உச்சந்தலையில் லேசாக இந்த திலகத்தை தடவிக் கொண்டால் போதும். நீங்கள் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் சீக்கிரம் பணக்காரர் ஆகிவிடலாம்.

cash1
- Advertisement -

வெளிமாநிலத்தில் இருந்து நம்முடைய மாநிலத்திற்கு பிழைப்பை தேடி வருபவர்கள் வட மாநிலத்தவர்கள். ஆனால் அவர்களுடைய செல்வ செழிப்பையும் வளர்ச்சியையும் நம்மால் யோசித்துக் கூட பார்க்க முடியாது. ஊர் விட்டு ஊர் வந்து தொழில் செய்து அவ்வளவு சீக்கிரத்தில் முன்னேற கூடிய தெம்பு அவர்களிடத்தில் உள்ளது. ஆனால் அது ஏன் நம்மால் முடியவில்லை. வடமாநிலத்தவர்கள் பரிகாரத்தின் மீதும் வழிபாட்டின் மீதும் அவ்வளவு நம்பிக்கை கொண்டவர்கள். எதையுமே நம்பிக்கை இல்லாமல் செய்ய மாட்டார்கள். அது மட்டும் இல்லாமல் அவர்களிடத்தில் இருக்கும் பணிவும், பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதையும் தான், அவர்களை வாழ்வில் நல்ல இடத்தில் கொண்டு போய் அமர வைக்கிறது.

நாமும் அதேபோல பரிகாரங்களுக்கு உண்மையாக முக்கியத்துவம் கொடுத்து பெரியவர்களை மதித்து சில தாந்திரீக பரிகாரங்களை பின்பற்றும் போது வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேறிவிடலாம். பணக்கஷ்டத்திலிருந்தும் வெளிவரலாம். அதற்காக நம் நாட்டில் இருப்பவர்கள் சாமி கும்பிடவில்லை, பெரியவர்களுக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால் நாம் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கின்றோம். மார்வாடிகளை போல பெரிய அளவில் பணக்காரராக முடியவில்லையே. நாமும் வட மாநிலத்தவர்களைப் போல செல்வ செழிப்பாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களுடைய வாழ்வில் இருக்கும் வறுமையும் நீங்கும். நீங்களும் செல்வ செழிப்போடு வாழலாம். பணம் வசியம் ஆகும்.

- Advertisement -

பணத்தை வசியம் செய்ய திலகம் தயார் செய்வது எப்படி:
இந்த பரிகாரத்திற்கு நமக்கு வாசனை நிறைந்த தாழம்பூ குங்குமம் தேவை. அந்த குங்குமம் ஏதாவது அம்மன் கோவிலில் வாங்கியதாக இருக்கு வேண்டும். பெரிய பெரிய அம்மன் கோவிலுக்கு எல்லாம் சென்றால் அந்த இடத்தில் நல்ல தாழம்பு குங்குமம் விற்கும். அதை வாங்கிக்கோங்க. பிறகு குங்குமப்பூ தேவை. பிறகு அனுமன் கோவிலில் தரும் செந்தூரம் தேவை‌. (இந்த மூன்று பொருட்கள்தான். தாழம்பூ குங்குமம், குங்குமப்பூ, செந்தூரம். இந்த மூன்று பொருட்களையும் வாங்கிக் கொள்ளுங்கள்).

அடுத்து இதில் கலக்க நெல்லிக்காய் சாறு தேவை. நெல்லிக்காயை துருவி விட்டோ அல்லது மிக்ஸியில் அரைத்து பிழிந்து எடுத்தால் கொஞ்சம் சாறு கிடைக்கும். தண்ணீர் ஊற்றி சாறு எடுக்கக் கூடாது. நெல்லிக்காயில் இருந்து வெளிவரும் சாறு ஒரு ஸ்பூன் அளவு இருந்தால் கூட போதும். தயாராக எடுத்து வைத்திருக்கும் குங்குமம் குங்குமப்பூ செந்தூரம் இந்த மூன்று பொருட்களையும் கலந்து கொள்ளுங்கள். செந்தூரத்தையும் குங்குமத்தையும் சம அளவு கலந்துக்கோங்க குங்குமப்பூ இரண்டு சிட்டிகை போட்டால் கூட போதும். நெல்லிக்காய் சாறையும் இதனுடன் கலந்து நிழலிலேயே இந்த குங்குமத்தை நன்றாக உலர வைத்து விடுங்கள். அவ்வளவுதான். நமக்கு தேவையான வசிய திலகம் தயார்.

- Advertisement -

இதை பூஜை அறையில் வைத்து விட்டு குலதெய்வத்தை நினைத்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு பணவசியம் ஏற்பட வேண்டும். நீங்கள் செய்யக்கூடிய தொழிலில் நிறைய லாபம் கிடைக்க வேண்டும். நீங்கள் செய்யக்கூடிய வேலையில் மேலும் மேலும் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை வைத்து இந்த குங்குமத்தை பூஜை அறையில் வைத்து விடுங்கள். தினமும் குளித்துவிட்டு வந்தவுடன் இந்த குங்குமத்தை எடுத்து குலதெய்வத்தை வேண்டி நெற்றியில் இட்டுக் கொண்டாலும் சரி அல்லது கொஞ்சமாக எடுத்து உச்சந்தலையில் வைத்துக் கொண்டாலும் சரி உங்களுக்கு பண வசியம் ஏற்பட தொடங்கி விடும்.

இதையும் படிக்கலாமே: வெளியில் யாரிடமும் சொல்ல முடியாத பிரச்சனையில் சிக்கித் தவிப்பவர்கள் யாரிடமும் சொல்லாமல் நள்ளிரவில் இந்த பூஜையை செய்தால் மலை போல் வந்த துன்பமும் பனி போல உருகி விடும்.

ஆண்கள் பெண்கள் யார் வேண்டும் என்றாலும் இந்த திலகத்தை இட்டுக் கொள்ளலாம். குழந்தைகளுக்கும் நெற்றியில் இந்த குங்குமத்தை வைத்தால் பல நல்ல விஷயங்கள் அவர்களுக்கு வசியமாகும். வசியம் என்பது தவறான வார்த்தை அல்ல. நல்லதை நம் வசப்படுத்திக் கொள்ளக் கூடிய வார்த்தையை தான் வசியம் என்று சொல்கின்றோம். எளிமையான இந்த ஆன்மீகம் சொல்லும் தாந்திரீக பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -