இந்த 4 பொருளை சேர்த்து மூலிகை டீ போட்டு பாருங்க! மனதிற்கும், தொண்டைக்கும் இதமாக இருக்கும்.

cold-tea-masala
- Advertisement -

மூலிகை டீ செய்வது எப்படி | Mooligai tea recipe in Tamil

காலையில் எழுந்ததும் டீ குடிக்கும் சுகமே தனிதான்! பலரும் காபி குடிப்பதை விட, டீ குடிக்கவே அதிகம் விரும்புவார்கள். அப்படிப்பட்ட இந்த தேனீரில் இந்த நான்கு பொருட்களை சேர்த்து போடும் பொழுது அதனுடைய ருசி அபாரமாக இருக்கும். இது மனதிற்கும், தொண்டைக்கும் இதமானதாகவும் இருக்கும். சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகளை விரட்டி அடிக்கும் அற்புதமான இந்த தேநீரை எப்படி ஆரோக்கியமாக போடுவது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

தேநீர் அருந்துவது ஒரு அடிக்சன் என்றே கூறலாம். தினமும் தேநீர் அருந்துபவர்களுக்கு ஒரு நாள் தேநீர் அருந்தாவிட்டாலும் ஒரு மாதிரியாக இருக்கும். தலை வலிப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதற்கு அடிமையாகி போனவர்கள் இதனுடன் சில மூலிகை பொருட்களை சேர்த்து குடித்து பழகி பாருங்கள், ஆரோக்கியமாவது நன்றாக இருக்கும்.

- Advertisement -

செய்முறை

டீ போடுவதில் கூட ஒரு முறை இருக்கிறது. பாலில் டீ தூளை போட்டு சர்க்கரை போட்டால் வேலை முடிந்து விட்டது என்று நினைத்து விடக்கூடாது. ரெண்டு டம்ளர் டீ வேண்டும் என்றால் ஒரு டம்ளருக்கு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் இந்த தண்ணீரில் நான்கைந்து புதினா இலைகளை இடித்து சேருங்கள். இது நல்ல ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

பின்னர் இரண்டு துண்டு இஞ்சியை நன்கு தோல் சீவி விட்டு உரலில் இட்டு மைய இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். இது சளி, கபம் போன்ற பிரச்சனைகளை அண்ட விடாமல் பாதுகாக்கும் அற்புதமான மூலிகை ஆகும். தினமும் தேநீருடன் இதை போட்டு குடித்து வருவது ரொம்பவே நல்லது. பின்னர் இவற்றுடன் ரெண்டு ஏலக்காய், 2 கிராம்பு இடித்து சேருங்கள். இது நல்ல ஒரு மணத்தையும் தொண்டைக்குள் வைரஸ் கிருமிகள் நுழையாமலும் பாதுகாக்கும் அற்புதமான மூலிகையாக செயல்படுகிறது.

- Advertisement -

இந்த நான்கு பொருட்களை சேர்த்து தண்ணீர் நன்கு கொதித்து பாதியாக சுண்டி வர வேண்டும். இதில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நீங்கள் நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றை சேர்க்கலாம். பின்னர் பாதி அளவிற்கு நன்கு சுண்டியதும், ஒன்றரை டம்ளர் அளவிற்கு கெட்டியான பாலை காய்ச்சி சேர்க்க வேண்டும். காய்ச்சின பாலை சேர்ப்பதால் பால் திரிய வாய்ப்பில்லை! அவ்வளவு தான் ரெண்டு கொதி கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம். அதிகம் கொதிக்க வேண்டிய அவசியமில்லை, ஏற்கனவே தண்ணீரில் மூலிகை பொருட்கள் மற்றும் தேயிலை தூளின் சாறு இறங்கி இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
சின்ன வெங்காயம் சேர்த்து இப்படி ஒருமுறை புதினா சட்னி செஞ்சு பாருங்க வாழ்க்கையில் இந்த சட்னியின் ருசியை மறக்கவே மாட்டீங்க!

வடிகட்டி மிதமான சூட்டில் குடித்து பாருங்கள், அவ்வளவு அருமையாக இருக்கும் ஆஹா… என்று சொல்லிக் கொண்டே குடிக்கலாம். மசாலா டீயை காட்டிலும் இப்படி மூலிகை பொருட்கள் சேர்த்த இந்த எளிமையான தேனீரைப் போட்டு குடிப்பதன் மூலம் அன்றைய நாள் பொழுதை இனிமையாக மாற்றலாம். காலையில் எழுந்ததும் இந்த டீ குடித்து முடித்துவிட்டு வேலை செய்தால் அவ்வளவு சுறுசுறுப்பு உடம்பில் நம்மால் உணர முடியும்.

- Advertisement -