நில வாசல் படியில் இந்த 1 பொருள் மட்டும் இருந்தால் போதும். மூதேவி வீட்டிற்குள் நுழையாமல் வாசலில் இருந்தே திரும்பி சென்று விடுவாள். வீட்டில் இருக்கும் பெண்களின் மனமும் குழப்பம் இல்லாமல் தெளிவு பெறும்.

door-vasal-lakshmi
- Advertisement -

ஸ்ரீதேவியின் மூத்த சகோதரியான மூதேவி, ஒரு வீட்டில் வாசம் செய்ய தொடங்கி விட்டால், அந்த வீட்டில் நடப்பவை அனைத்தும் எதிர்மறையாக தான் நடக்கும். மூதேவி என்பவள் நம்முடைய வீட்டில் இரவு நேரத்தில் மட்டும் தான் இருக்க வேண்டும். விடிந்தவுடன் வீட்டிற்குள் இருக்க கூடாது. அப்படி நிரந்தரமாக நம்முடைய வீட்டில் மூதேவி தங்கி விட்டால் நிச்சயமாக வீட்டில் இருக்கக் கூடிய பெண்களின் மனதில் மன குழப்பம், தெளிவின்மை ஏற்பட்டு வீட்டில் பல வகையான பிரச்சனைகள் வர தொடங்கி விடும்.

milk-boiling

குறிப்பாக பெண்கள் சமைக்கும் போது சமைக்கின்ற பொருட்களை சரியான பக்குவத்தில் சமைக்காமல், தீய விட்டுக் கொண்டே இருந்தாலும், பொங்கி வழிய விட்டுக் கொண்டே இருந்தாலும், அது வீட்டிற்கு தரித்திரம் என்று சொல்வார்கள். இதற்கு காரணம் நம்முடைய கவனக்குறைவு! இந்த அலட்சியம் ஏன் வருகிறது? மனதில் நிம்மதி இல்லை. குழப்பம் நிறைந்த வீடாக இருந்தால் இப்படிப்பட்ட பிரச்சனைகள் வீட்டில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.  அதாவது அடிக்கடி பாலை பொங்க விடுவது, அடுப்பில் சாதத்தை வைத்து மறந்துவிடுவது, பருப்பை வைத்து மறந்துவிடுவது, இப்படியாக கவனக் குறைவின் மூலம், ஏற்படக்கூடிய கருகிய வாடையும் மூதேவி வீட்டில் கூடி இருப்பதற்கு ஒரு அறிகுறிதான்.

- Advertisement -

சரி, இதனை சரி செய்ய என்ன செய்வது? மூதேவிக்கு சிறிதும் விருப்பம் இல்லாத இந்த தூபத்தை உங்களுடைய வீட்டில் வாரம் இரண்டு முறையேனும் போடலாம். சாம்பிராணியோடு கலந்து குங்குலியம், கொப்பரை தேங்காய் துருவல், வெண்கடுகு, இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து தூபம் போட்டாலே போதும் வீட்டில் மூதேவி வாசம் செய்வது முற்றிலும் அகற்றப்படும்.

lemon

இதோடு சேர்த்து வீட்டில் அடுப்பில் வைத்த பால், சாதம், பருப்பு, இப்படிப்பட்ட உணவுப் பொருட்கள் கருகி வாடை அடித்தாலும், அந்த இடத்தில் மூன்று பச்சரிசியை வைத்து, ஒரு சொட்டு தீர்த்தத்தை விட்டு, அன்னலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வது, எந்த தோஷத்தையும் நம் வீட்டில் உண்டாகாமல் இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இதோடு சேர்த்து உங்கள் வீட்டு நிலை வாசல் படியில் பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய எலுமிச்சம் கனியை இரண்டாக வெட்டி, வாசலில் இரண்டு பக்கம் வைத்தாலும் மூதேவி வீட்டிற்குள் நுழைய மாட்டாள் என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படி இல்லை என்றால் பச்சை எலுமிச்சம்பழத்தை வாங்கிக்கொள்ளுங்கள். மஞ்சள் நிற எலுமிச்சைபழம் அல்ல. கூடவே, மூன்று பச்சை நிற பச்சை மிளகாய்களை எடுத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சம் பழம் அதன் மேலே மூன்று பச்சை மிளகாய்களை நூலில் கோர்த்து அப்படியே நில வாசப்படியில் கட்டிவிட வேண்டும்.

green-chilli

இப்படி செய்தால் நிச்சயமாக வீட்டு வாசலை தாண்டி மூதேவி வீட்டுக்குள் நுழைவதற்கு வாய்ப்பு இல்லை. இந்த பச்சை நிற எலுமிச்சம் பழத்தையும், பச்சை மிளகாயையும் மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் கூட போதும். முயற்சி செய்து பாருங்கள். வீட்டில் இருக்கக் கூடிய பிரச்சனைகளுக்கு சீக்கிரமே விடிவுகாலம் பிறக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுடைய மனக்குழப்பம் நீங்கி தெளிவு பெரும். சந்தோஷம் நிலைத்து இருக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்தப் பொருட்களை உங்களுடைய வீட்டில், இப்படி வைத்தால் சுபிட்சம் பொங்கி வழியும். லட்சுமி கடாட்சம் போதும் போதும் என்ற அளவிற்கு நிறைவாக கிடைக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -