வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் விஷ்ணு தீபம்

vishnu deepam
- Advertisement -

படைத்தல், காத்தல், அழித்தல் என்று மூன்று தொழில்களை செய்பவர்களை தான் நாம் மும்மூர்த்திகள் என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களில் காக்கும் தொழிலை செய்ய கூடியவர் தான் மகாவிஷ்ணு. மகாவிஷ்ணுவை நினைத்து நாம் அவரை வழிபடும் பொழுது நம் வாழ்வில் இருக்கக்கூடிய சிக்கல்கள் அனைத்தையும் நீக்கி நமக்கு நல்ல முன்னேற்றகரமான வாழ்க்கையை தருவார். அப்படிப்பட்ட மகாவிஷ்ணுவை எப்படி தீபம் ஏற்றி வழிபட்டு வாழ்வில் நல்ல மாற்றத்தை பெற முடியும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

தன்னுடைய மார்பில் மகாலட்சுமியை வைத்திருக்கும் மகாவிஷ்ணுவை நாம் வழிபடும் பொழுது நம் வாழ்வில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்திலும் இருந்து நம்மை காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல் பொருளாதார முன்னேற்றத்தையும் கொடுத்து நல்ல மாற்றங்களை தரும் அற்புதமான கடவுளாக தான் மகாவிஷ்ணு திகழ்கிறார். மனதார நாராயணா என்று கூறினாலே ஓடி வரக்கூடிய அற்புதமான தெய்வம் ஆக திகழக்கூடியவர்தான் மகாவிஷ்ணு.

- Advertisement -

விஷ்ணு தீபம்

அப்படிப்பட்ட அற்புதமான ஆற்றல் மிகுந்த மகாவிஷ்ணுவை நினைத்து வீட்டில் விஷ்ணு தீபம் ஏற்றும் முறையைப் பற்றி பார்ப்போம். வீட்டு பூஜை அறையில் பெருமாள் படம் இருப்பவர்கள் அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்த படத்திற்கு முன்பாக சங்கு கோலம் போட வேண்டும். அந்த சங்கிற்கு நடுவில் ஒரு தாம்பாளத்தில் துளசி இலைகளை வைத்து அதற்கு மேல் புதிதாக வாங்கிய அகல் விளக்கை வைக்க வேண்டும். அந்த அகல் விளக்கில் சுத்தமான பசு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த தீபத்தை பிரம்ம முகூர்த்த வேளையில் ஏற்றுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும் மாலையில் ஆறு மணிக்கு மேலும் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இரண்டு வேளைகளில் ஒரு வேளை மட்டும் கூட இந்த தீபத்தை ஏற்றலாம். அப்படி ஒரு வேளை ஏற்றுபவர்களாக இருந்தால் அவர்கள் காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் ஏற்ற வேண்டும். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் தினமும் புதிதாக துளசி இலையை வைத்து தீபமேற்றி வழிப்பட வேண்டும்.

தீபம் ஏற்றிய பிறகு அந்த தீபத்தின் முன்பாக அமர்ந்து “ஓம் நமோ நாராயணா” எனும் மந்திரத்தை முடிந்த அளவிற்கு கூற வேண்டும். குறைந்தபட்சம் 27 முறையில் இருந்து அதிகபட்சம் 1008 முறை வரை கூறலாம். மேலும் நெய்வேத்தியமாக கற்கண்டு, உலர் திராட்சை, நெல்லிக்கனி, மாதுளம் பழம் இவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் வைக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி தொடர்ந்து 48 நாட்கள் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொண்டு வந்தால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்திலும் இருந்து நம்மை காப்பாற்றுவார் மகாவிஷ்ணு. மேலும் மகாவிஷ்ணுவை வழிபடுவதால் மகாலட்சுமியும் மனமகிழ்ந்து நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு செல்வத்தை வாரி வழங்குவார்.

இதையும் படிக்கலாமே: நோய்கள் நீங்க மந்திர விபூதி

மிகவும் எளிமையான முறையில் மகாவிஷ்ணுவை நினைத்து இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டு மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறலாம்.

- Advertisement -