பணம் வீடு தேடி வர நிலை வாசல் முடிச்சு

amman nilaivasal
- Advertisement -

நம்முடைய வழிபாட்டு முறைகளிலே திதிகளுக்கு எப்பொழுதுமே முக்கிய பங்கு உண்டு. அதில் அமாவாசை பௌர்ணமி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. வழிபாட்டுடன் சேர்த்து மற்ற பரிகாரங்கள் வழிபாடுகள் செய்யப்படும். பௌர்ணமி தினத்தில் முன்னோர் வழிபாடு தவிர்த்து மற்ற பரிகார பூஜைகளை செய்யலாம். எப்படி ஆயினும் இந்த இரண்டு திதிகளும் வழிபாட்டிற்கு மிக மிக உகந்த நாட்களாக சொல்லப்படுகிறது. ஆகையால் தான் பல பூஜைகள் பரிகாரங்கள் இந்த தினங்களில் செய்யப்படுகிறது.

இந்த அமாவாசையின் கூட சில மாதங்களில் வருவது முக்கியமான அமாவாசையாக கருதப்படுகிறது. பல அம்மன் ஆலயங்களில் நாளைய தினத்தில் மயான கொள்ளை நடக்கும். அப்படியான இந்த நாளில் நம் வீட்டில் பணம் வருவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை எப்படி செய்வது என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பண வரவிற்கு நிலை வாசல் பரிகாரம்

அமாவாசை திதியானது இன்று மாலை 6 மணி முதல் நாளை மதியம் மூன்று நாற்பது வரை உள்ளது. ஆகையால் இந்த முடிச்சை இன்று மாலை முதல் இரவு வரை கட்ட நினைப்பவர்கள் குளித்து விட்டு கட்டுங்கள். அப்படி கட்ட முடியவில்லை என்றால் பரவாயில்லை நாளை காலை பிரம்ம முகூர்த்த வேலையில் இருந்த முடிச்சை கட்டி விடுங்கள். இது நல்ல பலனை கொடுக்கும்.

அந்த நேரத்திலும் கட்ட முடியவில்லை என்றாலும் மதியம் மூன்று மணிக்குள் நல்ல நேரம் பார்த்து கட்டுங்கள். இந்த பரிகாரத்திற்கு ஒரு பச்சை நிற துணி எடுத்துக் கொள்ளுங்கள் அதில் மூன்று கிராம்பு 3 ஏலக்காய் ஒரு ஒரு ரூபாய் நாணயம் இவை அனைத்தையும் வைத்து முடிச்சாக கட்டி விடுங்கள். நாளைய தினம் மாசி மாதத்துடன் கூடிய அமாவசை அம்மன் வழிபாடு மிகவும் உகந்தது.

- Advertisement -

ஆகையால் இந்த முடிச்சை மகாலட்சுமி தாயார் மனதார நினைத்துக் கொண்டு உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய அம்மன் படத்திற்கு முன்பாக வைத்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த முடிச்சை உங்கள் நிலை வாசலில் வெளிப்புறம் கட்டி தொங்க விடுங்கள். நீங்கள் வீட்டில் எப்போது கற்பூர தீபாராதனை சாம்பிராணி போட்டாலும் இதை இந்த முடிச்சிக்கு காட்டுங்கள். குறிப்பாக வெள்ளி செவ்வாய் நாட்களில் இதை செய்ய மறக்காதீர்கள்.

அடுத்த மாதம் இந்த முடிச்சை கழற்றி விட்டு அதில் இருக்கும் ஒரு ரூபாய் நாணத்தை மட்டும் எடுத்து விட்டு மீதம் இருக்கும் பொருட்களை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். மறுபடியும் இதே போல ஒரு முடிச்சு தயார் செய்து வாசலில் கட்டி விடுங்கள். ஏலக்காய், கிராம்பு, பச்சை நிறம், ஒரு ரூபாய் நாணயம் இவை அனைத்திற்குமே பணத்தை ஈர்க்கக் கூடிய சக்தி அதிகம். அதுவும் அமாவாசை அன்று இந்த பரிகாரத்தை செய்யும் போது அதற்கான ஆற்றல் பல மடங்கு அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: பித்ரு தோஷம் நீங்க தீப வழிபாடு

அப்படியான மிக அருமையான நாளில் இந்த நிலை வாசல் முடிச்சு பரிகாரத்தை செய்து பணவரவிற்கு பஞ்சமில்லாமல் வாழுங்கள். இந்த பரிகார முறையில் உங்களுக்கு விருப்பம் இருப்பின் நீங்களும் செய்து பலன் பெறலாம்.

- Advertisement -