வறுமையை ஒட ஒட விரட்டி அடிக்க கூடிய இந்த தீபத்தை மாதம் ஒரு முறை வீட்டில் ஏற்றினாலே போதும். உங்கள் தலையெழுத்தையே மாற்றி செல்வந்தராக்க கூடிய வாய்ந்த தீபம்.

vilakku-kuberan-maruthani
- Advertisement -

வறுமை என்பது மிகக் கொடிய ஒரு வியாதியைப் போன்றது. இதன் வலியும் வேதனையும் அடுத்த வேளை என்ன செய்வது என்று புரியாத நிலையில் வாழுபவர்களுக்கு தான் தெரியும். இன்றளவும் பல குடும்பங்கள் பொருளாதார சூழ்நிலையில் பின் தங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே இல்லாமல் இருக்கிறார்கள். இவர்கள் எத்தனை பாடுபட்டும் அடுத்த கட்டத்தை அடைய முடியாத நிலையில் துன்பப்படுகிறார்கள்.

இந்த துன்பத்திலிருந்து மீண்டு வர மகா பெரியவா சொன்ன ஒரு அற்புதமான தீபமுறையை பற்றி தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த தீபத்தை மாதம் ஒரு முறை நாம் வீட்டில் ஏற்றி வரும் போது நம்முடைய வறுமை நிலை அடியோடு ஒழிந்து செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்று சொல்லப்படுகிறது. அந்த தீப பரிகாரத்தை பற்றி இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வறுமையை விரட்டி அடிக்க ஏற்ற வேண்டிய தீபம்
இந்த தீபத்தை ஏற்ற நமக்கு தேவையான முக்கிய பொருள் மருதாணி இலை. இந்த மருதாணி இலையானது மகாலட்சுமி தாயாரின் அம்சமாகவே போற்றப்படுகிறது. இந்த மருதாணியை பெண்கள் கையில் வைக்கும் பொழுது சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அப்படி ஒரு அற்புதமான இலையை வைத்து தான் இந்த தீபத்தை நாம் ஏற்ற போகிறோம்.

இந்த தீபம் ஏற்ற வியாழன் வெள்ளி அல்லது பௌர்ணமி தினம் மிகவும் சிறந்தது. இதற்கு ஒரு பித்தளை தட்டை சுத்தம் செய்து தட்டிற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு தட்டு முழுவதும் மருதாணி இலையை பரப்பி விட்டு அதன் மேல் 3 கிராம்பு, 3 ஏலக்காய் வைக்க வேண்டும். இவற்றுக்கு மேலே உங்கள் கை நிறைய சில்லறை காசுகளை பரப்பி விடுங்கள். அதன் பிறகு இந்த தட்டை சுற்றி வாசனை மிக்க மலரை கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த சில்லறை காசுகளின் மேல் ஒரு மண் அகலை வைத்து அதில் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் உங்கள் வசதிக்கேற்ப ஏதேனும் ஒன்றை ஊற்றி அதில் பஞ்சு திரி போட்டு மகாலட்சுமி தாயார் அல்லது குபேரர் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து உங்களின் வறுமை நிலை நீங்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை நீங்கள் மாதம் ஒரு முறை ஏற்றினால் கூட போதும்.

பொதுவாக பெண்கள் கைகளில் அடிக்கடி மருதாணி வைத்துக் கொள்வது அவர்களை லட்சுமி காரமாக மாற்றும் என்று நம்பப்படுகிறது. அது மட்டும் இன்றி மருதாணி இலையை கையில் வைத்துக் கொண்டு மகாலட்சுமி தாயாரிடம் நம் எண்ண வேண்டினாலும் தாயாரின் பரிபூரணமான அருளுடன் அது கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி அற்புதமான சக்திகள் வாய்ந்த இந்த மருதாணி இலை தீபத்தை வீட்டில் ஏற்றும் போது வறுமை நிலை மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதையும் படிக்கலாமே: உச்சந்தலையில் லேசாக இந்த திலகத்தை தடவிக் கொண்டால் போதும். நீங்கள் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் சீக்கிரம் பணக்காரர் ஆகிவிடலாம்.

இந்த ஒரு தீப வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்து வறுமையில்லா வாழ்க்கையை வளமுடன் வாழ வழி தேடி கொள்ளலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -