குச்சி குச்சியாக இருக்கும் உங்க முடியை கட்டை போல மாற்ற இந்த ஒரு சீரம் இருந்தா போதும். நரையே வராம முடியை நல்லா கருகருன்னு நீண்டு அடர்த்தியாக வளர வைக்க இது ஒண்ணு போதும்.

long hair tips
- Advertisement -

முடி நீண்டு கருகருன்னுவென்று வளர வேண்டும் என ஆசைப்படாத பெண்களே இல்லை. அதே போல் ஒரு முடி கூட வெள்ளையாகாமல் இருக்க வேண்டும் என்ற நினைக்காத வரும் இல்லை. இது ஆண் பெண் என்ற பேதம் இல்லாமல் அனைவரும் ஆசைப்படும் ஒன்று தான். இப்படி அனைவரும் வளர்க்க ஆசைப்படும் முடியை அதிக சிரமம் இல்லாமல் நாம் வீட்டின் சமையல் கட்டில் இருக்கும் இரண்டே பொருளை வைத்து முடி வளர்வதற்கான சீரத்தை எப்படி தயார் செய்யப் போகிறோம் என்பதை பற்றி இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தலைமுடி வேகமாக வளர சீரம்:
இந்த சீரம் தயாரிக்க நமக்கு ஒரு கைப்பிடி அளவு சின்ன வெங்காயம், ரெண்டு ஸ்பூன் டீத்தூளும் மட்டும் இருந்தால் போதும் எளிமையான முறையில் இந்த சீரத்தை தயாரித்து விடலாம். முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு தண்ணீர் எடுத்து அதில் டீத்தூளை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் அதற்கு அடுத்து சின்ன வெங்காயத்தை நன்றாக சுத்தம் செய்து தோலுடன் அப்படியே ஒன்று இரண்டாக நசுக்கி கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து ஒரு கப் தண்ணீர் அரை கப்பாக மாறும் வரை கொதித்த பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த தண்ணீரை நன்றாக ஆற வைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பொதுவாகவே தலைமுடி பிரச்சனை என்பது ஊட்டச்சத்து குறைபாடு, இரும்புச்சத்து, ஹார்மோன் பிரச்சனை போன்றவற்றால் வரும் ஒரு சிலருக்கு அதிகமான மன உளைச்சல் ஆனாலும் இந்த தொந்தரவு இருக்கக் கூடும். இந்த முடி உதிர்வு பிரச்சனைக்கு சின்ன வெங்காயம் மிகவும் அருமையான ஒரு தீர்வாக அமைகிறது. இந்த சின்ன வெங்காயத்தின் சாறில் இருக்கும் சல்பர் நம் தலைமுடியில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன் தலையில் இருக்கும் பூச்சி வெட்டு இறந்து செல்களை எல்லாம் அழிக்க சிறந்த ஆன்டிபயாட்டிக்காக செயல்படுகிறது.

அதே போல் இதில் சேர்த்து இருக்கும் டீத்தூள் முடியின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை கொடுக்கிறது. இதனால் முடியின் வேர்க்கால்களில் இருந்து வளர்ச்சியை அதிகமாக தூண்டி முடி வேகமாகவும் கருமையாகவும் நீண்டு வளர உதவி செய்கிறது.

- Advertisement -

இந்த சீரத்தை நீங்கள் தலைக்கு குளிக்க அரை மணி நேரத்திற்கு முன்பாக உங்கள் முடியின் வேர்கால்களில் படும்படி தடவிய பின்பு வட்ட வடிவில் சிறிது நேரம் மசாஜ் செய்த பின்பு அப்படியே விட்டு விடுங்கள். அரை மணி நேரம் கழித்த பிறகு மையில்டான ஷாம்பு அல்லது சீயக்காய் சேர்த்து குளித்து விடுங்கள் போதும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்தாலே போதும். உங்களுக்கு இருக்கும் முடி உதிர்வு பிரச்சனை, இளநரை, பொடுகு போன்ற எந்த தொந்தரவு உங்களை நெருங்காமல் முடி நன்றாக நீண்டு வளரும்.

இந்த சீரத்தை 15 நாட்களுக்கு ஒரு முறை தயாரித்து பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தலைக்கு தேய்க்க சிறிது நேரத்திக்கு முன்பு வெளியில் எடுத்து வைத்து விட்டு, அதன் பிறகு பயன்படுத்தி வரும் போது இது எந்த ஒரு பக்க விளைவையும் ஏற்படுத்தாது. தலை முடி வளர்வதற்காக நாம் தேவையில்லாமல் கண்ட கண்ட கெமிக்கல்களை பயன்படுத்துவதை விட இது போல ஊட்டச்சத்து மிக்க அதே நேரத்தில் பக்க விளைவு ஏதும் இல்லாத முறைகளை பின்பற்றுவது சிறந்தது.

இதையும் படிக்காலமே: கேரளா பெண்களின் கூந்தல் ரகசியம்! கரு கரு என்று நீளமாக அவர்களின் முடி இருக்க காரணம் என்ன? இனி உங்கள் தலைமுடியை எலிவால் மாதிரி இருக்குன்னு யாருமே சொல்ல மாட்டாங்க!

இந்தக் குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் இது போன்ற முடி பிரச்சனை உங்களுக்கும் இருந்தால் இந்த சீரம் முறையை பயன்படுத்தி பாருங்கள். முடி உதிர்வு, இளநரை பொடுகு அனைத்தும் நீங்கி முடி நன்றாக வளர ஆரம்பிக்கும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -