உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் விலகி நல்லது நடக்க சிவனுக்கு இந்த 1 பொருளை வைத்து இப்படி செய்யுங்கள்! துரதிர்ஷ்டங்கள் யாவும் விலகி அதிர்ஷ்டங்கள் வரத் துவங்கும்!

sivan-curd
- Advertisement -

சிவனுக்கு மிகவும் பிடித்த பொருட்களில் ஒன்றாக இருக்கும் இந்த ஒரு பொருளை வைத்து சிவ பெருமானுக்கு ஒவ்வொரு குறிப்பிட்ட நாளன்று வழிபட்டு வந்தால் நம் கஷ்டங்கள் அனைத்தும் விலகி நல்லது மட்டுமே நடக்கும். சிவபெருமான் நமக்கு நேரடியாகவே வந்து அருள் புரிவதாக சாஸ்திரங்கள் குறிப்பிட்டு கூறுகிறது. இத்தகைய எளிமையான சிவ வழிபாட்டை தவறாமல் கடைப்பிடித்து வருபவர்களுக்கு துரதிர்ஷ்டங்கள் அனைத்தும் விலகி அதிர்ஷ்டம் வந்து சேரும். அத்தகைய வழிபாட்டை பற்றிய ஆன்மிகத் தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் ஒன்றாக இருப்பது சிவராத்திரி ஆகும். சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் மாத சிவராத்திரியாக வருகிறது. இப்படி மாதம்தோறும் வரக்கூடிய மாத சிவராத்திரி அன்று செய்யக்கூடிய எளிய பரிகாரம் தான் இது! இந்த பரிகாரத்தை நாம் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய அத்தனை வறுமையும் நீங்கி, செல்வ செழிப்பு அதிகரிக்கும். மனதில் இருக்கும் அழுத்தங்கள் அனைத்தும் நீங்கி குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

- Advertisement -

திருமணம் ஆகாத பெண்கள் இதை மேற்கொண்டால் நல்ல வரன் அமையும். கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகளை போக்க தம்பதியராக இதை செய்யலாம். வேண்டியதை வேண்டியபடி நிறைவேற்றிக் கொடுக்கும் அற்புதமான சக்தி இந்த பரிகாரத்திற்க்கு உண்டு. இந்த ஒரு பொருள் பசுவில் இருந்து கிடைக்கக்கூடிய தெய்வீக பொருளாகும். பசுவில் இருந்து கிடைக்கக்கூடிய மற்ற பொருள்களை காட்டிலும் இந்த பொருள் சிவபெருமானுக்கு ரொம்பவே விசேஷமானது.

சிவபெருமானுக்கு சிவ ராத்திரியில் வில்வ இலைகளால் அர்ச்சித்து வந்தால் விரைவில் மோட்சம் கிடைக்கும் என்கிற ஐதீகம் உண்டு. அது போல சிவபெருமானுக்கு இந்த ஒரு பொருளால் அபிஷேகம் செய்து வந்தால் இறைவனுடைய அருள் பரிபூரணமாக நமக்கு வந்தடையும் என்கிறது ஆன்மீகம். எனவே ஒவ்வொரு மாத சிவராத்திரி அன்று நீங்கள் விரதம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மாலையில் சிவ புராணத்தை உச்சரித்து சிவ ஸ்தோத்திரங்கள், மந்திரங்களை சொல்லி சிவனுக்கு முன்பு இந்த பொருளை படைக்க வேண்டும். அத்தகைய அற்புதமான பொருள் நம் வீட்டில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய தயிர் ஆகும்.

- Advertisement -

பசுவில் இருந்து கிடைக்கக்கூடிய இந்த தயிர் நந்தி பகவானுக்கும், சிவபெருமானுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. எனவே தயிர் சாதம் படைத்து அல்லது தயிரை அப்படியே நைவேத்தியமாக படைத்து, சிவனுக்கு தயிரால் அபிஷேகம் செய்து, சிவ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இதை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் நமக்கு வேண்டிய வேண்டுதல் அப்படியே நிறைவேறும்.

அது மட்டுமல்லாமல் சிவனுக்கு உகந்த சிவ தோத்திரங்கள் உச்சரிக்க வேண்டும் அல்லது சிவபுராணத்தை அமைதியாக அமர்ந்து ஒரு முறையேனும் படிக்க வேண்டும். சிவ புராணம் படித்தால் சிவனே வந்து இறங்கி நமக்கு அருள் புரிவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. எனவே மாத சிவராத்திரியில் தவறாமல் சிவ வழிபாட்டை இங்கனம் மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு வரக்கூடிய துரதிர்ஷ்டங்கள் யாவும் விலகி, அதிர்ஷ்டங்கள் வரத் துவங்கும். வறுமை நீங்கி செல்வம் கொழிக்கும். நினைத்த படி நல்ல வரன் அமையும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி தம்பதி ஒற்றுமை நிகழும். இத்தகைய அற்புதமான பலன்களைக் கொடுக்கக் கூடிய இந்த மாத சிவராத்திரி வழிபாட்டை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -