சனி மற்றும் செவ்வாய் தோஷம் நீங்க தீபம்

maruthani deepam
- Advertisement -

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏற்படக்கூடிய நன்மைக்கும் தீமைக்கும் நவகிரகங்களே காரணமாக விளங்குகின்றன. நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நவகிரகங்கள் நமக்கு பலன்களை தருகின்றன. அந்த வகையில் நம்முடைய கர்ம வினைகளின் காரணமாக நமக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய கிரகங்களுள் சனிபகவானும், செவ்வாய் பகவானும் திகழ்கிறார்கள். இவர்கள் இருவரின் தோஷத்தை குறைப்பதற்கு செய்ய வேண்டிய ஒரு எளிய தீப பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

சனிபகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்பது நாம் அனைவருக்கும் நம்முடைய வாழ்க்கையில் கண்டிப்பான முறையில் அனுபவித்த ஒன்றாகவே தான் இருக்கும். சனிபகவான் ஏழரை ஆண்டுகள் ஒருவருடைய ராசியில் இருந்து அவர்களின் வாழ்க்கையையே மாற்றக்கூடிய அளவிற்கு பலன்களை தரக்கூடியவராக திகழ்கிறார். மேலும் அவர் நீதிமானாகவும் திகழ்கிறார். நாம் செய்த தீவினைகளுக்கு ஏற்றவாறு நமக்கு பலன்களை கொடுத்து நம்மை அந்த தவறில் இருந்து திருத்தக்கூடிய அற்புதமான கிரகமாக தான் சனி பகவான் திகழ்கிறார்.

- Advertisement -

இதே போல் செவ்வாய் பகவானால் ஏற்பட்ட தோஷத்தால் திருமணத்தடை, குழந்தை பாக்கியம் என்று நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சுப காரியங்களில் தடைகள் ஏற்படும். மேலும் கடன் ரீதியான பிரச்சினைகளும் ஏற்படும். இவர்கள் இருவரின் தாக்கத்தையும் குறைப்பதற்கு தனி தனியாக பரிகாரங்களை செய்யாமல் ஒரே பரிகாரத்தை செய்ய முடியும்.

இந்த பரிகாரத்தை நாம் வளர்பிறையில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். வளர்பிறையில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று மருதாணி இலையை பறித்து தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். கெட்டியாக அரைக்க வேண்டும் என்பதால் முடிந்த அளவிற்கு அம்மிக்கல்லில் அறையுங்கள். மிக்சி ஜாரை பயன்படுத்த வேண்டாம். அரைத்த அந்த மருதாணி விழுதை விளக்கு போல் தயார் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

அந்த விளக்கை ஒரு சிறிய தாம்பாளத்தில் வைத்து அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் அதுவாக குளிரக்கூடாது சிறிது நெய் இருக்கும் பொழுதே இந்த தீபத்தை குளிர வைத்து விட வேண்டும். மறுநாள் காலை அதாவது சனிக்கிழமை அன்று இந்த மருதாணி விளக்கை அதில் இருக்கும் நெய்யுடன் சேர்த்து எடுத்து நம்முடைய உச்சம் தலையில் நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்களும், செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்களும், படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். மேலும் மருதாணி என்பது மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது என்பதால் செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் இருக்காது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்க தீப வழிபாடு

இப்படி தொடர்ந்து 9, 11, 15 வாரங்கள் மருதாணி இலையை பயன்படுத்தி தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

- Advertisement -