வீட்டில் வாட்டி வதைக்கும் பிரச்சனைகள் பறந்தோட சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம் என்ன தெரியுமா? இந்த மந்திரம் உச்சரிப்பவர்களுக்கு தோல்வியே கிடையாது!

mariyamman-manthiram
- Advertisement -

நம் குடும்பத்தில் வாட்டி வதைக்கும் பிரச்சனைகள் பலவை இருக்கின்றன. ஏதாவது ஒரு பிரச்சனை இல்லாமல் அன்றைய நாளை கடக்கவே முடியாது. தினம் தினம் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் நீங்கள், இந்த ஒரு எளிய மந்திரத்தை உச்சரித்தால் உங்களுக்கு இருக்கக்கூடிய அத்தனை பிரச்சனைகளும் மாயமாய் மறையும் அதிசயம் நடக்கும். அப்படியான மந்திரம் என்ன? இதை எப்படி உச்சரிக்க வேண்டும்? என்பதைத்தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

குடும்பத்தில் ஆரோக்கிய பிரச்சனை, பண பிரச்சனை, மணப்பிரச்சினை என்று எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கக்கூடும். இந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் எளிய மந்திரம் மாரியம்மன் உடைய மூல மந்திரம் ஆகும். கோவில் இல்லாத ஊரில் குடிகொள்ள கூடாது என்று கூறுவார்கள். ஊருக்கு ஊர் மழை வேண்டி மாரியம்மனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகிறார்கள். துன்பங்கள் யாவும் தொலையவும், வறுமை இல்லாமல் ஆரோக்கியமாக வாழவும் செய்யக்கூடிய இந்த மாரியம்மன் உடைய சக்தி வாய்ந்த மூல மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால் அவர்களுக்கு வந்த பிரச்சனைகள் யாவும் வந்த வழியே திரும்பும் என்பது ஐதீகம்.

- Advertisement -

மாரியம்மன் மூல மந்திரம்:
ஓம் பிசாசத்வஜாய வித்மஹே,
கட்க ஹஸ்தாய தீமஹி,
தன்னோ மாரி ப்ரசோதயாத்!!

தீவினை, துஷ்ட சக்திகள், திருஷ்டிகள் யாவும் நீங்க செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மன் வழிபடலாம். வெறும் வேப்பிலை கொத்தை வைத்து கேழ்வரகு கூழ் அல்லது பொங்கல் நைவேத்தியம் படைத்து தொடர்ந்து மாறி அம்மனை வழிபட்டு வருபவர்களுக்கு சகல தோஷங்களும் நீங்கும், சந்தோஷங்கள் வந்து சேரும். குடும்ப பிரச்சினைகள் தீரவும், நிம்மதி உண்டாகவும் அமாவாசையில் மாரியம்மன் வழிபடுவார்கள் அல்லது பௌர்ணமிகளிலும் நீங்கள் இது போல வழிபடலாம். தீராத நோயினால் அவதிப்படுபவர்கள், பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்சனைகளில் அல்லாடுபவர்கள், எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பவர்களும் மாரியம்மன் தொடர்ந்து வழிபடலாம்.

- Advertisement -

வியாபாரத்தில் போட்டிகள், சூழ்ச்சிகள் போன்றவற்றால் திக்குமுக்காடுபவர்கள் தொடர்ந்து மாரியம்மன் வழிபட்டு சிறிதளவு வேம்பினை உட்கொண்டு வரலாம். நோய் தாக்கங்கள் குறையவும் தினமும் வேம்பினை சிறிதளவு உட்கொண்டு வர வேண்டும். மாரியம்மன் வழிபாடு ரொம்பவே எளிய வழிபாடாக இருக்கிறது.

ஆடி மாதம் மாரியம்மனுக்கு மிகச் சிறந்த மாதமாக இருப்பினும் எல்லா நாட்களிலும் மாரியம்மனை வழிபடலாம். மாரியம்மன் கன்னிப் பெண்களுக்கு அதிகம் அருள் புரிபவர்களாக இருக்கின்றாள். ஆடி மாதம் வரும் பொழுது ஏழு கன்னி பெண்களுக்கு மஞ்சள் நிற புடவையை தானம் கொடுத்து மாரியம்மன் கூழ் ஊற்றி வழிபட்டு வரலாம். இதனால் அம்பாளுடைய முழு அருளையும் பெற்று இதுவரை பட்ட துன்பங்கள் யாவும் விலகுவதாக ஒரு நம்பிக்கை உண்டு.

இதையும் படிக்கலாமே:
இந்த 2 இலைகளை கையில் வைத்துக் கொண்டு, இந்த 2 எழுத்துக்களை உச்சரித்தால் போதும். உடம்பில் இருக்கும் கெட்டதும் மனதில் இருக்கும் கெட்டதும், வெகு தூரம் ஓடோடி விடும்.

திருமண வரன்கள் கைக்கூடி வரக்கூடிய யோகம் பெறவும் மாரியம்மனை வழிபடுவார்கள். விபத்துகள், பிரச்சனைகள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கவும் அம்மனை நாடி செல்வார்கள். உக்கிர தெய்வமாக இருப்பினும் மாரியம்மன் பக்தர்களுக்கு கேட்கும் வரங்களை அள்ளிக் கொடுக்கும் தாயாகவே காட்சி தருகிறாள். குடும்பத்தில் மறைமுக சூழ்ச்சிகள் செய்பவர்கள், துரோகம் செய்பவர்களை வீழ்த்தி நம்மை நர்கதியில் கொண்டு செல்லக்கூடிய சக்தி வாய்ந்த அம்மன் மாரியம்மன். வந்த துன்பங்கள் யாவும் பறந்தோட மாரியம்மன் வழிபட்டு அவருடைய மூல மந்திரத்தை செவ்வாய், வெள்ளியில் 108 முறை தவறாமல் உச்சரிக்கலாம்.

- Advertisement -