சமையலறையில் இருக்கும் இந்த 2 பருப்பு போதும். உங்களுடைய முகத்தை 5 நிமிடத்தில் பளிச்சின்னு வெள்ளையா மாத்திடலாம்.

face10
- Advertisement -

முகத்தில் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண ரொம்ப ரொம்ப சுலபமாக, செலவே இல்லாத ஒரு ரெமிடியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். சமையலறையில் இருக்கும் இந்த இரண்டு பருப்பு போதும். உங்களுடைய சரும அழகை பாதுகாப்பதற்கு. அது எந்த இரண்டு பருப்புகள். அந்த பருப்புகளை நாம் எப்படி பயன்படுத்த போகின்றோம் என்பதை பற்றிதான் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த ரெமிடியை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வர உங்களுடைய முகத்திற்கு பல பலன்னு கிளாசி லுக் கிடைக்கும். அற்புதமான இந்த ரெமிடியை மிஸ் பண்ணாமல் ட்ரை பண்ணி பாருங்க.

இந்த ரெமிடிக்கும் நாம் பயன்படுத்த போகும் பொருள் மைசூர் பருப்பு, கடலைப்பருப்பு. இந்த 2 பருப்புகளையும் சம அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். 2 டேபிள்ஸ்பூன் மைசூர் பருப்பு எடுத்தால் 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த 2 பருப்புகளையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். இந்த பொடியை ஒரு பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தினம் தினம் இந்தப் பொடியில் இருந்து தேவையான அளவு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பொடியில் இருந்து உங்களுக்கு தேவையான அளவு மட்டும் எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு, இதில் காய்ச்சாத பச்சை பாலை ஊற்றி நன்றாக கலந்து ஒரு ஃபேஸ் பேக் போல தயார் செய்து, இதை அப்படியே உங்களுடைய முகத்திலும் கழுத்திலும் அப்ளை செய்து கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட்டாலே போதும்.(இந்த பேக் வழுவழுன்னு இருக்காது. கொஞ்சம் கொரகொரப்பாக தான் இருக்கும்.)

தினம்தோறும் இந்த பேக்கை முகத்தில் போட்டாலும் தவறு கிடையாது. எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. முகத்தில் இருக்கக்கூடிய அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு நல்ல ரிசல்ட் கொடுக்கக்கூடிய தன்மை இந்த இரண்டு பருப்புகளுக்கும் உண்டு.

- Advertisement -

நம் எல்லோருக்கும் தெரியும் கடலைமாவு சருமத்திற்கு மிகமிக நல்லது என்று ஆனால், இந்த கடலைப்பருப்போடு, மைசூர் பருப்பையும் சேர்த்து நம்முடைய முகத்திற்கு பயன்படுத்தும் போது நிச்சயமாக நம்ப முடியாத ஒரு ரிசல்ட் கிடைக்கும். அதை நீங்க ட்ரை பண்ணா தான் தெரியும். (ஆனால் கொறகொறப்பாக இருக்கும் இந்த பேக்கை தினம்தோறும் முகத்தில் வைத்து அழுத்தி மசாஜ் மட்டும் செய்ய வேண்டாம்.)

ஒருவேளை உங்களுடைய முகத்தில் முகப்பரு நிறைய உள்ளது எனும் பட்சத்தில் உங்களுடைய முகத்திற்கு பால் செட் ஆகாது எனும் பட்சத்தில் பாலுக்கு பதில் தயிர் பயன்படுத்தலாம். தயிரும் உங்கள் முகத்திற்கு செட் ஆகாது என்றால் ரோஸ் வாட்டர் பயன்படுத்தி கொள்ளுங்கள். நிறைய காசு செலவு செய்யாமல் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாமல் முகத்தில் இருக்கும் கரும் புள்ளி, முகப்பரு, தழும்பு, சிறிய சிறிய ஓட்டைகள், கருவளையங்கள், சன் டேன் இப்படி எல்லா பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கொடுக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -