உங்கள் கையில், லட்சக்கணக்கில் பணம் சேருவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த பரிகாரத்தை செய்தால்!

sembu-sombu-salt
- Advertisement -

அந்தக் காலங்களில் எல்லாம் அரசாண்ட ராஜாக்களும், சில மாந்திரீக தாந்திரீக வித்தைகளை செய்து தான் தங்களுடைய ராஜ்யத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள் என்று சொன்னால் நிச்சயம் அது பொய்யாகாது. வெற்றியை தேடித்தரும் சில பூஜைகளும், ஹோமங்களும், தாந்திரீகங்களும் இந்த பூமியில் ஆதிகாலத்திலிருந்தே பிறந்ததுதான். அதை சரியான முறையில், நாம் பயன்படுத்திக் கொண்டோமேயானால் நிச்சயம் வெற்றி அடைய முடியும். அந்த வரிசையில் நம் வீட்டில் அதிகப்படியான பணம் சேர்வதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றிய ஒரு சின்ன பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது ஒரு சுலபமான பரிகாரம். நம்பிக்கையோடு செய்து பார்க்கும் பட்சத்தில், நல்ல பலனை பெற முடியும்.

money

எந்த ஒரு பரிகாரமும், செய்தவுடன் பலனை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறு. ஒரு பிரச்சினைக்கு பல பரிகாரங்கள் சொல்லப்பட்டாலும், உங்களுக்கு தகுந்த பரிகாரம் எது என்பதை தேர்ந்தெடுக்க வேண்டியது உங்கள் கையில்தான் உள்ளது. அதை நினைவில் வைத்துக்கொண்டு பரிகாரத்தை தொடங்க வேண்டும். சரி. பணவரவு அதிகரிக்க என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்வோமா?

- Advertisement -

ஒரு செப்புப் பாத்திரம் கட்டாயம் இதற்கு தேவை. வேறு எந்த ஒரு உலோகப் பொருட்களையும் பயன்படுத்தினால், விரைவாக பலனை எதிர்பார்க்க முடியாது. செம்பினால் ஆன சொம்போ, டம்லரோ இருந்தால் எடுத்துக் கொள்ளலாம். அதில் கல் உப்பு, சர்க்கரை, பச்சரிசி ஒரு ரூபாய் நாணயம் இவைகளை நிரப்பி வைக்கப் போகின்றோம்.

sembu-sombu

இன்று நம்முடைய வீடுகளில் இனிப்பு சுவைக்காக பயன்படுத்துவது சர்க்கரை தான். ஆனால் சர்க்கரைக்கு பதிலாக, நாட்டு சர்க்கரை, வெல்லம் இவைகளை பயன்படுத்துவது சிறந்தது. நீங்கள் எடுத்து வைத்திருக்கும் செம்பு டம்ளரில், முதலாவதாக 2 டேபிள்ஸ்பூன் அளவு கல்லுப்பு, 2 டேபிள்ஸ்பூன் அளவு நாட்டுச் சர்க்கரையோ, சர்க்கரையோ அல்லது வெல்லமும் போட்டுக்கொள்ள வேண்டும். அதன் பின்பு பச்சரிசி 2 கைப்பிடி அளவு, அதன்மேல் ஐந்து ரூபாய் நாணயம் ஒன்று இப்படியாக, தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் போடப்படும் அளவுகள் உங்களுடைய இஷ்டம்தான். பச்சரிசியை மட்டும் இரண்டு கைப்பிடி அளவு போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதை எந்த கிழமையில் வேண்டும் என்றாலும் செய்யலாம். குறிப்பாக வியாழக்கிழமை செய்வது நல்ல பலனைத் தரும். நீங்கள் தயார் செய்த இந்த செம்பு பாத்திரத்தை உங்கள் வீட்டு பூஜையறையில் மகாலட்சுமிக்கு முன்பாக வைத்து விடவேண்டும். எந்த கிழமையில் நீங்கள் இதை தொடங்குவீர்களோ, அந்தக் கிழமையில் இருந்து ஒரு வாரம் கழித்து, அதாவது ஏழு நாட்கள் கழித்து, இந்த பொருட்களை எல்லாம் புதியதாக மாற்றி வைக்க வேண்டும். பழைய பொருட்களை காக்கை குருவிகளுக்கு உணவாக போட்டுவிடலாம். வியாழக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்தால், அடுத்த வியாழக்கிழமை பழைய பொருட்களை மாற்றி விட்டு, புதிய பொருட்களை வைக்கலாம்.

money

பணவரவு அதிகரிக்கவும், கையில் இருக்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்கவும், வீட்டிலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தொழில் செய்யும் ஸ்தாபனத்திலும், இந்த பரிகாரத்தை செய்யலாம். தொடர்ந்து 21 வாருங்கள், இப்படி செய்து வரும் பட்சத்தில் மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து, பயனடைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
கற்பூரவள்ளி இலை இருந்தா, கை நிறைய காசு வரும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Panam sera. Panam sera pariharam. Panam sera pariharam Tamil. Panam sera Tamil.

- Advertisement -