நினைத்ததை அப்படியே நடத்தித் தரும் மரிக்கொழுந்து.

marikozhunthu
- Advertisement -

எல்லாம் மனிதர்களுக்குமே மனதில் நினைத்ததை உடனுக்குடன் சாதித்து காட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் நாம் நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கும். நினைத்து நடக்காத போது, அந்த சமயத்தில் உடனே மனசு துவண்டு போகும். நம்முடைய வாழ்க்கையில் மட்டும் நல்லது நடக்கவில்லையே என்று உடனடியாக முயற்சிகளை கைவிட்டு விடுவோம். அப்படி செய்யக்கூடாது.

நினைத்த காரியத்தை சாதிக்க வேண்டும் என்ற விடாமுயற்சி ரொம்ப ரொம்ப முக்கியம். இப்போது உங்களுடைய மனதில் ஏதோ ஒரு நல்ல விஷயம் நினைக்கிறீங்க. அந்த நல்ல காரியம் நல்லபடியாக நடந்து முடிய வேண்டுமென்றால் என்ன செய்வது. ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிய பரிகாரம் இதோ உங்களுக்காக.

- Advertisement -

மனதில் நினைத்த காரியம் நல்லபடியாக நடக்க

இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு கட்டு மரிக்கொழுந்து, ஒரு எலுமிச்சம் பழம், ஒரு பேப்பர், ஒரு பேனா தேவை. முதலில் அந்த பேப்பரில் நீங்கள் நினைத்த நல்ல விஷயத்தை ஒரு வரியில் எழுதி விடுங்கள். உதாரணத்திற்கு நிறைய வருமானம் தேவை, கடன் பிரச்சனை தீர வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும்.

நல்ல திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என்னுடைய கணவர் கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் இப்படி உங்களுக்கு என்ன நல்லது நடக்கனும்னு, நினைச்சுகிட்டு இருக்கீங்களா. அந்த ஒரு கோரிக்கையை மட்டும் அந்த பேப்பரில் எழுதி நான்காக மடித்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த ஒரு கட்டு மரிக்கொழுந்துக்கு நடுவே, ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

மரிக்கொழுந்தை ஒரு நூல் போட்டு தான் கட்டி வைத்திருப்பார்கள். அதற்கு நடுவே இந்த எலுமிச்சம் பழத்தை வைத்தால் அப்படியே நிற்கும். கீழே விழாது. அந்த எலுமிச்சம் பழத்துடன் நீங்கள் எழுதி வைத்திருக்கும் அந்த பேப்பரையும் வைத்து அப்படியே உங்களுடைய கையில் இறுக்கி பிடித்துக் கொள்ளுங்கள். எதுவுமே கீழே விழக்கூடாது.

அந்த பேப்பரில் என்ன எழுதி வச்சிருக்கீங்களோ அதை உங்களுடைய மனதில் நினைத்து அந்த வேண்டுதல் சீக்கிரம் நிறைவேற வேண்டும் என்று பிரார்த்தனை வைக்கவும். ஐந்து நிமிடம் மனதார பிரார்த்தனை செய்து கையில் இருக்கும் இந்த கட்டை அப்படியே ஒரு டப்பாவிலோ, ஒரு கிண்ணத்திலோ போட்டு திறந்தபடி வைத்து விடுங்கள்.

- Advertisement -

வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் இந்த மரி கொழுந்து கட்டி இருக்கட்டும். யார் கண்ணுக்கும் தெரியாமல் அலமாரிக்கு மேல் பக்கத்தில் வைத்தாலும் தவறு கிடையாது. ஆனால் இதை மூடி போட்டு வைகாதீங்க. இதனுடைய வாசம் உங்கள் வீடு முழுவதும் நிரம்பி இருக்கட்டும். குறைந்தது மூன்று நாட்களில் இருந்து ஐந்து நாட்கள் வரை அந்த மரிக்கொழுந்தின் வாசம் உங்கள் வீட்டில் இருக்கும்.

இந்த ஐந்து நாட்களுக்குள்ளாகவே நீங்கள் அந்த பேப்பரில் எழுதி வைத்த கோரிக்கை நிறைவேற நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஒரு வேலை உங்களுக்கு அந்த கோரிக்கை ஐந்து நாட்களில் நிறைவேறவில்லை என்றாலும் பரவாயில்லை. இந்த பொருட்களை எல்லாம் எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். அந்த பேப்பரை கிழித்து குப்பையில் போட்டு விடுங்கள்.

ஒரு மூன்று மாதம் நீங்கள் அந்த பேப்பரில் எழுதிய கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதற்கு தேவையான முயற்சிகளில் ஈடுபடுங்கள். நிச்சயமாக வெற்றி காண்பீர்கள். நீங்கள் நினைத்த நல்லதை அந்த மரிக்கொழுந்திடம் சொல்லி விட்டீர்கள்.

இதையும் படிக்கலாமே: நல்ல வேலை கிடைக்க ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ வழிபாடு

நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு வெற்றி கொடுக்கக்கூடிய வேலையை அந்த வாசம் நிறைந்த மரிக்கொழுந்து பார்த்துக் கொள்ளும். அதற்கு அத்தனை சக்தி இருக்கிறது. நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலோடு ஆன்மீகம்< சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -