குளித்து முடித்த பின் இதை மட்டும் மறக்காமல் செய்து விடுங்கள். மூதேவி உங்களை நெருங்கவே மாட்டாள்.

- Advertisement -

நம் முன்னோர்கள் குளிப்பதற்கென்றே பல வரையறைகள் வைத்திருந்தார்கள். அதாவது குளிக்க தொடங்கும் போது முதலில் காலில் தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு கையில் சிறிது தண்ணீர் எடுத்து உச்சந் தலையில் லேசாக தெளித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு முட்டி மேல் ஊற்ற வேண்டும். அடுத்து இடுப்புக்கு மேலே தண்ணீர் ஊற்ற வேண்டும். அடுத்தாக உடல் முழுவதும் நனையும் படி தண்ணீர் ஊற்ற வேண்டும். கடைசியாக தான் தலையில் தண்ணீர் ஊற்ற  வேண்டும். இது தான் முறையான குளியல்.

பழங்காலத்தில் எல்லாம் நீர்நிலைகளில், ஆறுகளில், குளங்களிலும், குளிக்கும் போது முதலில் கால்களை நனைந்ததும் ஒரு சொட்டு தண்ணீர் எடுத்து தலையில் தெளித்துக் கொள்வார்கள். பிறகு மெது மெதுவாக தண்ணீரில் இறங்கி உடல் முழுவதும் நனைந்த பிறகு தான் மூழ்கி தலையை நனைப்பார்கள். இதற்கு காரணம் நாம் இப்படி கால் இடுப்பு என்று ஒவ்வொரு இடமாக நனைக்கும் போது தான் நம் உடம்பில் உள்ள உஷ்ணமானது சிறிது சிறிதாக மேலே சென்று காது மூக்கு வாய் துவாரங்களில் வெளியே செல்லும். இப்படி செல்லும் உஷ்ணம் நேரடியாக தலைக்கு ஏறி பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதற்காகத் தான் உச்சந்தலையில் சிறிது தண்ணீர் தெளித்து கொண்டார்கள் .

- Advertisement -

இப்போதெல்லாம் அப்படி அல்ல, குளியலறைக்கு சென்ற உடனே ஷவரைத் திறந்து முதலில் தலையை நனைத்து விடுகிறோம். இதனால் நம் உடலில் உஷ்ணம் வெளியேற முடியாமல் அப்படியே உடலுக்குள்ளே தங்கி பல வியாதிகளை நமக்கு ஏற்படுத்தி விடுகிறது.

நம் உடம்பில் தோன்றும் உஷ்ணமானது அவ்வப்போது வெளியேறினால் தான் உடல் நலம் சீராக இருக்கும். இதற்காகத்தான் நம் பெரியவர்கள் குளிப்பதற்கு என்று இப்படியான வரையறைகளை வகுத்து வைத்தார்கள். சரி குளிப்பது எப்படி என்று இதுவரை தெரிந்து கொண்டோம். ஆனால் குளிப்பதற்கும் மூதேவி நம்மிடம் நெருங்குவற்கும் என்ன தொடர்பு என்பதை இனி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: உங்கள் கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா? கனவில் கடவுள் வருவது ஏன்?.

குளித்து முடித்த பின் நாம் செய்யும் ஒரு சிறு தவறு மூதேவி நம்மிடம் நிரந்தரமாக ஆட்சி செய்ய நாமே வழி வகுத்து கொடுத்து விடுகிறோம். அதாவது நாம் குளித்து முடித்தவுடன் முதலில் நாம் முகத்தை தான் துடைப்போம். இப்படி முகத்தை துடைக்கும் போது நம் முகத்தில் மூதேவி அமர்ந்து கொள்கிறாள். வீட்டில் மூதேவி இருந்தாலே பெரும் பிரச்சனைகளும், வறுமைகளும் சூழும். இதில் முகத்தில் அமர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம். வீட்டில் தரித்திரம் தாண்டவம் ஆடும்.

மூதேவிக்கு பிடித்தமானது வறட்சியான இடம், குப்பை, அசுத்தம், கெட்ட வார்த்தைகள், அழுகை என அவளுக்கு பிடித்ததை அடுக்கிக் கொண்டே செல்லலாம். நம்மிடம் அவளுக்கு பிடித்தது பொட்டு வைக்காத முகம், தலைவராத முடி, அழுக்கடைந்த ஆடை, சுத்தம் இல்லாத உடல், இப்படி இதையெல்லாம் ஓரளவுக்கு நாம் தெரிந்து கொண்டு மாற்றி இருப்போம். ஆனால் முதலில் முகத்தை துடைத்தால் மூதேவி வாசம் செய்வாள் என்பது நமக்கு கொஞ்சம் புதிய தகவலாக தான் இருக்கும். அதே போல மூதேவிக்கு வறட்சியான உடலும் பிடிக்கும் என்பது பலருக்கும் தெரியாது.

நாம் குளித்து முடித்தவுடன் முதலில் முகத்தை தான் துடைப்போம். நாம் குளித்ததும் எந்த இடம் முதலில் வறட்சி அடைகிறதோ அங்கு வந்து மூதேவி ஒட்டி கொள்வாள்.  இந்த ஒரு தவறை மட்டும் நாம் செய்யாமல் இருந்தால் மூதேவி நம்மை நெருங்காமல் தப்பித்து கொள்ளலாம். நம் வீட்டில் பெரியவர்கள் குளித்து முடித்து வரும் போது கவனித்து பாருங்கள். அவர்கள் துண்டை வைத்து முதலில் முதுகை தான் துடைப்பார்கள். இனி நாமும் குளித்து முடித்ததும் முகத்தை துடைக்கும் தவறு செய்யமால், முதுகை முதலில் துடைத்து மூதேவியை அண்ட விடமால் பார்த்து கொண்டால் நமக்கு பெருமளவு பாதிப்பு கிடையாது.

- Advertisement -