கோடீஸ்வர யோகத்தை அள்ளி தர கூடிய இந்த நாளை தவறவிடாமல், இன்று மூன்றாம் பிறை தரிசனத்தின் போது மறக்காமல் இதை மட்டும் செய்து விடுங்கள். பணத்தட்டுப்பாடு என்பதே உங்க வாழ்க்கையில் வராது.

- Advertisement -

நம் வழிபாட்டின் கால நேரத்தை இரண்டு காலங்களாக பிரிக்கிறோம். காலையில் எழுந்து வணங்குவதை பிரம்ம முகூர்த்த நேரம் என்றும், மாலையில் வணங்குவதை விஷ்ணு முகூர்த்தம் என்றும் கூறப்படுகிறது. இந்த விஷ்ணு முகூர்த்த வேளையில் அமாவாசைக்கு அடுத்த மூன்றாவது நாள் வானில் தெரியும் பிறை நிலவை தான் நாம் மூன்றாம் பிறை தரிசனம் என்றும் சந்திர தரிசனம் என்றும் கூறுகிறோம். இந்த தரிசனத்தின் போது நாம் எப்படி வணங்கினால் நம்முடைய துன்பங்கள் தீரந்து செல்வ வளத்துடன் வாழலாம் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த மாதத்தில் மூன்றாம் பிறை தரிசனம் 24.12. 22 அன்று வருகிறது. 23.12.22அன்று தானே அமாவாசை அப்போது என்றால் மூன்றாம் பிறை ஞாயிறு அன்று தான் வரும் என்று நீங்கள் நினைக்கலாம். அமாவாசை 22 .12. 22 அன்று மாலை தொடங்கி 23.12 .2 2 அன்று மாலை முடிகிறது. எனவே இன்று மாலை தோன்றும் பிறை தான் மூன்றாம் பிறை.

- Advertisement -

பொதுவாகவே மூன்றாம் பிறை பார்ப்பது என்பது நல்ல விஷயமாகவும், நல்ல சகுனமாகவும் கூட எடுத்துக் கொள்ளலாம்.இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை காணும் போது நாம் செய்த பாவங்கள் தீர்வதோடு வாழ்க்கையில் மேலும் செல்வங்கள் பெறுகி வளமான வாழ்வை வாழ வழி செய்யும். எனவே தான் நம் முன்னோர்கள் மூன்றாம் பிறை தரிசனத்தை மிகவும் முக்கியமான ஒரு வழிப்பாடாகவே செய்து வந்தார்கள்.

இந்த மூன்றாம் பிறை தரிசனத்திற்கு இன்னும் பல அற்புத பலன்கள் உண்டு. ஜாதக கோளாறு ,உடல் நல கோளாறு போன்றவர்கள் கூட இந்த பிறை நேரத்தில் செய்யக்கூடிய விஷயங்கள் நிறைய உண்டு. இப்போது நாமும் இந்த மூன்றாம் பிறை வழிபாட்டில் நம் துன்பம் தீர்ந்து செல்வம் சேர எப்படி தீபம் ஏற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

செல்வம் பெருக மூன்றாம் பிறை தரிசனம்
இந்த மூன்றாம் பிறை நாளன்று சனிக்கிழமை வருவதால் நீங்கள் எப்போதும் போல் உங்கள் வீட்டு பூஜை வேலைகளை எல்லாம் மாலைக்குள் முடித்து விடுங்கள். மாலை 6 மணிக்கு வீட்டிற்கு வெளியே நிலவொளி படும் இடத்தில் ஒரு தாம்பாளத்தில் நவதானியங்களை பரப்பி கொள்ளுங்கள். இந்த தாம்பாளத்தில் ஒரு துண்டு பச்சை கற்பூரம், ஒரு ரூபாய் நாணயம், மஞ்சள், குங்குமம் அது மட்டுமின்றி சனிக்கிழமையில் இந்த பிறை வந்திருப்பதால் பெருமாளுக்கு உரிய துளசி இலைகள் இரண்டு அனைத்தையும் வைத்த பிறகு, அதன் மேல் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சி திரி போட்டு தீபம் வைத்து கொள்ளுங்கள். இந்த தீபத்தை நில ஒளிக்கு நேராக காட்டி உங்கள் மனதில் இருக்கும் வேண்டுதல், கடன் பிரச்சனை, போன்ற உங்களுக்கு உள்ள சகலவிதமான பிரச்சனைகளையும் தீர வேண்டும் என்று மனதார வேண்டி கொள்ள வேண்டும். இந்த தீபத்தை அணியாமல் உங்கள் வீட்டில் பூஜை அறையில் கொண்டு வைத்து விடுங்கள்.

அதன் பிறகு இந்த தட்டில் வைத்த பொருட்கள் அனைத்தையும் ஒரு சிகப்பு நிற துணியில் வைத்து முடிச்சாக கட்டி நீங்கள் பணம் வைத்து அல்லது நகை வைக்கும் இடத்தில் இதில் வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: உங்க வீட்டில் இந்த செடி இருக்கிறதா? வீட்டில் வளர்க்கும் சிகப்பு நிற பூ பூக்கும் செடிகளுக்கு பணத்தை இருக்கும் சக்தி இருக்கிறதா என்ன?

இதனால் உங்கள் கடன் பிரச்சனைகள் தீருவதுடன் பணம் நகை, மட்டுமின்றி அனைத்தும் வளமும் பெருகி நல்ல ஒரு வளமான வாழ்க்கை வாழ்வதற்கு எந்த மூன்றாம் பிறை தீபம் உறுதுணையாக்கும்.

- Advertisement -