தீய சக்திகள் விலகி லஷ்மி கடாட்சம் ஏற்பட பரிகாரம்

henna leaf
- Advertisement -

வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பலவிதமான பாதிப்புகளுக்கு காரணமாக திகழ்வதுதான் தீய சக்திகள். இந்த தீய சக்திகள் வீட்டிற்குள் இருந்தால் கண்டிப்பாக முறையில் மகாலட்சுமி தாயார் வீட்டில் வாசம் செய்ய மாட்டார் என்பது நம் அனைவரும் அறிந்த உண்மையே. தெய்வ சக்திகள் இல்லாத இடத்தில் தான் தீய சக்திகளின் ஆதிக்கம் அதிகமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலில் தீய சக்திகளை வீட்டிலிருந்து விரட்டி அடிக்க வேண்டும். பிறகுதான் நல்ல சக்திகளை வீட்டிற்குள் வரவழைக்க முடியும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தீய சக்திகளை விரட்டியடித்து லட்சுமி கடாட்சத்தை பெருக்குவதற்கு உதவக்கூடிய இலையைப் பற்றி தான் பார்க்க போகிறோம்.

தெய்வீக அம்சம் நிறைந்த இடத்தில் கண்டிப்பான முறையில் தீய சக்திகளால் நுழைய முடியாது என்பதால் தான் வீட்டு வாசலில் தெய்வீக சக்தி பொருந்திய பல பொருட்களை நாம் வைப்போம். அதேபோல் நம்மிடம் தீய சக்திகள் அண்ட கூடாது என்பதற்காக நாம் நெற்றியில் குங்குமம் வைக்கிறோம். யார் ஒருவர் நெற்றியில் குங்குமம் இருக்கிறதோ அவர்களை எளிதில் வசப்படுத்த முடியாது. அவர்களிடம் தீய சக்திகள் அணுகாது என்றும் கூறப்படுகிறது. இப்படி பல தெய்வ அம்சம் பொருந்திய எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள் இருக்கின்றன.

- Advertisement -

இதே போல் தீய சக்திகள் விலகுவதற்கும் பல பரிகாரங்களை நாம் மேற்கொண்டு தான் வருகிறோம். அந்த வகையில் மிகவும் எளிமையான ஒரு பரிகாரத்தை பற்றி இன்று நாம் பார்ப்போம். இந்த பரிகாரத்தை நாம் அமாவாசை நாளில் தான் செய்ய வேண்டும். அமாவாசை நாளன்று மகாலட்சுமி தாயாரின் அம்சம் பொருந்திய மருதாணி இலைகளை பறித்து வர வேண்டும்.

அதை சுத்தம் செய்து அம்மி கல்லில் வைத்து அரைக்க வேண்டும். மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கக் கூடாது. அப்படி அரைத்த அந்த மருதாணி விழுதை சிறுவடையாகத் தட்டி காயவைத்து நாம் தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெயில் போட்டு விட வேண்டும். இந்த மருதாணி இலை வடை நன்றாக ஊறிய பிறகு அந்த தேங்காய் எண்ணெயை வீட்டில் இருக்கும் அனைவரும் தலைக்கு தடவ வேண்டும்.

- Advertisement -

இப்படி தடவுவதன் மூலம் நம்மை பிடித்திருக்கும் தீய சக்திகள் அனைத்தும் விலகும். மேலும் அந்த அம்மிக்கல்லை அரைத்த பிறகு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வோம் அல்லவா? அப்படி சுத்தம் செய்யும் பொழுது வரக்கூடிய தண்ணீரை ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையில் வாசல் தெளித்த பிறகு அந்த தண்ணீர் சிறிதளவு எடுத்து அதில் கஸ்தூரி மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலந்து வாசலில் தெளித்துவிட்டு பிறகு கோலம் போட வேண்டும். இப்படி தினமும் நாம் செய்வதன் மூலம் மகாலட்சுமியின் கடாட்சத்தை நம்மால் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி நீங்க போகி அன்று செய்ய வேண்டிய பரிகாரம்

ஒரே பொருள் வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகளையும் விலக்கி அதே சமயம் மகாலட்சுமி தாயாரின் அருளையும் பரிபூரணமாக பெறச் செய்யும்.

- Advertisement -