மாசிமகம் திருவிழாவாக கொண்டாடப்படுவது ஏன்? அதன் சிறப்புகள் என்ன? மாசி மகம் அன்று பாவங்கள் தீர செய்ய வேண்டிய பரிகாரம் பற்றியும் தெரிந்து கொள்வோமா?

masi
- Advertisement -

மாசி மகம் என்பது மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரக்கூடிய பௌர்ணமி நாளாகும். இந்த மாசி மகம் இந்துக்களால் விரதமிருந்து கோலாகலமாக கொண்டாடப்படுகிறது மாசி மகம் நட்சத்திரத்தன்று புனித நீர் நிலைகள், நதிகள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளில் நீராடி வர நாம் பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுபடலாம். இவ்வாறு விசேஷம் நிறைந்த திருநாள் ஏன் கொண்டாடப்படுகிறது? எதற்காக இந்த குறிப்பிட்ட நாளை மாசி மகம் என்று அழைக்கிறோம்? இந்த மாசிமக தினத்தன்று பரிகாரங்கள் செய்வதன் மூலம் எவ்வாறு பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட முடியும்? என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பௌர்ணமியுடன் கூடிய மாசி மாதம் 16.02.2022 புதன்கிழமை அன்று 16:13 மணிக்கு மாசி மகம் வருகிறது. அன்றைய தினம் மதுரை யானைமலை யோக நரசிம்மர் கோவில் தெப்பத்தில் திருமோகூர் காளமேகப் பெருமாளின் யானைமலை முதலை சம்ஹார லீலை மற்றும் கஜேந்திர மோட்சம் நடைபெறும்.

- Advertisement -

இன்றைய தினம் நமது நாடுகளில் பல பகுதிகளில் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அவ்வாறு நாசிக், உஜ்ஜயினி ஹரித்துவார் பிரக்யாராஜ் ஆகிய பகுதிகளில் கும்பமேளா போன்ற திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. புனித நதியில் நீராடி இறைவனை வழிபடும் அந்த அற்புத திருநாளில் நம் நாட்டு பக்தர்கள் மட்டுமல்லாமல், பல நாடுகளில் இருந்து வந்தவர்களும் புனித நீராடி கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த அற்புத நிகழ்வு மாசி மகம் அன்று தான் நடைபெறுகிறது.

தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் மாசிமகத் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். குருபகவான் ஆண்டிற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வார். அப்படி சிம்ம ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கும் வருட மாசி மாதம் பௌர்ணமி தினம் அன்று மகாமகம் கொண்டாடப்படுகிறது.

- Advertisement -

இவ்வாறான அற்புத தினத்தில் மக்கள் புனித நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, சிந்து, நர்மதா, காவேரி போன்ற 12 புனித நீர்நிலைகளில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வதற்காகவே இத்திருவிழா நடைபெறுகின்றது. இன்றைய தினத்தில் கடலில் நீராடி வழிபடுவதாலும் பாவங்களிலிருந்து விடுபட முடியும் என்று நம்பப்படுகிறது.

மகம் சிறப்புகள்:
மாசி மகம் என்பது தீர்த்த நீராடலுக்கு முக்கியத்துவமாக இருக்கிறது. “மகத்தில் பிறந்தால் ஜகத்தை ஆளலாம்” என்பது ஆன்மிக பழமொழி. அதாவது மகம் ராசியில் பிறந்தவர்கள் இந்த உலகத்தையே ஆளும் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள். ஆண் குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள் மாசிமகத் திருநாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட அவர்கள் நினைத்த வரம் கிடைக்கிறது.

மக நட்சத்திரத்தை பித்ருதேவ நட்சத்திரம் என்று அழைப்பார்கள். எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் பித்ருக்களுக்கு பூஜை செய்த பின்னர்தான் துவங்கப்படுகிறது. எனவே மாசி மகம் அன்று பித்ருக்களுக்கு பூஜை செய்வது சிறந்த பலனை கொடுக்கிறது. முன்ஜென்மத்தில் செய்த சகல பாவங்கள் அனைத்தும் மாசிமக தினத்தன்று புனித நீராடுவதன் மூலம் அனைத்து தோஷங்களையும் நீக்கி விடுகிறது.

- Advertisement -