முடி கொட்டிய இடத்தில், உடனடியாக மீண்டும் இரண்டு மடங்கு வேகமாக முடி வளர வேண்டுமா? இந்த 1 கீரை அதற்கு போதுமே.

- Advertisement -

நாம் எல்லோருக்கும் முடி மெலிந்து போவதற்கு ஒரு காரணம், முதல் காரணம் என்ன தெரியுமா. முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளராமல் இருப்பதுதான். முடி உதிர்வது இயற்கை. எல்லோருக்கும் அது நடக்கத்தான் செய்யும். ஆனால், முடி உதிர்ந்த பிறகு அந்த இடத்தில் மீண்டும் புதிய முடிகள் உறுதியாக வளர வேண்டும். புதிய முடி வளர்ந்த உடனேயே, அந்த முடி உதிர்ந்து விட்டாலும் நமக்கு எந்த பிரயோஜனமும் இருக்காது. முடி உதிர்ந்த இடத்தில் வலுவாக மீண்டும் முடியை வளர செய்யக்கூடிய ஒரு கீரை ஹேர் பேக்கை தான் இந்த அழகு குறிப்பு நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

முடி விழுந்த இடத்தில் சீக்கிரம் முடி வளர கீரை ஹேர் பேக்:
முதலில் இந்த ஹேர் பேக்குக்கு நமக்கு முடக்கத்தான் கீரை தேவை. மூட்டு வலி வராமல் இருக்க, இந்த கீரையை சாப்பிடுவார்கள். கிராமப்புறங்களில் இது சுலபமாக கிடைத்துவிடும். நீங்கள் நகர்ப்புறங்களில் இருந்தால் கீரை கடைக்காரரிடம் சொல்லி வைத்தால் கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள்.

- Advertisement -

முடக்கத்தான் கீரையை தண்ணீர் ஊற்றி நன்றாக அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். 2 ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் போட்டு, 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தம் செய்த முடக்கத்தான் கீரை 1 கைப்பிடி அளவு, ஊறவைத்த வெந்தயம் தண்ணீரோடு 2 ஸ்பூன் இதோடு போட்டுக் கொள்ளவும். இதை அரைக்க தேவையான அளவு தயிர் ஊற்றிக் கொள்ளவும். தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

இந்த மூன்று பொருட்களை விழுதாக அரைத்து ஒரு காட்டன் துணியில் நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது சூப்பரான ஒரு பேக் நமக்கு கிடைத்திருக்கும். இந்த பேக்கோடு கரிசலாங்கண்ணி பவுடர் 1 ஸ்பூன் போட்டு, விளக்கெண்ணெய் 1 ஸ்பூன் ஊற்றி, நன்றாக கலந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் நமக்கு தேவையான பேக் தயார். இந்த பேக்கை தலையில் போட வேண்டும். இந்த பேக்கை தலையில் போட்டால் கருகருவென வலிமையோடு புதிய முடி வளரும். உங்களுடைய ஸ்கேல்பை ஆரோக்கியமாக மாற்றும்.

- Advertisement -

தலையில் சிக்கை முழுமையாக எடுத்துவிட்டு தேங்காய் எண்ணெய் வைத்து அதன் பிறகு இந்த ஹேர் பேக்கை முதலில் நன்றாக வேர்க்கால்களில் படும்படி அப்ளை செய்து விட்டு, பிறகு நுனி முடி வரை போட்டுக் கொள்ளவும். 20 லிருந்து 30 நிமிடங்கள் பேக் நன்றாக தலையில் ஊரியதும் மயில்டான ஷாம்பு போட்டு, தலைக்கு குளித்துவிட்டு பாருங்கள். உங்களுடைய முடி எவ்வளவு சில்கியாக சூப்பராக இருக்கிறது என்பதை நீங்களே உணர்வீர்கள். கையில் தொடும்போதே முடி அப்படி சாப்பிட்டாக இருக்கும். டிரையாக இருக்கக்கூடிய உங்கள் முடி ஈரத்தன்மையோடு ரொம்ப ரொம்ப அழகாக ஸ்ட்ரைட்னிங் செய்தது போல மாறிவிடும்.

இதையும் படிக்கலாமே: குச்சி குச்சியாக இருக்கும் உங்க முடியை கட்டை போல மாற்ற இந்த ஒரு சீரம் இருந்தா போதும். நரையே வராம முடியை நல்லா கருகருன்னு நீண்டு அடர்த்தியாக வளர வைக்க இது ஒண்ணு போதும்.

இந்த பேக்கை வாரத்தில் இரண்டு நாள் போடலாம். இந்த பேக்கை போடும்போது புது டிரஸ் போட்டுக்காதீங்க. இந்த ஹேர் பேக்கோட கறை துணியில் பட்டு விட்டால் அவ்வளவு எளிதில் போகாது. புது துணியாக இருந்தால் வீணாக போய்விடும். அதையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த எளிமையான அழகு குறிப்பு பிடிச்சிருந்தா ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம். ஒருமுறை போட்ட உடனே பலனை எதிர்பார்க்கக் கூடாது. நிச்சயமாக மூன்று மாதம் தொடர்ந்து, வாரத்தில் இரண்டு நாள் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தி வரும் போது நம்ப முடியாத முடி வளர்ச்சியை பெறுவீர்கள்.

- Advertisement -