பண வரவிற்கு வெந்தய பரிகாரம்

Vendhiyam cash
- Advertisement -

நாம் அன்றாடம் சந்திக்கக் கூடிய பல பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருப்பது நம்முடைய பொருளாதார நிலை தான். வீட்டில் பொருளாதார நிலை சீராக இருந்தாலே பல பிரச்சனைகள் தவிர்த்து விடலாம், அப்படியே வந்தாலும் சமாளித்து விடலாம். இப்படி நம்முடைய ஒட்டு மொத்த வாழ்க்கையே கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு பொருளாக இன்று பணம் மாறி விட்டது.

அப்படியான இந்த பணத்தை சம்பாதிக்க அனைவருமே பெரும்பாடு பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். பலரால் தங்களுடைய பொருளாதார நிலையையும் மேம்படுத்திக் கொள்ளவும் முடிவதில்லை, பணப் பிரச்சனைகளில் இருந்தும் வெளிவர முடிவதில்லை. இந்த பிரச்சனைகளிலிருந்து வெளிவரக் கூடிய ஒரு அருமையான எளிய தாந்திரீக பரிகார முறை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பண வரவு அதிகரிக்க

பண வரவிற்காக நம் முன்னோர்கள் பயன்படுத்தியது எல்லாம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை தான். குறிப்பாக நம்முடைய சமையலறையில் இருக்கும் பொருட்கள் பணத்தை ஈர்ப்பவையாகவும் பணத்தை தக்க வைத்துக் கொள்பவை யாகவும் இருக்கிறது. அப்படியான ஒரு பொருள் தான் வெந்தயம்.

வெந்தயத்தைப் பொறுத்த வரையில் மருத்துவ குணம் நிறைந்தது. உடல் குளுமையை அதிகரிக்கும். இந்த வெத்தியத்தை ஆரோக்கிய விஷயங்களுக்கு பயன்படுத்துவோம் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் வெந்தயம் நல்ல ஒரு பணம் ஈர்ப்பு தன்மை கொண்ட தானியம் என்பது பலருக்கும் தெரியாது இது புதன் பகவானுக்கு உகந்த பொருள்.

- Advertisement -

இந்த வெந்தயத்தை ஊற வைத்து முளை கட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை ஒரு ஸ்பூன் அளவு உண்ண வேண்டும் .இதன் மூலம் நம்முடைய உடல் ஆரோக்கியம் பல மடங்கு அதிகரிக்கும். அதோடு வெந்தயத்திற்கான பண ஈர்ப்பு தன்மையால் நமக்கும் ஏற்பட்டு நம்மிடமும் பணம் தங்குவதற்கான வாய்ப்புகள் பெருகும் பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்கும்.

இது மட்டுமின்றி ஒரு சிறிய பச்சை நிற காட்டன் துணி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஐந்து வெந்தயத்தை வைத்து மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். இதை பூஜை அறையில் வைத்து மகாலட்சுமி தாயார், சுக்கிர பகவான் என பணத்திற்கு அதிபதியான அனைத்து தெய்வங்களுடன் உங்கள் குலதெய்வம், இஷ்ட தெய்வம் அனைவரையும் வேண்டிக் கொண்டு உங்களுடைய பொருளாதார நிலை உயர்ந்து நல்ல முறையில் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த மூட்டையை அப்படியே கொண்டு நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். தொழில் செய்பவராக இருந்தால் வியாபார ஸ்தலத்தில் வைக்கலாம் அப்படி எங்களிடம் வீட்டில் பணம் வைக்க கூடிய இடம் தனியாக இல்லை என்று நினைப்பவர்கள் உங்களுடைய மணி பரிசில் வைத்துக் கொள்ளுங்கள். இது பணவரவை அதிகரித்து பணத்தை தக்க வைப்பதுடன், வீண் விரயத்தை தடுக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.

இதையும் படிக்கலாமே: பணம் வீடு தேடி வர நிலை வாசல் முடிச்சு

வெந்தயத்தை வைத்து செய்யப்படும் இந்த பரிகார முறையை கேட்கும் போது இப்படி எல்லாம் பரிகாரம் உண்டா என்று தோன்றும். எந்த ஒரு காரியமும் நம்பிக்கையுடன் செய்யும் போது நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும். அதே போலத் தான் இந்த ஒரு பரிகாரத்தையும் நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்து பாருங்கள் நிச்சயம் பண வரவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை இருப்பவர்கள் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -