பண வரவை அதிகரிக்க பரிகாரம்

mahalakshmi cash
- Advertisement -

மனிதன் காலை முதல் இரவு வரை நிற்க கூட நேரமில்லாமல் ஓடி ஓடி உழைப்பது எல்லாம் இந்த பணம் என்னும் காகிதத்தை சம்பாதித்து சேர்க்க தான். என்ன தான் ஓடி ஓடி சம்பாதித்தாலும் ஓரளவிற்கு மேல் பணம் கையில் தங்குவதும் இல்லை சேர்க்க முடிவதும் இல்லை. இதற்கு நாம் பணம் சம்பாதிக்க தெரியாதவர்கள் என்று அர்த்தம் கிடையாது. சம்பாதிக்கும் பணம் நம்மிடம் தங்குவதற்கான தன்மை இல்லை என்று தான் பொருள்.

அப்படி நீங்கள் இரவு பகலாக பாடுபட்டு சம்பாதிக்கும் பணம் உங்கள் கையில் தங்கி அந்த பணம் பல மடங்கு பெருக உங்களின் முயற்சியோடு ஒரு சில தாந்த்ரீக பரிகாரங்களை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியான சில தாந்திரீக பரிகாரங்களை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

வீட்டில் பண வரவு அதிகரிக்க

பண வரவு அதிகரிக்க வேண்டும் என்றாலே அதற்குரிய தெய்வமான மகாலட்சுமி தாயாரை நாம் வணங்க வேண்டும். மகாலட்சுமி தாயாரின் அருட்கடாட்சம் நமக்கு முழுவதுமாக கிடைத்து விட்டாலே போதும். பணத்திற்கு எப்பொழுதும் பற்றாக் குறையே இருக்காது. அந்த தாயாரின் மனம் மகிழ்ந்து பணத்தை வாரி இறைக்கக் கூடிய அருமையான தாந்திரீக பரிகாரத்தை இப்பொழுது பார்க்கலாம்.

இந்த பரிகாரத்தை வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் செய்ய வேண்டும் வியாழக்கிழமை காலையில் வரும் குருஹேரையில் செய்யாமல் மதியம் நேரத்தில் வரும் குரு ஹோரையில் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து விட்டு. வெற்றிலையில் ஐந்து ஏலக்காய் ஒரு ரூபாய் நாணயம் வைக்க வேண்டும். இத்துடன் பாக்கு பூ பழம் அனைத்தும் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை வாரம் தோறும் தவறாமல் செய்து வாருங்கள். இந்த வழிபாடு முடிந்த பிறகு வழிபாட்டில் வைத்திருக்கும் ஏலக்காயும், நாணயத்தையும் நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். அடுத்த வாரம் பூஜை செய்யும் போது இதை மாற்றி புதிதாக வைத்து விடுங்கள். இப்படி செய்யும் போது மகாலட்சுமி தாயார் மனம் மகிழ்ந்து பொன்னையும் பொருளையும் வாரி வழங்குவார்.

அடுத்ததாக தாயாருக்கு வாசம் மிக்க பொருட்கள் எனில் மிகவும் விருப்பம். ஆகையால் தான் எப்பொழுதும் அவருக்கு மல்லிகை மலர்களை கொண்டு அர்ச்சிப்பதும் வாசனை மிக்க ஊதுபத்திகளை ஏற்றி வழிபாடும் செய்கிறோம். அந்த வகையில் அவருக்கு பிடித்த நறுமணங்களாகிய லவங்கப்பட்டை, துளசி, ஆரஞ்சு பழத்தோல், அண்ணாச்சி பழம், மல்லிகை, சந்தனம் மணம் நிறைந்த ஊதுபத்திகளை தினந்தோறும் நம் இல்லத்தில் ஏற்றி வரும் போது பண வரவு அதிகரிக்கும்.

- Advertisement -

இத்துடன் இப்பொழுதெல்லாம் ஏஞ்சல் எண் பரிகாரத்திற்கு அதிக பலன் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையிலான ஒரு பரிகாரத்தையும் இப்போது பார்க்கலாம். இந்த பரிகாரத்திற்கு ஒரு பிரியாணி இலை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பிரியாணி இலைக்கே பணத்தை ஈர்க்கக் கூடிய சக்தி உண்டு. அதில் மஞ்சள் அல்லது பச்சை நிற பேனாவால் கீழ்கண்ட எண்களை எழுதுங்கள்.

199621147
என்ற இந்த எண்ணை பிரியாணி இலையில் எழுதி வைத்து அதை உங்கள் மணி பரிசில் வைத்துக் கொள்ளுங்கள். பண வரவு தடையில்லாமல் இருக்கும். அது மட்டுமின்றி இதே முறையில் தயார் செய்த பிரியாணி இலையை நீங்கள் பணம் வைக்கும் இடத்திலும் வைக்கலாம். இதன் மூலமும் வீட்டில் பண வரவு அதிகரித்து கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: தொழில் விருத்தியாக பரிகாரம்

பண வரவு அதிகரிக்க செய்யக் கூடிய இந்த பரிகாரங்களை செய்து விட்டு நாம் எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தால் பலன் கிடைக்காது. நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் ஒரு தூண்டுகோலாய் நாம் செய்யும் பரிகாரங்கள் இருக்குமே அன்றி பரிகாரம் மட்டுமே பணத்தை வாரி தராது என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -