ரொம்பவும் வயதானவர்கள் படுத்த படுக்கையிலேயே இருந்து வாழவும் முடியாமல், உயிர் துறக்கவும் முடியாமல் கஷ்டப்படுகிறார்களா? இவ்வளவு பெரிய கஷ்டத்திற்கு தீர்வு தர இந்த 1 இலையால் மட்டும் தான் முடியும்.

sivan3
- Advertisement -

இருப்பதிலேயே பெரிய கஷ்டம் என்ன தெரியுமா. கடைசி காலத்தில் உயிர் வாழவும் முடியாமல், அதே சமயம் நம்மை விட்டு உயிர் பிரியவும் முடியாமல் ஒரு கஷ்டம் வரும். இது எல்லோருக்கும் வராது. சில பேர் விழுந்தேன் எழுந்தேன் என்று போய் சேர்ந்து விடுவார்கள். நாம் கூட வழக்கத்தில் சொன்னதுண்டு. ‘இவருக்கு நல்ல இறப்பு. யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல், பாரமாக இருக்காமல், சட்டுன்னு போய் சேர்ந்துட்டாரு’ அப்படின்னு. சில பேர் படுத்த படுக்கையில் ரொம்பவும் கஷ்டப்படுவார்கள். அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாது. கை கால் கூட அசைக்க முடியாது. உயிர் மட்டும் ஒட்டி இருக்கும். உலகத்தில் இருக்கக்கூடிய கஷ்டத்திலேயே மிகப் பெரிய கஷ்டம் இதுதான். இவ்வளவு பெரிய மிகக் கொடுமையான கஷ்டம் எந்த குடும்பத்திற்கு வரும் தெரியுமா? கர்ம வினைகள் அதிகமாக இருக்கக்கூடிய குடும்பத்திற்கு தான் வரும் என்று சொல்கிறது சாஸ்திரம்.

அடுத்தவர்களை இப்படி குறை சொல்லக்கூடாது. இருந்தாலும் இந்த கஷ்டத்திற்கு தீர்வு காண வேண்டும் என்றால் இந்த விஷயத்தை பேசி தான் ஆக வேண்டும். நாம் அனுபவிப்பதையெல்லாம் அனுபவிக்காமல், இந்த உலகத்தை விட்டு அவ்வளவு எளிதில் உயிர் பிரியாது என்று சொல்லுவார்கள். இந்த வார்த்தைக்கு இணங்க சில பேர், இறுதி காலத்தில் ரொம்பவும் கஷ்டப்படுவார்கள். உதாரணத்திற்கு பாத்ரூம் டாய்லெட் கூட அவர்கள் படுக்கையிலே போய் விடுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு சேவை செய்ய வீட்டில் இருப்பவர்கள் ஒருபோதும் கஷ்டப்படவே கூடாது. முகம் சுழிக்கக்கூடாது. அவர்களுக்கான சேவையை கட்டாயம் செய்து தான் ஆக வேண்டும். ஏனென்றால் நாளைக்கு நமக்கு எந்த நிலைமையோ அது அந்த ஈசனுக்கு தான் தெரியும்.

- Advertisement -

கர்ம வினையால் வரும் கஷ்டத்தை போக்க:
இப்படி மிகவும் துன்பப்படுபவர்களுக்கு இருக்கக்கூடிய கர்ம வினைகளை குறைக்க என்ன செய்வது. ஒரே ஒரு வழி நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. உயிரோடு இருப்பவர்களை, உயிர் மறிக்க இந்த பரிகாரம் சொல்வதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். ரொம்பவும் இறுதி நேரத்தில் கஷ்டப்படுபவர்களுக்காக இதை நாம் செய்வதில் ஒன்றும் தவறு கிடையாது. துளசி தீர்த்தம். ஒரு நாளைக்கு 7 வேளை இந்த துளசி தீர்த்தத்தை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

ஒரு செம்பு பாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றி, ஐந்துலிருந்து ஆறு துளசி இலைகளை போட்டு, அந்த தீர்த்தத்தை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு 7 முறை குடிக்கும் போதும், அந்த பாத்திரத்தில் புதிய தண்ணீர் தான் ஊற்ற வேண்டும். புதிய துளசி இலைகள் தான் போட வேண்டும். பழைய தண்ணீரை கொடுக்கக் கூடாது. இப்படி கொடுத்தால் அவர்களுடைய பாவங்கள் தீர்ந்து கர்ம வினைகள் குறைந்து, அவர்கள் மோட்சத்தை அடைவதற்கு உண்டான வழியை அந்த எம்பெருமான் காட்டிக் கொடுப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இது எல்லாமே கர்ம வினையின் பயனால் உண்டாக்கப்படுவது தான். இப்படிப்பட்டவர்கள் யாராவது உங்கள் வீட்டில் இருந்தால் அவர்களை கஷ்டப்படுத்தாதீர்கள். அவர்களை திட்டவும் செய்யாதீர்கள். அவரை கடவுளுக்கு நிகராக நினைத்து சேவைகள் செய்து, அவர்களுக்கு இந்த துளசி தீர்த்தத்தை கொடுத்து பாவ கணக்குகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சிவன் கோவிலுக்கு இந்த ஒரு பொருளை தானமாக வாங்கி கொடுத்தால் போதும். சிவபெருமானின் பரிபூரண ஆசீர்வாதம் கிடைத்துவிடும்.

வேறு வழியே இல்லை இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு ஆன்மீகம் நமக்கு எளிமையாக சொல்லப்பட்டுள்ள குறிப்புகளில் இதுவும் ஒன்று. நம்பிக்கை உள்ளவர்கள் பயன்படுத்தி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -