மாதம் சம்பளம் வாங்குபவர்கள் இனி மாதம் தோறும் சந்தோஷமாக பணத்தை செலவு செய்யலாம். மாத சம்பளத்தை அதிகரிக்க தினமும் உங்கள் கையில் பூச வேண்டிய ஒரு பொருள் என்னன்னு தெரியுமா உங்களுக்கு.

cash
- Advertisement -

மாதம் முதலில் சம்பளம் வாங்கியவுடன், சந்தோஷமாக குடும்பத்தை நடத்தி செல்லக்கூடிய எத்தனையோ பேர், 20 தேதியை கடந்த பிறகு கையில் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாட கூடிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். மாதம் சம்பளம் வாங்குபவர்களுக்கும் இந்த நிலைமை இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கும் இந்த நிலைமை இருக்கும். எவ்வளவு பெரிய சம்பாத்தியத்தில் குடும்பத்தை நடத்தி செல்பவர்களுக்கும் இந்த நிலைமை மாத கடைசியில் வரும்.  அதிலும் வந்த வருமானத்தை சேமிக்காமல் விட்டுவிட்டால், அது இன்னும் ரொம்ப ரொம்ப கஷ்டம். மாத கடைசியில் கடன். மீண்டும் அடுத்த மாதம் தொடக்கத்தில் சம்பளம் வந்தவுடன், அந்த கடனை திருப்பிக் கொடுத்துவிட்டு, மாத இறுதியில் செலவுக்கு காசு இல்லாமல் திண்டாடுவோம். இந்த நிலையை மாற்றுவதற்கு என்னதான் செய்ய வேண்டும்.

செலவை குறைக்க வேண்டும். கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது. வரக்கூடிய வருமானத்திலிருந்து ஒரு சின்ன தொகையை மாதத்தின் இறுதி செலவுக்காக, கண்ணுக்குத் தெரியாமல் ஒரு பர்ஸில் போட்டு பரண்மேல் வைத்து விடுங்கள். எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அதை தொடாதீர்கள். மாத இறுதி பத்து நாளைக்கு தான் செலவுக்கு அந்த பணம் என்று ஒதுக்கி வைத்து விடுங்கள். இது கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் முயற்சி செய்து பாருங்கள். கடன் இல்லாமல் வாழ்வதற்கு இந்த குறிப்பு உபயோகமாக இருக்கும்.

- Advertisement -

சரி கைக்கு வருமானம் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்றால், நம்முடைய கையை ராசியான கையாக மாற்ற என்ன செய்யலாம். ஒரு தாந்திரீக பரிகாரம் உள்ளது. குலதெய்வத்தை நினைத்து தினமும் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்களேன். வருமானம் வந்து கொண்டே இருக்கும்.

காந்தம் போல பணத்தை ஈர்க்கக்கூடிய மாசிக்காய் பரிகாரம்:
மாசிக்காய். நாட்டு மருந்து கடைகளில் இது பொடியாக விற்கிறது. சில கடைகளில் எண்ணெயாகவும் உங்களுக்கு கிடைக்கும். மாசிக்காய் எண்ணெய் என்று கேட்டால் கொடுப்பார்கள். உங்களுக்கு எது தேவையோ அது வாங்கிக் கொள்ளுங்கள். காலையில் எழுந்து எப்போதும் போல குளித்துவிட்டு சாமி கும்பிட்டு விட்டு சாப்பாடு சாப்பிட்டு விட்டு பிறகு அலுவலகத்திற்கு செல்வீர்கள், அல்லது உங்களுக்கு என்ன வேலை இருக்கிறதோ அதை பார்க்க வீட்டில் இருந்து வெளியே செல்வீர்கள் அல்லவா.

- Advertisement -

அப்போது வீட்டில் இருந்து வெளியே கிளம்புவதற்கு அந்த ஒரு நிமிடத்திற்கு முன்பு குலதெய்வத்தின் பெயரை மனதில் சொல்லி இந்த மாசிக்காய் பொடியை கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலந்து உங்கள் உள்ளங்கைகளில் நன்றாக பூசிக்கொண்டு வெளியே செல்ல வேண்டும் அவ்வளவுதான்.

இது சம்பாதிப்பவர்களுக்கு மட்டும் தானா. வீட்டில் பெண்கள், குடும்ப தலைவிகளாக இருக்கிறார்கள். அவர்கள் கையில் பணம் சேர வேண்டும் என்றால் என்ன செய்வது. கணவர் கொடுக்கும் பணத்தை வாங்கி பர்ஸிலோ அல்லது பீரோவிலோ வீட்டு செலவுக்காக வைப்பீர்கள் அல்லது சேமிப்புக்காக வைப்பீர்கள் அல்லவா அப்போது கணவரிடம் இருந்து பணத்தை வாங்குவதற்கு முன்பு, உங்கள் கைக்கு பணம் வருவதற்கு முன்பு இந்த மாசிக்காயை பெண்கள் கையில் தடவிக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பெண்கள் கையில் எப்போதும் காசு தாராளமாக புழங்க இதை யாருக்கும் தெரியாமல் செய்து விடுங்கள். பண வரவிற்கு பெண்கள் செய்ய வேண்டிய ரகசிய பரிகாரம்.

அப்போது நீங்கள் கையில் வாங்கிய பணம் வீண் செலவு ஆகாமல் வீட்டில் சேமிப்பில் இருக்கும். பணத்தை நிறைய சேர்க்கலாம். வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால் கூட இதை கையில் பூசிக்கொள்ளலாம் தவறு கிடையாது. பணத்தை காந்தம் போல ஈர்க்க இந்த வாசம் உங்களுக்கு ஒரு வழியை காட்டும். நம்பிக்கை உள்ளவர்கள் எளிமையான இந்த ஆன்மீகம் சொல்லும் தாந்திரீக பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -