தொழில் விருத்தியாக பரிகாரம்

Indhiran business
- Advertisement -

இன்று பலரும் சொந்தமாக தொழில் புரிந்து முன்னேற ஆசைப்படுகிறார்கள். அதற்கான முயற்சியும் எடுக்கிறார்கள். ஒருவரிடம் கைகட்டி சம்பளம் வாங்கும் நிலையை விட நாமே சொந்தமாக ஒரு தொழிலை தொடங்கி சம்பாதிக்க வேண்டும் என்று உத்வேகம் இன்று பலரின் மனதில் உள்ளது. இதில் தவறு ஒன்றும் கிடையாது. தொழிலை தொடங்கும் முன்பு நாம் என்ன தொழில் செய்ய முனைகிறோமோ அதை பற்றிய தெளிவு நமக்கு தேவை.

அத்துடன் நாம் செய்யும் தொழிலை மேலும் உயர்வதற்கான வியாபார யுக்தி நமக்கு தெரிந்திருக்க வேண்டும். இத்துடன் தொழிலை நல்லபடியாக நடத்த தானும் கடுமையாக உழைக்க வேண்டும். இவையெல்லாம் செய்ததோடு நம் சாஸ்திரங்கள் சொல்லி வைத்த இந்த ஒரு எளிய வழிபாட்டையும் செய்யும் போது உங்கள் தொழிலில் நீங்கள் நல்ல முறையில் முன்னேறலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

தொழிலில் முன்னேற

நம்முடைய சாஸ்திரங்கள் நமக்கு பல விஷயங்களை சொல்லித் தந்திருக்கிறது. அவற்றை சரியான முறையில் பின்பற்றினாலே நம்முடைய வாழ்க்கையில் பல துயரங்களை கடந்து விட முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு தொழிலை தொடங்கும் போது என்ன தான் நாம் முதலீடுகள் செய்தாலும் தெய்வத்தை வணங்கி செய்வோம். அப்படி இந்த வியாபாரம் சிறக்க ஒரு சில தெய்வ வழிபாடு சிறந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக இந்த மூன்று தெய்வங்களை வணங்கி தொலை தொடங்க வேண்டும். சூரியன், இந்திரன், சோமன் இந்த மூவரையும் தினமும் நினைத்து நாம் வழிபாடு செய்யும் போது நம்முடைய தொழில் விருத்தி அடையும் என்று சொல்லப்படுகிறது. இவர்களின் வழிபாட்டிற்கென தனியாக யாகங்கள் மந்திர வழிபாடுகள் இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் நம்மால் அதை எல்லாம் செய்ய முடியாது. நாம் இருக்கும் இடத்திலே இவர்களை எளிமையாக எப்படி வழிபாடு செய்வது என்று பார்க்கலாம்.

- Advertisement -

யார் எந்த தொழிலை செய்வதாக இருந்தாலும் தொழில் புரியும் இடத்தில் நிச்சயம் ஒரு தீபம் ஏற்றி வழிபாடு வேண்டும். அந்த தீபத்தையே நீங்கள் சூரியனாக நினைத்துக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை ஏற்றிய பிறகு ஓம் சூரியனாய நமக என்ற இந்த மந்திரத்தை மூன்று முறை மனதார ஜெபித்த பிறகு உங்கள் முன் எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை சூரிய பகவானாக நினைத்து வணங்கி, நீங்கள் செய்யும் தொழில் செய்யும் இடதத்தை ஒரு முறை பார்க்க வேண்டும்.

அடுத்து சோமன் இவரை வழிபாடு செய்யும் போது கையில் ஜலத்தை வைத்துக் கொள்ள வேண்டும். இவரையும் இதே போல் தீபத்தின் முன் நின்று கையில் ஜலத்தை வைத்துக் கொண்டு ஓம் சோமனாய நமக என்ற மந்திரத்தை மூன்று முறை சொல்லிய பிறகு கையில் இருக்கும் இந்த ஜலத்தை தொழில் செய்யும் இடத்தில் தெளித்து விடுங்கள்.

- Advertisement -

கடைசியாக இந்திர வழிபாடு இந்த வழிபாடை செய்பவர்கள் தொட்டதெல்லாம் துவங்கக் கூடிய யோகத்தை பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அவ்வளவு ராசிக்காரராக இந்திரனை குறிப்பிடுகிறார்கள். இந்திரனை மனதார நினைத்துக் கொண்டு உங்கள் கையில் நாணயத்தை வைத்துக் கொள்ளுங்கள். இதைப் போல் ஓம் இந்திராய நமஹ இந்த மாதத்தை மூன்று முறை சொல்லிய பிறகு இந்த நாணயத்தை கல்லாப் பெட்டியில் அல்லது கேஸ் பாக்ஸில் போட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: போட்டித் தேர்வு திருமண தடை குழந்தை பாக்கியம் பெற 12 ராசிகளுக்கான பரிகாரம்

இதை எப்பொழுது செய்ய வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. தினமும் காலையில் வியாபாரத்தை துவங்கும் முன்பு தீபம் ஏற்றி வைத்து இந்த மூன்று பேரையும் மனதார நினைத்து இப்படி வழிபாடு செய்த பின் தொழிலை தொடங்கினால் தொழில் நல்ல முறையில் திருப்தி அடையும். லாபம் பல மடங்கு பெருகி நீங்கள் செல்வ செழிப்புடன் வாழலாம். வியாபாரம் விருத்தி அடைய இந்த வழிப்பாட்டு முறை உங்களுக்கு திருப்தியானதாக இருந்தால் நீங்களும் வழிப்பட்டு பல அடையுங்கள்.

- Advertisement -