கொத்து கொத்தா முடி உதிருதா? தலைக்கு குளிக்கிறதுக்கு முன்னாடி இந்த தண்ணீரை தலையில் ஊற வையுங்க! கையில பிடிக்க முடியாத அளவுக்கு முடி அடர்த்தியாக வளரும், ஆண்கள் கூட செய்யலாம்.

hair-fall-wash
- Advertisement -

இன்றைய நவீன உலகில் தலைமுடி உதிர்வது என்பது மிகப்பெரிய பிரச்சினையாக முளைத்து வருகிறது. சுற்றுச்சூழல், உணவு பழக்க முறை மட்டுமல்லாமல் தலைமுடி உதிர்வதற்கு நிறையவே காரணங்கள் உண்டு. கொத்துக் கொத்தாக தலைமுடி உதிரும் பொழுது மனம் பதை பதைக்கும். என்னவெல்லாம் செய்து பார்த்தேன், எதுவும் வேலைக்கு ஆகலை என்று நினைக்கிறவங்க, அப்படியே இருபது வருடம் பின்னாடி போங்க!

20 வருடத்திற்கு முன்னர் அந்த காலத்தில் எல்லாம் தலைக்கு தேய்க்கிற எண்ணெயும், தலைக்கு தேய்க்க ஷாம்பூவும் இந்த அளவிற்கு விற்பனையானது கிடையாது. வீட்டில் அரைத்த சீயக்காய், அரிசி வடித்த கஞ்சியும் தான் தலைக்கு தேய்த்து குளிப்பார்கள். சாதாரண தேங்காய் எண்ணெயை மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள். அப்போதும் முடி கொட்டும் பிரச்சனை இருந்துள்ளது ஆனால் இந்த அளவிற்கு தீவிரமாக இருந்ததில்லை. முடி கொட்டும் பிரச்சினை அப்பொழுது இருப்பவர்கள் இயற்கையாக கிடைக்கக்கூடிய மூலிகைகளை மட்டுமே பயன்படுத்திய அதனை சரி செய்து கொண்டனர்.

- Advertisement -

அதே முறையை தான் நாம் இப்பொழுதும் கையாள போகிறோம். இயற்கையாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகைகளை வைத்து அதன் சாற்றை எடுத்து பயன்படுத்த இருக்கிறோம். இது சாதாரணமாக எல்லோருடைய வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் கிடைக்கக்கூடிய பொருட்கள் தான், எனினும் இதனுடைய மதிப்பு நமக்கு புரியாமல் போய்விட்டது. கொத்து கொத்தாக உதிரும் முடியை மெல்ல மெல்ல தடுத்து நிறுத்தி, புதிய முடியை முளைக்க செய்து கையில் பிடிக்க முடியாத அளவிற்கு அடர்த்தியாக கருகருன்னு வளர செய்ய நாம என்ன செய்யப் போகிறோம்? என்பதை தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

தலை முடி வளர மூலிகை தண்ணீர் செய்ய தேவையான பொருட்கள்:
செம்பருத்தி பூ – 5, சின்ன வெங்காயம் – 5, கருவேப்பிலை – 1 கைப்பிடி, பெரிய நெல்லிக்காய் – 5, கற்றாழை – 1 பெரிய மடல், வேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

தலைமுடி வளர மூலிகை தண்ணீர் செய்முறை விளக்கம்:
செம்பருத்தி பூவை விட சிறந்த கூந்தல் வளர்ச்சியை எந்த மூலிகையும் கொடுத்து விட முடியாது. எனவே ஐந்து செம்பருத்தி பூவை எடுத்து கழுவி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஐந்து சின்ன வெங்காயம் தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு பிரஷ் ஆன கருவேப்பிலை இலைகளையும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

பெரிய நெல்லிக்காயில் தலை முடியை வேரிலிருந்து வலுவாக்கக்கூடிய சக்தி உண்டு. ஐந்து பெரிய நெல்லிக்காயை எடுத்து விதைகளை விட்டுவிட்டு சதை பகுதிகளை துண்டு துண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பொடுகு, பேன், புழுவெட்டு போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க ஒரு கொத்து மட்டும் வேப்பிலை இலைகளை உருவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் கடைசியாக ஒரு பெரிய மடல் கற்றாழையை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து அதில் இருக்கும் ஜெல் பகுதியை மட்டும் வழித்து நன்கு கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இவை எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து கொஞ்சம் கூட தண்ணீர் ஊற்றாமல் நைஸ் ஆக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்து எடுத்த இந்த விழுதை ஒரு பெரிய வடிகட்டியில் போட்டு வடிகட்டி கொள்ளுங்கள். இதில் இருக்கும் சாறு மட்டும் தான் நமக்கு தேவை. எந்த அளவிற்கு சக்கையாக பிழிய முடியுமோ அந்த அளவிற்கு ஒரு மெல்லிய காட்டன் துணியில் போட்டு நன்கு சாற்றை மட்டும் பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு ஏர்டைட் பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்தால், ஒரு மாதம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். ஆண், பெண் யார் வேண்டுமானாலும் இதை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே:
நமக்கு மட்டும் முடியே வளரலையேன்னு கவலையா இருக்கா, அப்ப இனி தலைக்கு குளிக்கும் போது இத மட்டும் ட்ரை பண்ணுங்க, அப்புறம் நமக்கா இவ்ளோ முடின்னு ஆச்சர்யப்படுவீங்க.

இயற்கையாக கிடைக்கக்கூடிய சாதாரண மூலிகை பொருட்கள், அதில் இருக்கும் இந்த அற்புதமான சாறு தலைக்கு குளிக்கும் அரை மணிக்கு முன்னர் தலை முழுவதும் வேர்கால்களில் இருந்து நுனி வரை எல்லா இடங்களிலும் படும்படி நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே தேவையான அளவிற்கு பிரிட்ஜில் இருந்து வெளியில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து பின்னர் சாதாரணமான சீயக்காய் அல்லது கெமிக்கல் அதிகம் சேர்க்காத ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து வாருங்கள். ஒரு மாதத்திலேயே நல்ல ரிசல்ட் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். வாரம் இரண்டு முறை இதை தாராளமாக பயன்படுத்தலாம்.

- Advertisement -