பால் குடிக்க மட்டும் இல்லாம ஹீரோயின் போல பேரழகா ஜொலிக்கவும் இப்படி எல்லாம் பயன்படுகிறதா? இவ்வளவு நாளா இத தெரிஞ்சுக்காம போயிட்டோமேன்னு வருத்தபடாதீங்க!

skin-milk-potato
- Advertisement -

அன்றாட வாழ்வில் கால்சியம் சத்து கிடைப்பதற்கு தினமும் பால் குடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. காலையில் எழுந்ததும் முதல் உணவாக எடுத்துக் கொள்ளப்படும் இந்த பால், குடிப்பதற்கு மட்டும் அல்லாமல் நம் முகத்தை பேரழகாக ஹீரோயின் போல ஜொலிக்க வைக்கவும் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகிறது. ரொம்பவே எளிதாக நம் வீட்டில் பாலை வைத்து எப்படி நாமும் இளமையாக மாறலாம்? என்கிற அழகு குறிப்பு ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பால் இறந்த செல்களை நீக்கி, புதிய செல்களை ஊக்குவிக்கும் ஒரு அற்புதமான கிளென்சிங் செய்யக்கூடிய ஒரு பொருளாக விளங்குகிறது. வெறுமனே பாலை எடுத்து முகம் முழுவதும் தடவி உலர விட்டு நீங்கள் சாதாரண தண்ணீரால் முகத்தை தினமும் அலம்பி வந்தாலே போதும், முகம் பளபளன்னு நாளடைவில் ஜொலிக்க ஆரம்பித்து விடும். முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை போக்கி, முகத்தை பொலிவுடன் வைத்துக் கொள்ளவும் இந்த பால் உதவுகிறது.

- Advertisement -

பாலை தடவும் பொழுது பிசுபிசு என்று இருப்பது போல ஒரு உணர்வு ஏற்படும். ஆனால் இது நம்முடைய சருமத்திற்குள் சென்று செயல்படுத்தக்கூடிய விஷயங்கள் ரொம்பவும் சிறந்த பலன்களை தரக்கூடியது. எனவே ஆரம்பத்தில் அப்படி இருந்தாலும் போகப் போக உங்களுக்கு அது பழகிவிடும். முதலில் முகத்தில் தோன்றக்கூடிய சுருக்கங்களை எளிதாக கட்டுப்படுத்த பாலுடன், அரை வாழைப்பழத்தை நன்கு பேஸ்ட் போல கெட்டியாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதை முகம் முழுவதும் தடவி 15 நிமிடம் கழித்து உலர விட்டு கழுவினால் வறண்ட சருமம் ஈரப்பதத்துடன் மென்மையாக குழந்தையின் சருமத்தை போல மெத்தென்றும் மாறும். மாஸ்டரைசர் போல செயல்படக்கூடிய இந்த பாலும், பழமும் உங்களுக்கு இயற்கையாக சருமத்திற்கான சிறந்த பேக்காக இருக்கும். சூரிய கதிர் ஒளியில் இருந்தும் இந்த பேக் உங்களை பாதுகாக்கும் என்பதால் நீங்கள் வெயிலில் வெளியில் சென்று வந்தவுடன் இதை போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தழும்புகள், கரும்புள்ளிகள், முகத்தில் இருக்கும் சொரசொரப்புகள் போன்றவற்றை ஒரே நாளில் நீக்கக்கூடிய சக்தியும் பாலுக்கு உண்டு. சிறிதளவு பாலில் உருளைக்கிழங்கை பேஸ்ட் போல கரைத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த பேஸ்டை தடவி 15 நிமிடம் கழித்து உலர விட்டு கழுவி வந்தால் தழும்புகள் இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்து போய் இருக்கும். கரும்புள்ளிகளும் அகன்று விடும். உங்களுடைய முகம் பார்ப்பதற்கு ஹீரோயின் போல பளிச்சென மின்னும்.

இதையும் படிக்கலாமே:
ஒரே வாரத்துல தரையை தொடுற அளவுக்கு முடி வளரணுமா?அப்படியன்னா இந்த எண்ணெய்யை தேய்ச்சு பாருங்க, அப்புறம் நீங்களே வேண்டாம்ன்னு சொன்னாலும் உங்க பேச்சை கேக்காம முடி வளந்துட்டே இருக்கும்.

பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் இந்த லாக்டிக் அமிலம் நிறைந்த பால் சார்ந்த அழகு குறிப்புகளை பயன்படுத்தி சரும அழகை பேணிப் பாதுகாக்கலாம். சருமத்தில் ஏற்படக்கூடிய விரிசல், வறட்சி போன்றவற்றை ஆண்களுக்கு எளிதாக நீக்கக்கூடிய சக்தி பாலுக்கு உண்டு. முகத்திற்கு மட்டுமல்லாமல், பாலுடன் சம அளவு தயிர் சேர்த்து தலை முழுவதும் தடவி ஊறவிட்டு விட வேண்டும். முக்கால் மணி நேரம் கழித்து நீங்கள் தலைக்கு சாதாரண தண்ணீரால் எப்பொழுதும் போல ஷாம்பு போட்டு குளித்தால் கண்டிஷனர் போட்டது போல உங்களுடைய முடி சிடுக்குகள் இல்லாமல் முடி உதிர்வதும் தடுக்கப்பட்டு நீண்ட, அழகான, அடர்த்தியான கருங்கூந்தல் அலைபாயும். இவ்வளவு அற்புதமான பலன்களை கொடுக்கக்கூடிய பாலை இனி குடிப்பதோடு நிறுத்தி விடாமல், இப்படியும் பயன்படுத்தி பயன் பெறலாமே!

- Advertisement -