வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கவும் வியாபாரம், தொழில் செய்யும் இடங்களில் லாபம் அதிகரித்து வருமானம் பெருகவும் பச்சை கற்பூரத்தை இதில் போட்டு வைத்தால் போதும். பணவரவை அதிகரிக்கும் பரிகாரம்.

Mahalakshmi Pachai Karpooram
- Advertisement -

வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டும் நம் கையில் பணப்புழக்கம் தாராளமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு தெய்வங்களின் அனுகிரகம் மிகவும் முக்கியம். அதிலும் மகாலட்சுமி தாயார் குபேரரும் பண செல்வத்தை வாரி வழங்கக் கூடிய தெய்வங்களாக திகழ்கிறார்கள் அவர்களை முறைப்படி வழிபட்டு வந்தால் பணப் பிரச்சனைகள் நமக்கு வராது என்று சொல்லப்படுகிறது.

இப்படி வழிபடுவதோடு அவர்களுக்கு உண்டான பொருள்களை வைத்து பரிகாரங்களை செய்யும் போது பணம் நமக்கு வசியமாகி நாம் இருக்கும் இடம் தேடி அவை வரும் என்று சொல்லப்படுகிறது. அப்படி ஒரு பரிகார முறையை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

கையில் பணப் புழக்கம் அதிகரிக்க பச்சை கற்பூரம்:
இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் பச்சைக் கற்பூரம் தான். பச்சை கற்பூரத்தை பற்றி சொல்ல வேண்டியதே கிடையாது மகாலட்சுமி தாயார் அனுகிரகம் பெற்ற பொருளாக இந்த பச்சை கற்பூரம் பார்க்கப்படுகிறது. பச்சைக் கற்பூரம் இருக்கும் இடத்தில் இதன் வாசனைக்கு மகாலட்சுமி தாயார் நிச்சயம் வந்து அருள் புரிவார் என்பது அனைவரும் அறிந்தது. அப்படியான இந்த பச்சை கற்பூரத்தை எப்படி பயன்படுத்தி நம்முடைய பணவரத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

இந்த பரிகாரத்தை தொடங்குவது குபேரருக்கு உகந்த நாளான வியாழன் அன்று மாலையில் ஆரம்பிக்கலாம் அல்லது மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமை காலை சுக்கிரஓரையில் ஆரம்பிக்கலாம். இரண்டு வேளையில் உங்களுக்கு வசதியாக ஒரு நேரத்தில் தேர்வு செய்து கொள்ளுங்கள். இதற்கு ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள் சில்வர் தட்டு தவிர மற்ற எதுவாக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

தட்டில் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ரூபாய் காயின் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் அதை சுத்தமான பன்னீரில் அலசி அந்த காயினை இந்த பச்சை கற்பூரத்தின் மீது வைத்து சந்தனத்தை பன்னீர் ஊற்றி குழைத்து போட்டு வைத்து விடுங்கள். அதன் மேல் ஒரு குங்குமப்பொட்டும் வைத்து விடுங்கள். இந்த தட்டை வீட்டில் பூஜை அறையில் மகாலட்சுமி தாயார் அல்லது குபேரர் படத்திற்கு முன்பாக வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள் தொழில் வியாபாரம் செய்பவர்களாக இருந்தால் அங்கே இருக்கும் சாமி படத்திற்கு முன்பாக இதை வைத்து விடுங்கள்.

இப்படி வைப்பதன் மூலம் இந்த பச்சை கற்பூரமானது பணத்தை ஈர்க்கும் அதிகரிக்கும் வாய்ந்த பொருளாக பார்க்கப்படுகிறது. இந்த பச்சைக் கற்பூரத்தை மட்டும் நாம் தினமும் மாற்றி விட வேண்டும். தினமும் மாற்றும் இந்த பச்சை கற்பூரத்தை எடுத்து தண்ணீரில் போட்டு விடுங்கள் அல்லது கால் படாத இடத்தில் போட்டு விட்டு இந்த ஒரு ரூபாய் நாணயத்தை மறுபடியும் பன்னீரில் அலசி சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து விடுங்கள். இதை தினந்தோறும் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வெறும் 21 நாளில் உங்களுக்கு பிடிக்காத வாழ்க்கை கூட, பிடித்தமான வாழ்க்கையாக மாறும். இந்த வழிபாட்டை செய்தால்.
இப்படி செய்வதை வழக்கமாகவே கொள்ளும் போது இந்த பொருள்கள் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி தாயாரும் குபேரரும் நிரந்தரமாகவே வாசம் புரிந்து பணவரவை தாராளமாகி கொடுப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் இதை செய்து பல மேடை எல்லாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -