மணி பிளான்ட்டை விட, பணத்தை அதிவிரைவாக ஈர்க்கக் கூடிய சக்தி இந்த செடிக்கு உண்டு. வீட்டிற்குள் இந்த செடியை வைத்தால் பஞ்சம் நம் வீட்டை விட்டு வெளியே ஓடிவிடும்.

money-plant
- Advertisement -

பெரும்பாலும் பணத்தை ஈர்ப்பதற்கு இன்றைய சூழ்நிலையில் நிறைய பேர் வீடுகளில் மணி பிளாண்ட்டை வைத்து வளர்க்க கூடிய வழக்கம் இருந்து வருகிறது. சில பேருக்கு இந்த மணிபிளான்ட் நல்ல ராசியாக இருக்கும். மணி பிளான்ட் வளர வளர அவர்களுடைய வீட்டில் பணப் புழக்கம் அதிகரிக்கும். சில பேருடைய வீட்டில் மணி பிளாண்ட் வைத்தும் பண கஷ்டம் இருக்கிறது என்றால், என்ன செய்வது. மணிபிளான்டுடன் சேர்த்து இந்த ஒரு செடியையும் உங்களுடைய வீட்டிற்குள் வைத்துப் பாருங்கள். நிச்சயமாக வீட்டிற்குள் இருக்கக்கூடிய கஷ்டம் சீக்கிரமே வீட்டை விட்டு வெளியே சென்றுவிடும்.

money4

மணி பிளான்ட்க்கு இணையாக பணத்தை அதிவிரைவாக ஈர்க்கக் கூடிய சக்தி உடைய செடி என்றால் அது கொத்தமல்லி செடிகள்தான். கொத்தமல்லி தழை, நம் சமையலில் சேர்ப்பது. இதற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஒரு சிறிய மண் குடுவையை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் அகலமாக பெரிய மண் அகல்விளக்கு இருந்தாலும் சரிதான். அதன் உள்ளே மண்ணை பரப்பி விட வேண்டும்.

- Advertisement -

பரப்பிய இந்த மண்ணில் கொத்தமல்லி விதைகளை நுணுக்கி அந்த மண்ணோடு சேர்த்து தண்ணீர் தெளித்து வந்தால் அந்த விதைகள் லேசாக முளைக்க ஆரம்பிக்கும். இந்த செடியை வீட்டுக்குள் வைத்து இவ்வாறுவளர்க்கத் தொடங்கினோம் ஆனால், அந்தச் செடி முளைக்க ஆரம்பிக்கும் போது, வளரத் தொடங்கும் போது, உங்களுடைய வருமானமும் வளர்ச்சியும் படிப்படியாக அந்த செடியை போலவே வளர ஆரம்பிக்கும்.

money-plant1

அந்தத் தொட்டியில் உள்ள கொத்தமல்லி விதைகளை நீங்கள் சமையலுக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். தவறு கிடையாது. மீண்டும் மீண்டும் வீட்டுக்குள் அந்த செடி வரும்படி பார்த்துக் கொண்டாலே போதும். சரி எங்களால் இப்படி கொத்தமல்லி தழைகளை வைத்து வளர்ப்பதற்கு வீட்டிற்குள் வசதியும் கிடையாது. எங்களுக்கு அதற்கான நேரமும் இல்லை என்று சொல்லுபவர்களுக்கு சுலபமான முறையில் வேறு ஒரு வழியும் உள்ளது.

- Advertisement -

கொத்தமல்லி தழையில் இருக்கக்கூடிய வேரை வெட்டி அதில் இருக்கும் மண்ணை சுத்தமாக கழுவி விட்டு, அந்த வேரை வெயிலில் உலர வைத்துக் கொள்ளவேண்டும். காய்ந்த வேர்களை ஒரு மஞ்சள் துணியில் வைத்து சிறிய முடிச்சாக கட்டி, உங்கள் வீட்டில் தென்கிழக்கு மூலையில் வைத்து விடுங்கள். இந்த வேர் வீட்டில் இருந்தாலும் வீட்டில் இருக்கும் பஞ்சம் வெளியேற்றப்படும். இந்த வேரை தென்கிழக்கு மூலையில் வையுங்கள். அது மிகமிக அதிர்ஷ்டத்தை தரக்கூடிய ஒரு விஷயமாக சொல்லப்பட்டுள்ளது.

kothamalli

மேல் சொன்ன இரண்டு விஷயங்களையும் எங்களால் செய்ய முடியாது என்பவர்களுக்கும் மூன்றாவதாக இன்னும் சுலபமாக ஒரு விஷயம் உள்ளது. ஒரு கண்ணாடி டம்ளரில் பாதி அளவு தண்ணீரை வைத்து அதன் உள்ளே இரண்டு இணுக்கு கொத்தமல்லி தழைகளை போட்டு விடுங்கள். உங்களுடைய வீட்டிற்கு சமையலுக்கு தினம்தோறும் கொத்தமல்லி தழைகளை வாங்கி வருவீர்கள் அல்லவா, அதிலிருந்து இரண்டு இனுக்கு எடுத்து டம்ளரில் உள்ள தண்ணீரில் போட்டு வரவேற்பறையில் வைத்தால், இரண்டு நாட்களுக்கு பச்சை பசேலென இருக்கும். மல்லி தழைகள் வாட ஆரம்பித்த பின்பு மீண்டும் அதை மாற்றி வைத்துக் கொண்டே இருக்கலாம். இதை செய்தாலும் வீட்டில் பண கஷ்டம் வராது. உங்க வீட்ல உருளியில் தண்ணீர் போட்டு அதில் பூ வைக்கும் பழக்கம் இருந்தாலும் அதனுள்ளே 2 கொத்தமல்லி தழைகளை போட்டு வைத்தாலும் நல்லதுதான்.

kothamalli1

மேல் சொன்ன விஷயங்களில் உங்களுக்கு எது சுலபமாக உள்ளதோ அதை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் மணி பிளாண்ட் இல்லை என்றாலும் வெறும் கொத்தமல்லி தழைகளை வைத்து பலனடையலாம். நிச்சயம் உங்கள் வீட்டில் இருக்கும் பண கஷ்டத்திற்கு கூடிய சீக்கிரமே ஒரு விடிவு காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -