கேட்டதெல்லாம் கொடுக்கும் முருகனுக்கு மாதத்தில் இந்த ஒரு விரதத்தை வீட்டிலேயே இப்படி மேற்கொண்டால் நினைத்ததெல்லாம் அப்படியே நடக்கும் தெரியுமா?

murugan-aval
- Advertisement -

எல்லோருக்கும் பிடித்தமான பொதுவான கடவுள்களில் முருக பெருமானும் ஒருவராக இருக்கின்றார். முருகன் வழிபாடு செய்வது கலியுகத்திலும் சிறப்புற வாழ வழிவகை செய்வதாக பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது. முருகனுடைய அறுபடை வீடுகளிலும் இந்த நாளில் விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன. மாதாமாதம் வரும் இந்த நாளில் வீட்டிலேயே இப்படியான எளிய விரதத்தை மேற்கொண்டால் மனதில் நினைத்த விஷயங்கள் அப்படியே நடக்கும் என்பது ஐதீகம். மிக எளிமையாக கடைப்பிடிக்கப்படும் இந்த விரதம் நாமும் எப்படி மேற்கொள்ளலாம்? இதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

murugan-silai-abishegam

முருகனுக்கு உகந்த சஷ்டி திதி மிகவும் விசேஷமானது. கார்த்திகை மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டியில் விரதம் இருப்பவர்களுக்கு சகல வளங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் மாதாமாதம் வரும் சஷ்டி தினமன்று வீட்டிலும், கோவிலிலும் பூஜைகள் மேற்கொள்பவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைப்பார்கள். குறிப்பாக குழந்தை இல்லாதவர்களுக்கு சஷ்டி விரதம் இருந்தால் விரைவில் குழந்தை பிறக்கும் என்கிற நம்பிக்கையும் பக்தர்களிடையே உண்டு.

- Advertisement -

சஷ்டி விரதம் குழந்தை வரம் மட்டுமல்ல! கேட்கும் வரங்கள் அத்தனையும் அளிக்கும் என்பது நம்பிக்கை. மிகவும் எளிமையாக இருக்கும் முருகப்பெருமான் திருஉருவத்தை பார்க்கும் பொழுதே பக்தி பரவசம் நமக்குள் மேலோங்கும். மாதா மாதம் வரும் சஷ்டி தினமன்று முருகன் கோவிலுக்கு சென்று அவரை தரிசித்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். உணவேதும் அருந்தாமல் அந்த நாளில் விரதம் இருந்து முருகனை நினைத்து, பக்தி பாடல்களை பாடினால் கேட்ட வரம் கிடைக்கும்.

காலண்டரில் திதியில் சஷ்டி என்று போட்டிருக்கும். அல்லது முருகனுடைய படம் நிச்சயமாக இருக்கும். இந்த நாளைக் குறித்துக் கொண்டு காலை முதல் மாலை வரை தண்ணீரைத் தவிர உணவு எதுவும் அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். காலை, மாலை இருவேளையும் பூஜை செய்து விரதத்தை முடித்துக் கொள்வது உத்தமம். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு பூஜையறையில் முருகன் படத்தின் முன்பு நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும்.

- Advertisement -

தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் கட்டாயம் வைக்க வேண்டும். அதில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வையுங்கள். பூஜையில் தேங்காய் உடைத்து இருபுறமும் வைக்க வேண்டும். முருகனுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மலர் மாலை சாற்றி அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அவருக்கு இஷ்ட நைவேத்தியமாக அவல் உணவுகள் வைக்கலாம். முழு நேர விரதம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் வாழைப்பழம் சாப்பிடலாம். அவ்வளவுதாங்க! எளிமையான முறையில் தீப, தூப, ஆராதனை காண்பித்து கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும்.

aval1

வேலைக்கு செல்பவர்கள் காலையில் பூஜையை முடித்து விட்டு விளக்கை மலை ஏற்றி விட்டு பின்னர் வேலைக்கு தாராளமாக செல்லலாம். மீண்டும் மாலையில் இதே போல் பூஜை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். வீட்டிலேயே இருப்பவர்கள் விரதம் முடியும் வரை முருகனுக்கு விளக்கு ஏற்றி வைப்பது மிகவும் நல்லது. காலையில் அல்லது மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்து விட்டு வாருங்கள்.

- Advertisement -

vilakku-poojai

இது போல் ஒவ்வொரு மாதமும் நாம் செய்து வர எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேறும். சஷ்டி தினத்தில் வீட்டில் கந்த சஷ்டி கவசம் ஒலிப்பதும், அதனை நாம் வாசிப்பதும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்யும். தீய சக்திகளை விரட்டி அடிக்கும். சுப காரியங்கள் கைகூடும். கன்னிப் பெண்கள் சஷ்டி விரதம் இருந்தால் நல்ல ஒரு மண வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம். இதுவரை தெரியாதவர்கள் இனி இந்த விரதம் மேற்கொண்டு பயன்பெற்று முருகன் அருள் பெறலாம்.

இதையும் படிக்கலாமே
உங்களுக்கு ஆபத்து வர இருப்பதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகள்! இந்த அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு இருந்தால் எச்சரிக்கையாக இருக்கலாமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -