இருக்கும் முடிச்சைக் கொண்டு வந்து அப்படியே பணப்பெட்டியில் வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இந்த தீபம் ஏற்றும் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்குவதோடு, உங்கள் பண பிரச்சனைகள் யாவும் தீர்ந்து செல்வம் பெருகுவது உறுதி. இதை ஏற்ற வேண்டும் என்று நினைத்தாலே உங்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது என்று தான் அர்த்தம்.

அடுத்த வாரம் சனிக்கிழமை பழைய பொருட்களை எல்லாம் எடுத்து செடி கொடிகளுக்கு கீழே போட்டுவிட்டு மீண்டும் புதியதாக அந்த மூன்று பொருட்களை வைத்து பெருமாள் கோவிலுக்கு சென்று இதேபோல வழிபாடு செய்ய வேண்டும். மார்கழி மாதம் முடியும் வரை சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று இந்த முறைப்படி வேண்டுதல் வைத்தால் நீங்கள் வைக்கக் கூடிய வேண்டுதல் நிச்சயம் பலிக்கும். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. கலியுகத்தில் கடவுள்கள் அவதாரம் எடுத்து நேரில் வந்து உதவ மாட்டார். ஆனால் மனிதர்கள் ரூபத்தில் வந்து ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்ல வழியை காண்பிப்பார் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -